TAMIL MUSLIM READER - தமிழ் முஸ்லிம் திரட்டி
"கொடுக்கல் - வாங்கல்"
மெளலவி. இபுறாஹிம் பைஜி அவர்கள்
Al-Sheikh. Ibrahim Baiji
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
தமிழ் முஸ்லிம் மீடியா
இங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
TAMIL MUSLIM READER - தமிழ் முஸ்லிம் திரட்டி
"கொடுக்கல் - வாங்கல்"
மெளலவி. இபுறாஹிம் பைஜி அவர்கள்
Al-Sheikh. Ibrahim Baiji
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
யாருக்காக கைதாகின்றார்கள்? கணவனுக்காகவா? எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்?
போராட்டமா? விருந்தா?
கட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்
நமது முற்றம் ஏப்ரல் 2007.
அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.
உண்ணாவிரதப் போராட்டமா? நடை பயணமா? ஊர்வலமா? எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.
பெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.
ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.
சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
கொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.
சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!
''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது"" என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.
''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
''அலீயே! (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல!"" (திர்மீதி).
கணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து...? எத்தன பேரு இடிப்பான்? எத்தன பேரு தடவி பார்ப்பான்?
அண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள்? வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது? அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா?.
பூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் - இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்களையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா? மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.
டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.
''இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா"" என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.
அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?
''துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்"" என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?
''எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்"";. என்பது நபிகளாரின் ஹதீஸ்.
அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி...இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?
இவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா? அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா?
''அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்"" என்பது நபிகளின் கட்டளை!
அந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து...கணவர்களோ வெளிநாட்டில்...இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்?
இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும்? எத்தனை பெண்களால் ஓடமுடியும்? எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும்? எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள்? எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்?
மூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?
யார் அடிப்பட்டால் என்ன? யார் செத்தால் என்ன? தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள்? அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.
இப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.
தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.
ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்..
அதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல! மனித நாகரீகமுமல்ல.
இது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.
இதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.!
இஸ்லாம் முஸ்லிம்
கைப்புள்ள கமென்ட்:
ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...மாநாட்டு சமயத்துல மறுபடியும்ளடா
கெளம்பிட்டாய்ன்க....

A hospital worker shows journalists the bodies of four children after their house was shelled by Israeli tanks in the Beit Hanoun neighborhood of Gaza Strip on Monday while they were having their breakfast. (Reuters) 

குறிப்பு : இந்நிகழ்ச்சியின் வீடியோ நமது தமிழ் முஸ்லிம் மீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
"T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்?"
அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
Al-Sheikh. Jamal Mohamed Madhani.
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார். குறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.
தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER
.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.
.
"மருத்துவர் இராமதாசு அவர்களின் உரை"
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
சத்திய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் டென்மார்க் மக்கள்!
(Tamil Text+English Video)
எழுதியவர்/உரை:அபூ அரீஜ்
ஒரு சில விசமிகளால் நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச்சித்திரங்களை வரைந்த டென்மார்க் நாட்டில், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இறைவனருளால் அதி வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவதாக டென்மார்க்கைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
இவர் கூறுகையில் இந்த மாதிரியான கேலிச்சித்திரங்களை வரைந்தது மிகச் சொற்பமானவர்களே! நாம் எங்கு சென்றாலும் இது போன்ற இஸ்லாத்தின் எதிரிகளைக் காணமுடியும்!
இறைவன் அவர்களின் இத்தைகய கீழ்த்தரமான சூழ்ச்சிகளை முறியடித்து முஸ்லிம்களுக்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்துக் கொடுத்ததாகக் கூறுகிறார். மேலும் இவர் கூறுகையில், இஸ்லாத்தின் எதிரிகளான இவர்களின் திட்டங்களை விட அல்லாஹ்வின் திட்டம் மிகப் பெரியது என்றார்.
இதன் விளைவாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் முன் எப்போதும் பார்த்திராத அளவிற்கு இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருப்பதாக இவர் கூறுகிறார். இவர் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்னால் தாம் இஸ்லாத்தைத் தழுவும் போது டென்மார்க்கைச் சேர்ந்த குடிமக்களாகிய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பத்து அல்லது பதினைந்து நபர்கள் இருந்ததாகவும் இறைவனருளால் தற்போது அந்த எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் பெருவிட்டதாகவும் கூறுகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் நான்கு பேர் தம்முடைய அலுவலகத்திற்கு வந்து ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்களைக் கேலிச் சித்திரம் வரைந்து, இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதன் மூலம் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிடப் -பட்டிருந்த அவர்களுடைய சூழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் அல்லாஹ்வின் உதவியால் உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து விட்டதாகக் கூறுகிறார்.
இவர் கூறுகையில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஒவ்வொரு நாட்டில் வாழக்கூடியவர்களின் மொழிகளில் இஸ்லாம் எடுத்துரைப்பட வேண்டும் என்றும் இது மிக மிக இன்றியமையாத ஒன்றாக நம் முன்னே இருக்கின்றது என்றும் கூறினார்.
வீடியோ இணைப்பு : ஆங்கிலம்
http://www.suvanath endral.com/ avpage/towardsis lam/denmarkpeopl eV.html
தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER
.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ மருத்துவர். இராமதாசு அவர்கள் உட்பட பலர் பேசிய பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்..
.
"அண்ணன் திருமாவளவன் அவர்களின் உரை"
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
அண்ணன் திருமாவளவன் அவர்கள்தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER
.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.
.
"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி"
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO


வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.
இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!
இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?
தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?
(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)
அன்புடன்,
அபூ முஹை
அனுப்புனர்:
நன்றி : விமர்சனம் - விளக்கம்
அல்ஜீபைல் : 18-04-2008 வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியா கிழக்கு மாகனம் அல்ஜீபைல் நகரில் செயல்படும் "இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்" (ஜீபைல் தஃவா நிலையம்) சார்பாக சார்பாக மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடத்தப்பட்டது.
காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்களின் உரைகளுடன் இரவு சுமார் 7.00 மணி வரை நடந்தது. இதில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி சிறப்பித்தனர்
சகோதரர் முகம்மத் ஸமீம் (ஸீலானி ) அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய மாநாட்டில் முதல் அமர்வில் தலைமை உரையை சகோ. முகம்மது அஸ்ஹர் (ஸீலானி) அவர்கள் நிகழ்த்தினார்கள்
அதன் பின்னர் ரியாத்தில் இருந்து வந்திருந்த அழைப்பாளர் அவர்கள் "நபிமார்களும் அழைப்பு பணியும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் சிறப்புரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பார்வையாளர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டது.

அதன் பின்னர் அதன் பின்னர் " அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தில்" இருந்து வருகை தந்திருந்த சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் "ஹராம்-ஹலால் பேணுவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அதன் பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழச்சி நடத்தப்பட்டது.பின்னர் ஜீம்ஆ தொழுவதற்கான இடைவுளை விடப்பட்டது.
பின்னர் சுமார் 12.20 மணி அளவில் இரன்டாவது அமர்வு சகோ. ஜமால் முகம்மது மதனி அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமாகியது. இந்த அமர்வில் இலங்கையில் இஐந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த சகோ. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் "ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் பின்னர் மதிய உணவுக்கான இடைவேளை விடப்பட்டு "அல்ஜீபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தின்" சார்பில் வந்திருந்த அணைவருக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.
இம்மாநாட்டின் மூன்றாவது அமர்வாக சுவையான பட்டி மன்றம் ஒன்று நடத்தப்பட்து, "தற்கால முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரனம்...1) முஸ்லிம்களே 2) அந்நியர்களே என்ற தலைப்பில் சகோ. அலாவுத்தீன் பாக்கவி அவர்கள் தலைமை தாங்கி தனது சுவையான தமிழ் மொழியில் நடத்த இரு அனிகளாக பிறிந்து சகோ.ஜமால் முகம்மது மதனி, சகோ, ளாபிர் அவர்கள், சகோ. மன்சூர், சகோ. அலி அக்பர் உமரி என சுவைபட தங்கள் தரப்புக்காக வாதாடினார்கள்.
மகிழ்வுடன் நடந்த இந்த பட்டிமன்றத்திற்கு பிறகு மஃரிப் தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டது பின்னர் கேள்வி பதில்கள் நிகழ்ச்சி உட்பட பல போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக சகோ. ழமீருல் ஹஸன் அவர்கள்(மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரை வழங்க இந்த ஒரு நாள் மாநாடு இனிதே நிறைவுற்றது.
இம்மாநாட்டில் சவுதி அரேபியாவின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 1400 க்கும் மேற்ப்பட்ட தமிழ் பேச்கூடிய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சியின் இடையிடையே சுவையான தேனீர் வழங்கப்பட்டது, காலையில் அனைவருக்கும் சிற்றுன்டியுடன் தேனீரும், பின்னர் மதியம் சுவையான உணவும் பறிமாறப்பட்டன. மாநட்டிற்கான ஏற்பாடுகளை "இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்" (ஜீபைல் தஃவா நிலையம்) செய்திருந்தது மாநாட்டின் பணிகள் அணைத்தையும் அல் ஜீபைல் தஃவா நிலையத்தின் தன்னார்வ தொண்டர்கள் மிக்ச சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு : சகோ. அபு இஸாரா / முகவைத்தமிழன்
ஜெத்தா-ஏப்ரல்16, இவ்வாண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர்.ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளரைச் சந்தித்து விளக்கினார்.
மேலப்பாளையம் I.P.P .சார்பில் 06.04.2008 அன்று மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவில் வைத்து மார்க்க விளக்கப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேர்க்கிளம்பி J.A.Q.H இமாம் யாஸின் இம்தாதி, சமூகக் கொடுமைகள் என்ற தலைப்பிலும், மௌலவி K.S. காசீம் பிர்தௌசி, இழிவுபடுத்தப்படும் இறை இல்லங்கள் என்ற தலைப்பிலும், மீரான் தாவூதி முஸ்லிம்களும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து பயனடைந்தார்கள்.
ஏற்பாடுகளை நகர த.மு.மு.க.தலைவர் K.S..ரசூல் மைதீன், செயலாளர் மைதீன் பாதுஷா, பொருளாளர் காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், E.M. அப்துல் காதர், தக்வா ஜமாத் தலைவர் இனாயத்துல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி : நெல்லை உஸ்மான்
"இறுதி நாளும் இன்றைய மனிதர்களும்"
அஷ்ஷேய்க். முகம்மது நூஹ் மஹ்லரி அவர்கள்
Al-Sheikh. Nooh Mahlari
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO