Wednesday, April 30, 2008

கொடுக்கல் - வாங்கல் -மெளலவி. இபுறாஹிம் பைஜி

TAMIL MUSLIM READER - தமிழ் முஸ்லிம் திரட்டி

"கொடுக்கல் - வாங்கல்"

மெளலவி. இபுறாஹிம் பைஜி அவர்கள்

Al-Sheikh. Ibrahim Baiji


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மெளலவி இபுறாஹிம் பைஜி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

போராட்டமா? விருந்தா? - ஆமினா மைந்தன்(நமது முற்றம் ஏப்ரல் 2007)

இறைவனின் திருப்பெயரால்

யாருக்காக கைதாகின்றார்கள்? கணவனுக்காகவா? எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்?

போராட்டமா? விருந்தா?
கட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்
நமது முற்றம் ஏப்ரல் 2007.

அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.

உண்ணாவிரதப் போராட்டமா? நடை பயணமா? ஊர்வலமா? எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.

பெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.

ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

கொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!


''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது"" என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.

''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.



பெண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து போராட்டம் நடத்த இஸ்லாம் சொல்லவில்லை. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஆண்களிடம் தான் கொடுத்திருக்கிறான். ஆனால் அரசியல் லாபங்களுக்காக, தங்களுடைய சுயநலத்திற்காக முஸ்லிம் பெண்களை முச்சந்தியில் நிறுத்தி, ''இது தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி"" என்று மார்தட்டி சமுதாயத்தின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் சில அநியாயக்காரர்கள்.

''அலீயே! (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல!"" (திர்மீதி).



இது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ். ஆனால் என்ன நடக்கிறது?
பருவ வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்களெல்லாம் எப்போதடா வெளியே சாடலாம் என்று காத்திருந்து, தங்கள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் ரோட்டுக்கு வந்து கொடி பிடிக்கின்றனர். பர்தா தங்களின் பாதுகாப்பிற்காக அல்ல, வெளியே பாய்வதற்காக என்பதை இவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

கணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து...? எத்தன பேரு இடிப்பான்? எத்தன பேரு தடவி பார்ப்பான்?


அண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள்? வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது? அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா?.

பூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் - இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்களையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா? மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.
டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.

''இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா"" என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.

அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?



''துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்"" என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?

''எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்"";. என்பது நபிகளாரின் ஹதீஸ்.



வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவன் அனுப்பித் தருகின்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களை வீதிக்குப் போராட வருகின்ற அம்மணிகள் பீய்ச்சிக் கொண்டு வருவது யாருக்காக?

அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி...இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?



இவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா? அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா?

''அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்"" என்பது நபிகளின் கட்டளை!


குயில்கள் கூவினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்?

கூடி நிற்கின்ற கூட்டத்தின் மத்தியில் அச்சம், நாணம், அடக்கம் அத்தனையும் துறந்து ஆரவாரக் கூச்சலிடுகின்ற இந்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்து இபிலீஸ் சந்தோஷப்பட மாட்டானா?

கட்டாயம் சந்தோஷப்படுவான்!

இந்த பெண்களை அழைத்து வந்த இப்லீஸ்களும் சந்தோஷப்படுவார்கள். ''இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க"" என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.

2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்னால் முஸ்லிம்கள் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து போலிஸார் தடியடி நடத்தினார்கள். ஆலிம்கள் உட்பட ஏராளமானவர்கள் தடகள பந்தயத்தில் கலந்து கொண்டவர்களைப்போல தலைதெறிக்க ஓடினார்கள். பலர் அடி பட்டார்கள், ஓட முயாமல் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினார்கள். ஆப்தீன் என்ற முதியவர் ஓடிவரும்போது ஒரு காரில் மோதி படுகாயம் அடைந்து சில நாட்களில் இறந்து போனார். ஆர்ப்பாட்டம் நடந்த இடம் போர்க்களமாக காட்சி தந்தது. வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று 80 பேர் மீது குற்றம் சுமத்தப்படடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இன்று வரை அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.

அந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து...கணவர்களோ வெளிநாட்டில்...இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்?


இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும்? எத்தனை பெண்களால் ஓடமுடியும்? எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும்? எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள்? எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்?


மூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

யார் அடிப்பட்டால் என்ன? யார் செத்தால் என்ன? தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள்? அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.
இப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.

தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.


தங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.


ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்..



அதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல! மனித நாகரீகமுமல்ல.
இது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.

இதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.!

இஸ்லாம் முஸ்லிம்

Tuesday, April 29, 2008

ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...

அழைப்பு பணியில் அதிரை (ஜோக்கர்) ஃபாருக்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பிரிவினை வாத கும்பலை சேர்ந்த ஃபாருக் என்பவர் இவர் எதை அழைத்தார் என்று தெறியவில்லை தனது பெருக்கு முன்னால் அழைப்பு பணியில் அதிரை ஃபாருக் என்று போட்டு கொள்கின்றார். பெரும்பாலும் இவரது மின்னஞ்சல்களை ஏதாவது ஒரு பென்னின் பெயரில் தான் ஃபார்வர்ட் செய்து வரும் (கவர்ச்சிக்காக இவர்களின் செட் அப் ஐடி) அதிராம் பட்டினத்தை சேர்ந்த இவர் கடந்த 20-04-2008 அன்று எப்போதும் போல் தனது பெயரிலும், கவாச்சிக்காக கிரியேட் செய்து வைத்துள்ள பென்கள் ஐடிகளிலும் இருந்தும் இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் நமது பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. (இங்கு கிளிக் செய்து அந்த மின்னஞ்சலை டவுன்லோட் செய்யவும்)

கோவில்களுக்கு செல்லும் இஸ்லாமிய பென்கள் என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த மின்னஞ்சலில் நமது இணையத் தளத்தில் இருந்து திருடப்பட்ட பல தலைவர்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் புகைப்படங்களும், சில அமைப்புகளின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. சரி கோவிலுக்கு செல்லும் இஸ்லாமிய பென்களுக்கும் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிப்போய் ததஜ வின் ஏவி விடப்பட்ட புதிய "அது" வான் "அழைப்பு பணியில் அதிரை ஃபாருக்கின்" மின்னஞ்சலை வாசித்தபோது அதில் குறிப்பிட பட்டிருந்த சாரம்சம் இதுததான்.

அதாவது அவர் இணைத்திருந்த புகைப்படத்தில் இருந்த அணைத்து தலைவர்களும், மார்கக் அறிஞர்களும், அமைப்புகளும் குராபிகளோடு பைஅத் செய்து கொண்டு ஏகத்துவத்தை பரப்ப தவறிவிட்டர்கள் என்றும் இன்று இஸ்லாமிய பென்கள் கோவில்களுக்கு செல்வதற்கு காரனம் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, சவுதி அரேபியாவில் அழைப்பாளராக பணிபுறியும் பிரபல மார்க்க அறிஞர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, மற்றாரு மார்க்க அறிஞர் ஹாமித் பக்ரி, முஸ்லிம் லீக்கை தனது வீட்டு கொல்லையில் கட்டிபோட்டு யுனானி மருந்து கொடுத்து வளர்க்கும் ஹக்கிம் டாக்டர் செய்யது சத்தார், மனித நீதி பாசறை என்ற அமைப்பினர் என தமிழகத்தில் தான் சார்ந்திருக்கும் ததஜ என்ற கலகக் கும்பலை தவிற அணைத்து அமைப்பினரும்தான் என்றும் எழுதியிருந்தார்.

இதில் பெருங்கூத்து என்னவென்றால் தமுமுக வினர் சந்தனக்கூட்டுக்கு நோட்டிஸ் அடித்தார்கள் என்று நடந்து முடிந்து விள்கம் தரப்பட்ட ஒரு பழைய விசயத்தை குறிப்பிட்டிருந்தார். அந்த விசயத்திற்கு தமுமுக வினர் தங்கள் அமைப்பின் சார்பில் நேரடியாக அறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்திவிட்டார்கள் அதைக்கூட வாசிக்க மறந்து விட்டார் இந்த அதிகம்படித்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக்.

கட்டுரையின் முடிவில் ஒரு ஜோக்கடித்திருந்தார் பாருங்கள் அதுதான் தாங்க முடியல, உலகிலேயே ஏகத்துவத்தை எடுத்து சொல்லும் ஒரே அமைப்பு ததஜ தான் என்பது பூல் முடித்திருந்தார் அதைப் படித்துவிட்டு நானும் எனது நன்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தோம். இறுதியில் இந்த அதிராம்பட்டினம் (அழைப்பு பணி??) ஃபாருக் ஜோக்கர் ஃபாருக் ஆகியதுதான் மிச்சம்.

சரி, இப்ப நான் என்ன சொல்ல வர்ரேன் என்றால், தமுமுக வினரை குறிப்பிட்டிருந்தது போல் தமிழகத்தில் தருதலை ஜமாத் தலைவர் பி.ஜே என்று ஏகத்துவம் ஆரம்பமாகியது என்று சொல்கின்றாரோ அன்றிலிருந்து ஏகத்துவத்தை சொல்லி வரும் தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞரும், சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல இஸ்லாமிய அழைப்பு மையங்களில் பணி புறிந்து தற்ச்சமயம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மைத்தில் சேவையாற்றி வருபவருமான மெளலவி. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதியின் புகைப்படத்தையும் போட்டு அவரும் தமிழகத்தில் குராபிகளுடன் அக்ரிமென்ட் செய்து கொண்டு இஸ்லாமிய பென்கள் கோயில்களுக்கு செல்வதற்கு காரனமாகிவிட்டார் என்று எழுதியிருந்தது இந்த ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.

இவர் குறிப்பிட்டிருந்த மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் நான் வசிக்க கூடிய அல்கோபர் என்ற பகுதியிலேயே தங்கியிருந்து இஸ்லாமிய ஊழியம் செய்்து ஏகத்துவத்தன் பால் மக்களை அழைத்து வருவதால் அவரிடமே நேரில் இது குறித்து கேட்டு விடுவோமே என்று ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக்.எழுதியதை ஒரு நகல் எடுத்துக் கொண்டு சென்று மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களை அவரது இல்லத்திற்கு வெளியே சந்தித்து இது பற்றி கூறி விளக்கம் கேட்டோம்.

அதை வாசித்து விட்டு நம்ம ஏவி விடப்பட்ட அதிரை ஜோக்கர் ஃபாருக் போன்ற ததஜ வின் மூலை கழுவி விடப்பட்ட ஜெனமங்களுக்காக வருத்தப்பட்டவர், இது போன்ற எதையும் சொன்னால் நம்பக் கூடிய, கேள்வியே கேட்காமல் பனிபற்றக் கூடிய சிலர் இருப்பதால்தான் இந்த மனிதர் பி.ஜே எதையும் அடித்து விடுகின்றார் இந்த மூலை கழுவி விடப்பட்ட கூட்டங்களும் பி.ஜே சொல்வதெல்லாம் மார்க்கம் என்று நம்பி விடுகின்றது இது போன்றவாக்ளுக்கு பி.ஜே வைப்பற்றின பல உண்மைகள் தெறிய வாய்ப்பில்லை எது தற்போது உள்ளதோ அதை மட்டுமே பார்க்க்கூடியவர்களாக இவர்கள் உள்ளார்கள் தற்போது பி.ஜே சொல்பவற்றிற்கும் கடந்த கால நிகழ்வுகளையும் இவாக்ள் என்றும் ஒப்பிட்டு நோக்கியதில்லை. இவர்கள் திருத்தப்பட வேண்டும். இன்று எங்களிடம் இருந்து பி.ஜே தனியாக பிரிந்து சென்று விட்டாலும் பி.ஜே யோடு ஆரம்ப காலத்தில் இருந்து ஒன்றாக இருந்தவன் என்ற நிலையில் இவர்களின் அறிவிற்காக பி.ஜே வைப் பற்றிய சில தகவல்களை (ரகசியங்களை???) நான் இவர்களிடம் எடுத்து வைக்கலாம் என்றுள்ளேன் நான் அவற்றை கட்டுரையாகவே எழுதித் தருகின்றேன் வெளியிட்டு விடுங்கள் என்று கூறினார்.

அதிரை ஃபாருக் என்பவர் எழுதியுள்ள அனைத்துமே அவரது தலைவர் பி.ஜே விற்கு முற்றாக பொருந்தி போகக்கூடியவை என்பது எனது பதில் கட்டுரையை படித்த பிறகு இவர்கள் விளங்கி கொள்வார்கள் என்று கூறினார்.

விரைவில் எதிர் நோக்குங்கள்...சில நாட்களிலேயே .....பி.ஜே மற்றும் ததஜ வின் முகத்திரையை கிழிக்கும், உண்மைகளை அம்பலப்படுத்தும், ததஜ வின் மூலை மழுங்கிய கூட்டத்தினருக்காக மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களின் அறிவுரைகள் அடங்கிய பதில்.



விரைவில் எதிர் நோக்குங்கள்...உண்மைகள் என்றும் உரங்குவதில்லை....
பொய்யர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்க வருகின்றது...
மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவாக்ளின் அறிவுரைகள்...

இதன் பின்னரும் சிந்தனை உள்ள சகோதரர்கள் இப்பரிவினைவாதக் கும்பலோடு நீடிப்பரா???


கைப்புள்ள கமென்ட்:
ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...மாநாட்டு சமயத்துல மறுபடியும்ளடா
கெளம்பிட்டாய்ன்க....

மக்கா - மதீனா வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

மக்கா - மதீனா புனித இரு நகரங்களின் வரலாற்று சிறப்பு அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்
- சவூதி அரசாங்கம்



உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கும் புனித மக்கா நகரத்தினை பற்றியும் மற்றும் மதீனா நகரத்தினை பற்றியும் வரலாற்று சிறப்புகளையும், மற்றும் இரு புனித நகரங்களில் உள்ள கலை பண்பாடு, எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருக்கும் அழகான கலாச்சாரத்தினை பற்றியும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு சவூதி அரசாங்கம் புதியதொரு இணையத்தளம் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. மாஷா அல்லாஹ் .. அதன் முகவரி


இந்த இணையத்தளமானது புனித இரு நகரங்களை பற்றிய முழு விவரங்களையும், அங்கு நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், ஐங்கால நேரத்தில் அங்கு நடைபெறும் தொழுகை பற்றியும், தொழுகை நேரத்தினை பற்றியும், அங்கு மக்கள் எவ்வாறு தொழுகையினை நிறைவேற்றி வருகிறார்கள். மற்றும் ஏழைகளின் பெரு நாளாகிய வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் தொழுகையினை பற்றியும், தொழுகைக்கு முன் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளையும் உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நேரில் காணும் போது எப்படி உணர்வர்களோ அத்தகைய உணர்வுகளை இணையத்தில் காணும் போது உணரக்கூடிய அளவில் இருக்கும் என்று மக்கா - மதீனா தலைமையகம் அறிவித்து உள்ளது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த 45,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலி ஒளிப்பேழைகள் இந்த இணையத்தில் உள்ளன என்பதும் இதன் சிறப்பாகும்.

மக்கா மதீனா தலைமையகமானது தனது இரண்டாவது கட்ட மார்க்க பணியாக, மின்னனுவாக்க கல்வியினையும் (E. Education service) துவங்க உள்ளது. இதன் மூலமாக பல அரிய தகவல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இணைய சேவையானது தற்போது ஆங்கிலத்தில் உள்ளது பிற்பாடு மற்ற நாட்டு மொழிகளிலும் வெளியிடு செய்வதற்கான ஆயத்தப்பணிகள் நடந்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறது.

இந்த இணையத்தளத்தில், எவ்வாறு ஹஜ் மற்றும் உம்ரா செய்வது பற்றி அரேபிய மொழியிலும் உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் உள்ளது. இந்த இணையத்தில், அரேபிய, உருது, இந்தோனிஷியா மொழியில் உள்ள குர்ஆன் வானொலி சேவையும் உள்ளது. தர்ஜீமா குர்ஆனும் இந்த இணையத்தில் உள்ளது உலக மக்கள் அவர்களுடைய தாய் மொழியில் அதனை கேட்கலாம். மற்றும் மின்னனுவாக்க நூலகம் (E. Library) என்ற பகுதியில் மக்கா மற்றும் மதீனாவின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் துவங்கிய இந்த இணையத்தியத்தின் சேவை எப்படி உள்ளது என்பதினை பற்றி மக்களிடம் கருத்துக்களை அறிய உள்ளோம் என்றும், இந்த இணையத்தின் மூலமாக இஸ்லாம் மற்ற மக்களிடம் இன்னும் பலவாறாக பரவ வாய்ப்புள்ளது என்று முதன்மையாளர் ஷாலே அல் ஹீசேன் (Saleh Al Hosain – Head of the Presidency) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த இணையமானது ஹஜ் மற்றும் உம்ரா பற்றி அறியாத மற்ற மதத்தினருக்கு அதனை பற்றி தெரிந்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். அத்துடன் ஹஜ் மற்றும் உம்ரா எவ்வாறு செய்வது பற்றி இஸ்லாமியர்கள் இதன் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தில் கஃபாவின் மீது போர்த்தப்பட்டுள்ள கிஸ்வா என்ற துணியினை பற்றிய வரலாற்று சம்பவங்களும், இந்த துணியினை தயாரிக்கும் மக்காவில் உள்ள கிஸ்வா தொழிற்சாலையினை பற்றிய தகவல்களும் அடங்கி உள்ளன.

சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா தலைமையாகமானது, (The Supreme Commission for Tourism) ஐந்து வருட காலத்திற்குள் 6 புதிய அருட்காட்சியகத்தினை (Museum) சவூதி அரேபியாவின் பல மாகாணாங்களில் துவங்குவதற்கான பணிகளை செய்ய உள்ளது. மற்றும் 12 க்கும் மேற்பட்ட பழைய அருட்காட்சியகத்தினை புதுப்பிக்கவும் உள்ளது என்று சுற்றுலா தலைமையகத்தின் பொது செயலாளரான அரசர் சுல்தான் பின் சல்மான் (Prince Sultan bin Salman) அவர்கள் கூறினார்கள். ஒரு வருடத்திற்கு சவூதி அரேபியாவிற்கு புனித யாத்திரைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையானது 10 மில்லியானகும். இவர்கள் அனைவரும் புனித பூமியினை பற்றிய பல சிறப்புகளை பற்றி அறிந்து பயன் பெறும் வகையில் இந்த அருட்காட்சியகம் செயல்படும். புனித யாத்திரை வருவோருக்கு தேவையான அனைத்து செய்திகளும் ஒருங்கே அமையப் பெற்றதாக இருக்கும் இந்த அருட்காட்சியகம். அத்துடன் சவூதி அரேபியாவில் பல இடங்களில் சுற்றுலா கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினையும் அரசாங்கம் செய்ய உள்ளது.

நன்றி : Khaleej Times – Page – 16 – Dated April 24 and 27. 2008

தமிழாக்கம் : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

Israel's Crime Against Humanity



GAZA CITY, 29 April 2008 — Israeli tanks shelled a house in the Beit Hanoun neighborhood of the Gaza Strip yesterday killing six Palestinians, including four children and their mother.

“They have wiped out my family,” said the children’s father, Ahmed Abu Mouteq, putting his hands on his head in despair and weeping as the bodies were prepared for burial.

The four children were identified as one-year-old Musab, four-year-old Saleh, three-year-old Hana and six-year-old Rodina. Their 40-year-old mother was named as Miyaser.

“I left my house just moments before to look for one of my children. I heard the sound of the explosion, and when I returned home I found my wife and my children in a pool of blood,” said the grieving father.

“They had been eating breakfast and my wife had been holding our youngest child in her hands,” said Abu Mouteq as he looked down at blood, bits of flesh and spilled milk splashed across the wreckage.

“My wife and children were in the courtyard in their pajamas when the Israelis shelled this house,” he said.

“They were eating when they were hit,” said a neighbor at the site, where chickens pecked at a bloodstained floor and cooked potatoes grew cold in a pot.

A 17-year-old Palestinian civilian, Ayyoub Attalah, who was passing by the home, was also killed in the missile strike.

A hospital worker shows journalists the bodies of four children after their house was shelled by Israeli tanks in the Beit Hanoun neighborhood of Gaza Strip on Monday while they were having their breakfast. (Reuters)

“This aggression does not serve efforts being exerted to achieve calm, and it obstructs the peace process,” said Palestinian President Mahmoud Abbas.

Hamas lashed out at Israel, saying the Beit Hanoun assault undermined talks in Egypt aimed at securing a cease-fire in Gaza.

Senior Hamas leader Ismail Haniyeh said the massacre was part of Israel’s constant attempts to destroy any regional or international effort to lift the siege and end violence.



Hamas’ armed wing, Ezzeddine Al-Qassam Brigades, said it fired three rockets at the town of Sderot in response to the Beit Hanoun carnage.

“We are currently investigating this morning’s tragic incident,” said Mark Regev, a spokesman for Israeli Prime Minister Ehud Olmert.

Earlier yesterday, leaders of the Popular Front for the Liberation of Palestine, the Popular Resistance Committees and the Democratic Front for the Liberation of Palestine traveled from Gaza to Cairo for talks with Egyptian intelligence officials on a possible cease-fire with Israel. Hamas has offered Israel a six-month truce if it lifted an embargo on the territory.

Israel dismissed the truce proposal on Friday, saying the Palestinian group wanted to prepare for more fighting rather than peace.

But Hamas said on Saturday it was waiting for an official Israeli response, and Hamas leader Khaled Meshaal said he would wait until Egyptian mediators met Israeli officials to relay the cease-fire proposal before deciding how to react.

Meanwhile, Prime Minister Haniyeh has expanded his dismissed Cabinet by appointing five new ministers in another move consolidating his de facto administration in the Gaza Strip.

Among the five new Cabinet members were Mahmoud Zahar, whom Haniyeh re-appointed as foreign minister, and Said Siam, who was given the Interior Ministry portfolio.

Both also served as foreign and interior minister in the Hamas-led government formed in March 2006, shortly after Hamas defeated Fatah in free and fair elections.

The de facto Cabinet headed by Haniyeh had had only five members, including the deposed premier himself, since June 2007. In that month, Hamas took control of the Strip by overpowering the headquarters of security forces loyal to Abbas and Fatah.

Abbas responded by dismissing the Hamas-led government and appointing a caretaker government based in the West Bank.

However, that government headed by acting Prime Minister Salam Fayyad has never been ratified by the Hamas-dominated Palestinian Parliament.

Taher Al-Nounou, the spokesman of the de facto Hamas Cabinet, said Gaza members of the Palestinian Parliament would convene “soon” for a vote of confidence in the five new nominees.

The Parliament as a whole has been dysfunctional due to the Gaza-West Bank split — which has led Fatah to boycott sessions — and also because Israel has arrested many Hamas parliamentarians.

Thanks : ARABNEWS

WWW.TAMILMUSLIMMEDIA.COM

Monday, April 28, 2008

அல்கோபரில் நடந்த இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி


அல்கோபர் மாநகரில் அக்ரபியாவில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மற்றும் பிரச்சார மையத்தின் தமிழ் பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழச்சியில் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞரும் மற்றும் இலங்கையில் இருந்து வெளிவரும் " உண்மை உதயம்" பத்திரிகை ஆசிரியருமான மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்கள்.

சரியாக இரவு 8.30 அளவில் அக்ரபியா இஸ்லாமிய அழைப்பு மற்றும் பிரச்சார மையத்தின் தமிழ் பிரிவு அழைப்பாளராக பனியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் நிகழச்சியை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்கள்.


அதன் பின்னர் சிறப்புரை ஆற்ற வருகை தந்திருந்த மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் "குழந்தை வளர்ப்பும், இஸ்லாமிய கல்வியும்" என்ற தலைப்பில் மிக அருமையான, அவசியமான உரை ஒன்றை ஆற்றினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் கிழக்கு மாகான தமிழ் தஃவா கமிட்டியின் துனைத் தலைவர் மெளலவி உவைஸ் பாக்கவி அவர்கள் நிறைவுரை நல்க நிகழச்சி இனிது நிறைவுற்றது.


இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆன்களும், பென்களும், குழந்தைகளுமாக தம்மாம் அல்கோபர் பகுதிகளில் இருந்து இந்திய, இலங்கையை சோந்த தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அணைவருக்கும் சுவையான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழச்சிக்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகான தமிழ் தஃவா கமிட்டி அக்ரபியா சென்டருடன் இணைந்து செய்திருந்தது. தமிழ் தஃவா கமிட்டியின் தன்னார்வ தொண்டர்கள் வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறுதல் முதல் அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : சகோ. அபு இஸாரா & முகவைத்தமிழன்

குறிப்பு : இந்நிகழ்ச்சியின் வீடியோ நமது தமிழ் முஸ்லிம் மீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்? - மெளலவி.ஜமால் முஹம்மத் மதனி

"T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்?"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Sunday, April 27, 2008

யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF)


யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 20.04.2008 அன்று மதுரையில் நடைபெற்றது. மாநில செயலாளர் A.M ஷாஃபி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் A.M. அன்வர் அறிமுக உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அ. முஹம்மது யூஸுஃப் சிறப்புரையாற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கல்வி வளர்ச்சி, மாணவர்களின் மேம்பாடு, யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் வளர்ச்சி ஆகியவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27%இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் ஒரு மைல்கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனையாக வைக்கா மல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனைக் கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக, உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.

2. இந்த 27% இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும், இன்னும் இதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு இடஒதுக்கீடு கிடைக்க அழுத்தம் தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் யு.எஸ்.எஃப். நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. நமது தேசத்தில் முஸ்லிம்கள் கல்வி, சமூக பொருளாதார ரீதியாக மிகவும் கீழான நிலையில் இருப்பதாகவும், முன்னேற்றப் பட வேண்டிய சமூகத்தில் மிகமுக்கிய பங்கை இந்த முஸ்லிம் சமூகம் வகிக்கின்றது என்றும் சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. வல்லரசு என்ற ஸ்தானத்தை எட்ட பீடுநடை போட்டுக் கொண்டி ருக்கும் நமது தேசத்தின் குடிமக்களில் ஒரு பகுதியினராகிய முஸ்லிம்கள் பலவீனமான நிலையில் இருப்பது நமது தேசத்தின் பயணத்தில் ஊனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஆகவே இந்த நிலையைக் களைய மத்திய அரசு உடனடியாக 15% தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கி இந்த தேசத்தில் ஏற்பட்டுள்ள ஊனத்தை சரி செய்ய வேண்டும் என யு.எஸ்.எஃப். மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

4. முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு மாவட்டந்தோறும் முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகளை (HOSTEL) கட்டித்தர வேண்டும் என்றம் அதில் முதற்கட்டமாக சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் வரும் 2008 2009 கல்வியாண்டு முடிவிற்குள் கட்டித்தர வேண்டுமென்றும், முஸ்லிம் மாணவ, மாணவியரின் இந்தக் கல்வி நலத்திட்ட அபிவிருத்திப் பணியில் சுணக்கம் காட்டாமல், தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டு
ம் என்றும் யு.எஸ்.எஃப். தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

5. மாணவ சமுதாயத்தின் எதிர்கால இலட்சியத்தை வளமாக்கும் விதமாக, பத்தாவது மற்றும் +2 வுக்குப் பிறகு என்ன படிப்பது? என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூலை ரூ 3/ நன்கொடையில் வழங்குவது என்றும் சிறந்த கல்வியாளர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்டு மேற்படிப்பு வழிகாட்டி முகாம்களை மாவட்டம்தோறும்நடத்தி அதில் இந்த நூலை வெளியிடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


இப்படிக்கு,
அ. முஹம்மது யூஸுஃப்,
மாநிலத் தலைவர்,

யு.எஸ்.எஃப்

Saturday, April 26, 2008

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு, பின் பல நாடுகளில் தன்னுடைய ஆதிக்கசக்திகளின் கோர தாண்டவத்தினை அமெரிக்கா செய்துக்கொண்டு இருக்கிறது. இதனால் பல பாதிப்புசேதங்களை பல நாடுகள் அடைந்துக்கொண்டு வருகின்றன. அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாவற்றிகும் காரண காரிய இருப்பது அமெரிக்கா தான் என்பது உலகவியலாளர்களின் கருத்தாகும்.

மேற்கு ஆப்ரிக்காவில் மட்டுமின்றி பசி பட்டினி அதனால் ஏற்படும் துயர சம்பங்கள் அதிகம் பல நாடுகளில். குறிப்பாக பல தேசங்களில் அரிசி தட்டுப்பாடுக்கள் அதிகரித்து வி்ட்டன. வளைகுடா நாட்டிற்கு, இந்தியாவிலிந்து ஏற்றுமதியாகும் அரிசியினை இந்தியா அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதனால் வளைகுடா பகுதியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலைவாசிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிவி்ட்டது. அத்தியாவசிய விலைகள் ஒரு பக்கம் ஏறிக்கொண்டே வருகிறது. மற்றொரு பக்கம் உலக சந்தைகளில் எரிபொருட்களின் விலைகளும் ஏறிவிட்டது.

இரட்டை கோபுர தாக்குதலில் 3,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. ஆனால் அந்த தாக்குதல்களில் இறந்து போனவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள், எந்த இனத்தை சார்ந்தவர்கள், எந்த மொழியினை சார்ந்தவர்கள், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி அமெரிக்காவினால் வெளியிட முடியுமா..? சென்ற 23.9.2007 அன்று, நான் அமெரிக்கா வந்த போது தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரம் இருந்த பகுதியினை பார்வையிட ஏன்..? அமெரிக்கா அரசாங்கம் எனக்கு அனுமதி தரவில்லை. இருந்தாலும். அமெரிக்கா அதிபருக்கும் ஒரு அழைப்பினை ஈரான் அதிபர் விடுத்து இருந்தார். ஈரானின் உள்ள ஃபிர்தௌஸியா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள விழா ஒன்றில் உரை நிகழ்த்த தாங்கள் ஈரான் நாட்டிற்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினை முன்பு விடுத்து இருந்தார். ஆனால் இது நாள் அமெரிக்க அதிபர் ஈரான் நாட்டிற்கு செல்லவில்லை.

உலக நாடுகளில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் அமெரிக்கா மட்டும் தான் காரணம் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். தற்போது ஈரான் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்துறை, அரசியல் துறை, வாணிபத்துறை, இராணுவத்துறை என்று பல துறைகளிலும் நாங்கள் முன்னெறிக்கொண்டு வருகிறோம். ஆதிக்கசக்த்திகளை எதிர்த்து பேராடக்கூடிய மனப்பக்குவதில் ஈரான் நாடானது தயாராகி விட்டது என்று ஈரான் அதிபர் தைரியமாக கூறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாடு திரும்பிய 300,000 அமெரிக்க போர் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினரோடு நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆம்.. அவர்கள் மனக்கஷ்டம், மன அழுத்தம், மன வேதனை, மன பாரம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். நாடு திரும்பிய போர் வீரர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, அவர்களின் மூளையானது பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் 320,000 போர் வீரர்களுக்கு Traumatic Brain என்ற மூளை நோயானது பரவி விட்டது. 18.5 சதவீத போர் வீரர்களுக்கு மன அழுத்தம் (Stress Disorder) போன்ற நோய்கள் இருப்பதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. ஐந்தில் ஒரு போர் வீரர் என்ற விகிதாரம் படி நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வானது கூறுகிறது. இதற்கு காரணம் யார்..?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஸா பகுதி, பாலஸ்தீனம், ஈராக் போன்ற நாடுகளில் ஒன்றும் தெரியாத அப்பாவி பொது மக்கள், சிறு குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம்.. கணவனை இழந்த மனைவிமார்கள் எத்தனை பேர்..? மனைவியினை இழந்த கணவன் எத்தனை பேர்கள், குழந்தையினை இழந்த தாய்மார்கள். தாயினை இழந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்..? இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.. இவைகள் அனைத்திற்கும் யார் காரணம்..?

போர் மூலம் ஒரு பக்கம் ஆபத்துக்கள் தினமும் வந்த கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கம் ஊடகத்துறைகளும் ஆதிக்கசக்திகளுக்கு அடிமையாகி விட்டது. டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் ஊடகத்துறைகளை தூண்டி விட்டு அதன் மூலம் வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா. இஸ்லாம் ஒரு தீவிரவாதம் என்று மக்களிடம் சொல்லும் பொய் பிரச்சாரங்கள் எடுபட வில்லை. இஸ்லாம் ஒரு புனித மார்க்கம்.. ஒரு எளிய மார்க்கம் ..இனிய மார்க்கம் என்பது மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இஸ்லாம் ஆழமாக பதிந்து விட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் மக்களை சிந்திக்கக்கூடிய அளவிற்கு மாற்றி விட்டது. இஸ்லாம் அதி வேகமாக மக்களிடம் பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா.

ஒரு மனிதன் இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தம் கூட வெளியரங்கத்தில் செழிப்பும் அமைதியும் அவனை ஆரத்தழுவிக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் இது அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு அளிக்கப்படும் அவகாசம் ஆகும். அதன் பிறகு இறைத்தண்டனையின் கசையடிகள் விழக்கூடும். இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வும் அமைதியும் தான் உண்மையானவை ஆகும்..

தகவல் தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா நிகழ்ச்சியானது, 25.4.2008 வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை டேரா துபையில் உள்ள இந்தியன் இஸ்லாஹி சென்டரில் இனிதாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர். அமீர் சுல்தான் அவர்கள் கிராஆத் ஓதினார். அதனை தொடர்ந்து சகோதரர். ஷிப்காத்துல்லாஹ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின், சிறப்பு உரையினை சகோதரர். அப்துல் ஸலாம் மதனி (இயக்குனர் - அல் மனார் திருக்குர்ஆன் பயிற்சி மையம் - அல் கூஸ் - துபை) அவர்கள் நிகழ்த்தினார். அவரின் சிறப்பு உரையினை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி. நூருல் அமீன் அவர்கள் நிகழ்த்தினார்.

ம.ரிப் தொழுகை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வானது துவங்கியது. துபை இந்தியன் இஸ்லாஹி சென்டரில் பணியாற்றும் கேரளாவைச்சார்ந்த மெளலவி. ஷிஹாப் எடக்கர அவர்கள் உரை நிகழ்த்தும் போது, சத்திய மார்க்கத்தினை எடுத்துரைக்கும் பணியினை துபாயில் இருக்கும் அனைத்து மாநில இஸ்லாமிய சகோதரர்களும் தத்தம் பணியினை திறம் பட செய்ய வேண்டும். இந்த பணியில் ஏற்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நாம் மேற்கொண்ட பணியில் தொய்வு இல்லாமல் செய்தால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நமக்கு கூலி கிடைக்கும் என்பது போன்ற பல கருத்துக்களை, தமிழ் பேசக்கூடிய சகோதரர் புரிந்துக்கொள்ளும் விதத்தில் மலையாளம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற அனைத்து சகோதரர்களின் உள்ளங்களிலும் ஒரு மாற்றத்தினை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது அவருடைய உரைகள் கற்கள். அதனை தொடர்ந்து சகோதரர். நாஸர் அலி கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ கொள்கையில் பற்றுள்ள அனைத்து சகோதர உள்ளங்களும் எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் கலந்துக்கொண்டதினை காணும் போது, இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒற்றுமையானது ஏற்படும் என்பது திண்ணம். அல்லாஹ்வின் திருப்பொருத்ததை நாடி நடை பெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவு – துபை மிகச் சிறப்பாக செய்து இருந்தது. தமி்ழ் இஸ்லாமிய நி்கழ்ச்சியினை கேட்பதற்கு கேரளாவை சார்ந்த பல சகோதரர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Friday, April 25, 2008

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார்.

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்'தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

கடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.

இதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.

கேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.

தீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.

தற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.

உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்

இறைவனின் திருப்பெயரால்

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குண்டு நீதிக்கு புறம்பாக தண்டனை விதிக்கப்பட்டு றூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முலாக் சிறைகளில் அடைபட்டு கிடப்பதை தாங்கள் அறிவீர்கள்.

கொலை கொள்ளை, மோசடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களை புரிந்து இவர்கள் சிறை செல்லவில்லை, மாறாக சமூக நலனில் அக்கறையும், தன்னலம் கருதா அர்ப்பணிப்பும் தான் இவர்களின் சிறைவாசத்திற்கான காரனமாகும்.

சிறைக்கூட சித்திரவதைகள்தந்த பரிசாக இவர்களில் நூற்றுக்கணக்கானோனர் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகின்றனர். சபூர் ரஹ்மான் என்ற ஆயுள் கைதி கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். மஸ்த்தகீர் என்பவரும் இறந்து சில வருடங்கள் ஆகின்றன.

இப்போது அபுத்தாஹிர் என்ற இளம் வயது ஆயள் கைதி சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சோக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் அல்லாத ஆயள் தண்டனைக் கைதிகள் 10 வருடங்கள் நிறைவடைந்தால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டும் 10 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை பெறாமல் உயிர் காற்றை சுவாசிக்க கூட வழியின்றி மருத்துவ மனைகளுக்கும், மண்ணரைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அரசின் இவ்வகை அப்பட்டமான போக்கை, அநீதியை கேட்போர் யார்....?

சகோதரர் அபுதாஹிருக்கு தொடாந்து டயாலிஸிஸ் செய்யப்படுகின்றது. சமுதாயம் நலமுடன் வாழ தன் அர்ப்பணித்த இந்த சகோதரரின் நலத்திற்காக சமுதாயமே உன் கரங்கள் உயர, கல்புகள் உருக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து உதவிட வேண்டுகின்றோம்.


சிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM)
தமிழகமெங்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்தி வரும் தமிழக முஸ்லிம் நல அமைப்பு

குறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

Wednesday, April 23, 2008

மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் உரை (VIDEO)

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.

.

"மருத்துவர் இராமதாசு அவர்களின் உரை"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மருத்துவர் இராமதாசு அவர்கள்

Tuesday, April 22, 2008

சத்திய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் டென்மார்க் மக்கள்

சத்திய இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் டென்மார்க் மக்கள்!

(Tamil Text+English Video)
எழுதியவர்/உரை:அபூ அரீஜ்


ஒரு சில விசமிகளால் நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச்சித்திரங்களை வரைந்த டென்மார்க் நாட்டில், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இறைவனருளால் அதி வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவதாக டென்மார்க்கைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
இவர் கூறுகையில் இந்த மாதிரியான கேலிச்சித்திரங்களை வரைந்தது மிகச் சொற்பமானவர்களே! நாம் எங்கு சென்றாலும் இது போன்ற இஸ்லாத்தின் எதிரிகளைக் காணமுடியும்!


இறைவன் அவர்களின் இத்தைகய கீழ்த்தரமான சூழ்ச்சிகளை முறியடித்து முஸ்லிம்களுக்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்துக் கொடுத்ததாகக் கூறுகிறார். மேலும் இவர் கூறுகையில், இஸ்லாத்தின் எதிரிகளான இவர்களின் திட்டங்களை விட அல்லாஹ்வின் திட்டம் மிகப் பெரியது என்றார்.


இதன் விளைவாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் முன் எப்போதும் பார்த்திராத அளவிற்கு இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருப்பதாக இவர் கூறுகிறார். இவர் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்னால் தாம் இஸ்லாத்தைத் தழுவும் போது டென்மார்க்கைச் சேர்ந்த குடிமக்களாகிய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பத்து அல்லது பதினைந்து நபர்கள் இருந்ததாகவும் இறைவனருளால் தற்போது அந்த எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் பெருவிட்டதாகவும் கூறுகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் நான்கு பேர் தம்முடைய அலுவலகத்திற்கு வந்து ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்களைக் கேலிச் சித்திரம் வரைந்து, இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதன் மூலம் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிடப் -பட்டிருந்த அவர்களுடைய சூழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் அல்லாஹ்வின் உதவியால் உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து விட்டதாகக் கூறுகிறார்.


இவர் கூறுகையில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஒவ்வொரு நாட்டில் வாழக்கூடியவர்களின் மொழிகளில் இஸ்லாம் எடுத்துரைப்பட வேண்டும் என்றும் இது மிக மிக இன்றியமையாத ஒன்றாக நம் முன்னே இருக்கின்றது என்றும் கூறினார்.


வீடியோ இணைப்பு : ஆங்கிலம்
http://www.suvanath endral.com/ avpage/towardsis lam/denmarkpeopl eV.html

அண்ணன் திருமாவளவன் உரை (VIDEO) IDMK கட்சி துவக்கவிழா

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ மருத்துவர். இராமதாசு அவர்கள் உட்பட பலர் பேசிய பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்..

.

"அண்ணன் திருமாவளவன் அவர்களின் உரை"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அண்ணன் திருமாவளவன் அவர்கள்

Monday, April 21, 2008

IDMK கட்சி துவக்க விழா வீடியோ (பகுதி-01)

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.

.

"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மேடையில் தலைவர்கள்

ஏர்வாடியில் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

.
மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்.


நெல்லை மாவட்டம், ஏர்வாடி மெயின் ரோட்டில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள செலக்ட் சப்பல் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இத்தெருவில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பெண்கள் கடை வீதிக்கு செல்லும்போது இம்மதுபான கடையில் மது அருந்திவிட்டு, குடிகாரர்கள் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகள் கூறுவதோடு அப்பகுதி போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு செய்கின்றனர்.

இக்கடைய அகற்றக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உரிய நபர்களிடம் பலதரப்பினர் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே, இக்கடையை அகற்றிட வலியுறுத்தி ஏர்வாடி த.மு.மு.க. இக்கடையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏர்வாடி கிளைத் தலைவர் மாஹின் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், வட சென்னை மாவட்ட தலைவர் ஹமீது, நெல்லை மாவட்ட துணை செயலாளர்கள் அன்சர் மற்றும் மீரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் சர்வ கட்சி மற்றும் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர். மதுபானக் கடைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி: நெல்லை உஸ்மான்

Sunday, April 20, 2008

துபாயில் தொழிலாளர் பிரச்சினை தீர்க்கும் நடுவம் துவக்கம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்டு நிறுவனம் துவக்கம்

அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள நிறுவனங்கள் தான் (Contracting Companies). இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் போது குறைந்த சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு தருகிறார்கள். சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் அல்லது 14 மணி நேரங்கள் பணிபுரிகிறார்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிக மிக குறைவாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறைக்காலங்களிலும் வேலை செய்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியினை தருகிறது. அத்துடன் தொழிலாளர்கள் தங்கக்கூடிய இடங்களும் அடிப்படை வசதி இல்லாத அளவிற்கும் மாறிக்கொண்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் செய்யும் இத்தகைய தவறுகளால் பல பிரச்சனைகளை இங்குள்ள தொழிலாளர்கள் தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கிறது. சென்ற சில மாதங்களாக துபாய், அஜ்மான், ஷார்ஜா போன்ற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை வசதி இல்லை, ஆறு மாத சம்பள பாக்கி, அறைகளில் மின்சாரம் இல்லை, தங்கி இருக்கும் பகுதிகளில் சரியான தண்ணீர் வசதி இல்லை மற்றும் இன்னும் பல காரணங்களை காட்டி சாலைகளில் இறங்கி போராட்டங்களை செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்களை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விட்டது துபாய் அரசாங்கம்.

அடிப்படை தொழிலாளர்கள் இல்லை என்றால், துபாயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி விடும் என்பதினை கருத்தில் கொண்ட துபாய் அரசாங்கமானது, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டி சோனாப்பூர் பேருந்து நிலைய பகுதியில் நிரந்தரமாக தொழிலாளர்கள் குறை தீர்க்கும் தொண்டு நிறுவனம் ஒன்றினை (Permanent Committee for Labour Affairs (PCLA) 18.4.08 வெள்ளிக்கிழமை மாலை அன்று பல தொழிலாளர்கள் முன்னிலையில் துவங்கியது. இந்நிகழ;ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மேஜர் ஜெனரல் முஹம்மது அஹமது அல் மாரி அவர்கள் (Major - General Mohammed Ahmed Al Marri - Director of the Dubai Naturalisation and Residency Department and Chairman of PCLA) அவர்கள் கூறுகையில், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை எற்பட்டாலும் எங்களிடம் முறையிடலாம், வேலை நேரம் அதிகம் நிறுவனங்கள் தருகிறது, சம்பள பாக்கி, அடிப்படை வசதி குறைவு இது போல் என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த துறைச்சார்ந்தவர்களிடம் (Relevant Department) கூறுவோம். ஒரு மணி நேரத்துக்குள் தொழிலாளர்களின் பிரச்சனை சரிப்படுத்த எங்களின் இந்த நிறுவனமானது முயற்சியினை மேற்கொள்ளும். தொழிலாளர்களின் வசதியினை கருத்தில் கொண்டு மாலை நேரத்திலும் எங்கள் தொண்டு நிறுவனம் பணி செய்யும். அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி அந்த நிறுவன அதிகாரிகளை சந்தித்து குறை சொல்வது போன்றவைகளை பற்றியும், கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அடிப்படை தொழிலாளர்களுக்கு கற்றும் தரும் பணியிலும் இந்த நிறுவனமானது செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது சோனாப்பூரில் துவங்கி இருக்கிறோம் அதன் பின் ஜெபல் அலி, அல் கூஸ் போன்ற பகுதியிலும் மிக விரைவில் துவங்க உள்ளோம் என்றும் சொன்னார்.

இந்த துவக்க நிகழ்ச்சியில் இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சார்ந்த அரசுத்துறை (Government Diplomats) அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பாகிஸ்தான் தூதரகத்தினை சார்ந்த முஹம்மது வாஷின் (Mohammed Waseen – Welfare Consul at the Pakistani consulate in Dubai) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த நிறுவனமானது தொழிலாளர்களின் அடிப்படை வசதிக்காகவும், மற்றும் மகிழ்வுடன் தொழிலாளர்கள் துபாயில் இருப்பதற்கான அனைத்து வசதி வாய்ப்பினை தரும் என்றும் கூறினார்.

நன்றி : கலீஜ் டைம்ஸ் 19.4.2008 முதல் பக்க செய்தி

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Saturday, April 19, 2008

மாணவர்களுக்கு உதவும் இணையதளம்

இணையதள முகவரி: www.educationsupport.nic.in
மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம். கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.

அன்புடன்,
மு.சாதிக்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஷானா நபீக்


<படத்தில் காண்பது றிஷானாவின் வீடும், குடும்பமும்>
சவூதி அரேபியா நீதிமன்றமும் மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஷானா நபீக்கின் எதிர்காலமும் இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்குப்போய் வேலைக்கமர்த்தப்படுவதால் அல்லற்படும் ஏழைப்பெண்களின் துன்பக் கதைகளில் 19வயதுடைய றிஷானா நபீக்கின் கதை மிகவும் பரிதாபமானது என்று அந்த ஏழைப்பெண்ணுக்கு உதவ வரும் இரக்கநெஞ்சங்களுக்குப் புரியும். உண்மையிலேயே 17வயதுடைய (04.02.88) றிஷானா,23வயது என்று பதிக்கப்பட்ட ( 02.02.1982) அடையாள அட்டை கொடுக்கப்பட்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் ஏஜன்சிமூலம் 2005ம் ஆண்டு அனுப்பப்பட்டார். 04.05.2005ல் வீட்டு வேலைகளுக்காக திரு திருமதி அல்- ஒட்டெபி அவர்களின் வீட்டிற் சேர்ந்தார். 05.22.05ல் அந்த வீட்டின்நான்கு மாதக்குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

றிஷானாவுக்குத் தெரியாத அரேபிய மொழியில் வாக்குமூலம் எடுக்கப்பட்டு றிஷானா அந்த 4 மாதகுழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக ஆவணம் தயாரிக்கப்பட்டது. றிஷானாவுக்காக ஒரு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. றிஷானவுக்குப் புரியும் மொழியில் கேள்விகள் கேட்கப்படவில்லை. மொழிபெயர்ப்பாளரும் கொடுக்கப்படவில்லை. குழந்தையை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதால், றிஷானாவின் கழுத்தை வெட்டிக்கொலை செய்யப்பட்டு மரணதண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது. போனவருடம் இலங்கையைச் சேர்ந்தவர்களான பல இளைஞர்கள் பகிரங்கமாகக் குழுத்து வெட்டப்பட்டு மரணதணடனைக் கொடுமைக்காளானார்கள்.

றிஷானா என்ற ஏழைப்பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் உலகிற்குத்தெரிய வந்ததும் அகில உலகம் பரந்த மனித உரிமைவாதிகள் றிஷானாவுக்குக் கொடுக்கப்பட்ட மரணதண்டனை நிறுத்தக்கோரிப்போராட அணிதிரண்டார்கள். அப்பீலுக்கான பணம் பல ஸ்தாபனங்கள், சாதாராண மனிதர்களாற் திரட்டப்பட்டது. றிஷானாவின் வழக்கு மேற்கோர்ட்டுக்கு எடுக்கப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி, அந்த விடயத்தைப் பழையபடி றிஷானாவை விசாரித்த கோர்ட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். றிஷானாவுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதியின் கையில் பழையபடி அந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டதும் றிஷானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரைக் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் ஆஜராக வில்லை. இது எப்படியிருந்தாலும், சவூதி அரேபிய சட்டங்களின்படி அங்கு "ஷரியத் சட்டம்" என்ற இஸ்லாமியச் சட்டம்' நடை முறையில் இருக்கிறது. அச்சட்டத்தின்படி இறந்தவிட்ட குழந்தையின் தாயார் மன்னிப்புக் கொடுக்காத வரைக்கும் கோர்ட்டார் எதுவும் செய்து றிஷானாவுக்கு விடுதலை கொடுக்க மாட்டார்கள். வழக்குமன்றத்தால் எடுக்கப்படும் மனித உரிமை விவாதங்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது தெரியாது.
'பழைய குருடி கதவைத்திறடி' என்ற பழமொழிக்கேற்ப, பழைய நீதிபதி பழையகோர்ட் என்று றிஷானாவின் எதிர்காலம் ஒரு பெரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறது. அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், மதிப்புக்குரிய றோஹித பொகலாகமவைச் சந்தித்து, றிஷானாவின் விடயம் பற்றி விசாரித்தபோது, ''இந்த விடயம் பற்றி சவூதி அரேபியாவின் இளவரசருடன் பேசினேன், சவூதி அரேபியாவில் 'ஷரியத் சட்டம்' நடைமுறையிலிருப்பதால், இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காதவரை கோர்ட்டாரால் எதுவும் செய்யமுடியாது. தயவு செய்து, றிஷானாவின் விடுதலைக்காக நீங்கள் செய்யும் பிரசார வேலைகளைத் தொடருங்கள். இறந்த குழந்தையின் தாயிடம் பாவமன்னிப்பைக் கோருங்கள். உலக மயப்படுத்தப்பட்ட உங்கள் பிரசாரம்தான் ஏழைப் பெண்ணான றிஷானாவின் விடுதைக்கு உதவி செய்யும்'' என்று கேட்டுக்கொண்டார்.
இரக்க மனம் கொண்ட மனிதர்களாகிய நாங்கள் அத்தனைபேரும், ' தாயே, இறந்துவிட்ட உங்கள் குழந்தைக்காக நாங்கள் எங்கள் துக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறோம், கடவுள் பெயரால் பெரிய மனது கொண்டு றிஷானாவை மன்னித்து விடுங்கள்'' என்று அந்தத் தாயை மன்றாட்டமாய் வேண்டிக் கொள்ளவேண்டும். இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைச் செலுத்தும் அதேநேரம், வறுமையின் காரணமாக இந்தச் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட ஏழைப்பெண்ணான றிஷானாவின் விடுதலைக்கும் போராடுவோம். அந்தக் குழந்தைக்குப்பால் கொடுக்கும் போது, தொண்டையில் பால் சிக்கி இறந்ததற்கு றிஷானாதான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குழந்தைக்குப்பால் தொண்டையில் சிக்கியதும், றிஷானா குழந்தையின் நிலைகண்டு உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டதாகவும் அதற்கிடையில் குழந்தை இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைக்கு ஏற்கனெவே பால் குடிக்கமுடியாத பிரச்சினை தொடர்ந்த ஏதும் வைத்தியச்சிக்கல்கள் இருந்ததா என்று ஒன்றும் தெரியாது. குழந்தையை பிரேத விசாரணை (போஸ்ட்மோர்ட்டம்) செய்யவில்லை.
அத்துடன், தாய் தகப்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னை வேலைக்கு அமர்த்தியவீட்டார் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வாக்குமூலம் எடுத்ததாக றிஷானா குறிப்பிட்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. காலை மூன்ற்மணியிலிருந்து இரவு பதினொருமணிவரை தான் வேலை வாங்கப்பட்டதாகவும் தனது பெற்றோருக்கு றிஷானா எழுதியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டு வேலைக்கு என்றுபேசி ஆள் எடுத்து குழந்தை பார்க்கும் அனுபவமில்லாத இளம் பெண்ணிடம் பலவேலைகளையும் குழந்தைப்பார்க்கும் வேலையும் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். மத்திய தரைக்கடல் நாடுகளில் இப்படி எத்தனையோ இலங்கைப் பெண்கள் மிகவும் பாரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களில் றிஷானாவின் துயரும் ஒன்று. அனாதாராவாக அல்லற்படும் இப்பெண்ணுக்கு மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் தயவுசெய்து உதவுங்கள். இறந்த குழந்தையின் தாயின் மன்னிப்பைக்கேட்டு ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதுங்கள். இந்தப் பெண்ணுக்கு உதவுவது உங்கள் குழந்தைகளுக்கு இறைவனின் ஆசியைத் தரும். ஒருஉயிரைக் காப்பாற்ற நீங்கள் எழுதும் ஒருகடிதம் ஊன்றுகோலாகவிருந்து இந்தப்பெண் விடுதலையாகும் நற்பணியைச் செய்யுங்கள்.


இறந்த குழந்தையின் தாயிடம் றிஷானாவுக்காக மன்னிப்புக் கேட்கும் கடித்தத்தைப் பின்வரும் விலாசத்துக்கு எழுதவும்.


Clemency for Rizana Nafeek

Mr. Naif Jizijan Khalaf Al-Otebi

c/o Sri Lankan Embassy

PO Box 94360, Riyadh-11693

சவுதி அரேபிய இந்திய தூதரகமும் தூதர் ஃபரூக்கும் உரங்குகின்றார்களா?



திரு. M.O.H. ஃபரூக் அவர்கள்



வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை

அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி : விமர்சனம் - விளக்கம்

NCHRO வின் தமிழ்நாட்டிற்கான நிர்வாகிகள் தேர்வு


NCHRO வின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் தேர்வு


மனித உரிமை இயக்ககங்களின் தேசிய கூட்டமைப்பிபின் (NCHRO) தமிழ்நாடு மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று (18.04.2008) சென்னையில் நடைபெற்றது. இதில்NCHRO வின் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஓ.க. முஹம்மது ஷரீஃப் சிறப்புரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் குறித்தும், காவல்துறையின் போலி என்கவுன்டர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, NCHRO வின் தமிழ்நாடு மாநில கிளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் NCHRO வின் தமிழ்நாடு மாநில பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

1. வழக்கறிஞர் தி. லஜபதிராய் மதுரை தலைவர்

2. நிஜாமுதீன், Ex.M.L.A நாகப்பட்டிணம் துணைத் தலைவர்

3. வழக்கறிஞர், ஜஹாங்கீர் பாதுஷா, மதுரை துணைத் தலைவர்

4. முஹம்மது முபாμக், நெல்லை பொதுச் செயலாளர்

5. பேராசி. அ. மார்க்ஸ், சென்னை செயலாளர்

6. வழக்கறிஞர், ரஹமத்துல்லாஹ், மேட்டுப்பாளையம் செயலாளர்

7. வழக்கறிஞர், விவேகானந்தன், கும்பகோணம் செயலாளர்

8. வழக்கறிஞர் முஹம்மது அலீ ஜின்னா, மதுரை பொருளாளர்

9. ஷக்கூர், சென்னை மக்கள் தொடர்பு அதிகாரி (PRO)

செயற்குழு உறுப்பினர்கள்

1. வழக்கறிஞர், N.M. ஷாஜஹான், மதுரை

2. வழக்கறிஞர், நவ்ஃபல், கோயம்பத்தூர்

3. வழக்கறிஞர், முஹம்மது அப்பாஸ், மதுரை

4. வழக்கறிஞர், R. முருகன் குமார், திருநெல்வேலி

5. வழக்கறிஞர், எம்.எஸ். சுல்தான், மதுரை

6. சையது அலீ, நாகர்கோவில்

7. வழக்கறிஞர், A. சையது அப்துல் காதர், மதுரை

8. வழக்கறிஞர், ஹரிபாபு, சேலம்.

9. அ. முஹம்மது யூஸுஃப் மதுரை

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அμசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போμணிட்டக் களத்தில் ஒரு மைல் கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனை வைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகத்தில் போலி என்கவுண்டர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பதையே காட்டுகின்றது. இந்தப் போக்கை NCHRO வன்மையாகக் கண்டிக்கிறது. போலி என்கவுன்டர்களில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று தமிழக அμசை NCHRO கேட்டுக் கொள்கின்றது.

3. போலி என்கவுன்டரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

4. கோவையில் கடந்த 2006ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்கு, உளவுத்துறை ஏசி. ரத்தினசபாபதியின் நாடகம் என்பதும், அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ள ஆவணங்கள் காவல்துறையினμணிலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் SIT யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கோவையில் இவ்வாறு வெடிகுண்டு பீதியைக் கிளப்பி பொது அமைதியையும் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்கும் முகமாக சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெடிகுண்டு பழி சுமத்திய ஏ.சி ரத்தின சபாபதி, மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்த அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் அவர்களுடைய வைப்பு நிதியிலிருந்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக்கொள்கிறது.

5. இந்திய அμசியல் அமைப்புச் சட்டம் ச்μத்து 14 வழங்கியுள்ள சமத்துவத்திற் கான உரிமை குடிமக்கள் அனைவருக்கும் ஒன்றுபோல வழங்கப்பட வேண்டும். பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தண்டனை கைதிகளை தமிழக அரசு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யும்போது சிறுபான்மைமுஸ்லிம் சமூகம், பெரும்பான்மை சமூகம் என்ற பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் அதன் பலனை கிடைக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசை NCHRO கேட்டுக் கொள்கிறது.

6. இதனை வலியுறுத்தும் விதமாகவும், சமத்துவத்திற்கான உரிமை (Article 14) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் எதிர்வரும் மே மாதம் NCHRO சார்பாக தமிழகத்தில் கருத்தμங்கம் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு
தி. லஜபதிராய்,
தலைவர், NCHRO தமிழ்நாடு,
Mb: 98432 51788, Email: nchrotn@gmail.com

Friday, April 18, 2008

சவுதி அரேபியாவில் மாபெரும் தமிழ் இஸ்லாமிய மாநாடு

அல்ஜீபைல் இஸ்லாமிய மாநாட்டு செய்திகள்

அல்ஜீபைல் : 18-04-2008 வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியா கிழக்கு மாகனம் அல்ஜீபைல் நகரில் செயல்படும் "இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்" (ஜீபைல் தஃவா நிலையம்) சார்பாக சார்பாக மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நடத்தப்பட்டது.


காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்களின் உரைகளுடன் இரவு சுமார் 7.00 மணி வரை நடந்தது. இதில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி சிறப்பித்தனர்

சகோதரர் முகம்மத் ஸமீம் (ஸீலானி ) அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய மாநாட்டில் முதல் அமர்வில் தலைமை உரையை சகோ. முகம்மது அஸ்ஹர் (ஸீலானி) அவர்கள் நிகழ்த்தினார்கள்


அதன் பின்னர் ரியாத்தில் இருந்து வந்திருந்த அழைப்பாளர் அவர்கள் "நபிமார்களும் அழைப்பு பணியும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் சிறப்புரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பார்வையாளர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டது.





அதன் பின்னர் அதன் பின்னர் " அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தில்" இருந்து வருகை தந்திருந்த சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் "ஹராம்-ஹலால் பேணுவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அதன் பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழச்சி நடத்தப்பட்டது.பின்னர் ஜீம்ஆ தொழுவதற்கான இடைவுளை விடப்பட்டது.

பின்னர் சுமார் 12.20 மணி அளவில் இரன்டாவது அமர்வு சகோ. ஜமால் முகம்மது மதனி அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமாகியது. இந்த அமர்வில் இலங்கையில் இஐந்து சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த சகோ. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் "ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் அந்த சிறப்புரையில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன் பின்னர் மதிய உணவுக்கான இடைவேளை விடப்பட்டு "அல்ஜீபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவத்தின்" சார்பில் வந்திருந்த அணைவருக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.




இம்மாநாட்டின் மூன்றாவது அமர்வாக சுவையான பட்டி மன்றம் ஒன்று நடத்தப்பட்து, "தற்கால முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரனம்...1) முஸ்லிம்களே 2) அந்நியர்களே என்ற தலைப்பில் சகோ. அலாவுத்தீன் பாக்கவி அவர்கள் தலைமை தாங்கி தனது சுவையான தமிழ் மொழியில் நடத்த இரு அனிகளாக பிறிந்து சகோ.ஜமால் முகம்மது மதனி, சகோ, ளாபிர் அவர்கள், சகோ. மன்சூர், சகோ. அலி அக்பர் உமரி என சுவைபட தங்கள் தரப்புக்காக வாதாடினார்கள்.




மகிழ்வுடன் நடந்த இந்த பட்டிமன்றத்திற்கு பிறகு மஃரிப் தொழுகைக்கான இடைவேளை விடப்பட்டது பின்னர் கேள்வி பதில்கள் நிகழ்ச்சி உட்பட பல போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இறுதியாக சகோ. ழமீருல் ஹஸன் அவர்கள்(மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரை வழங்க இந்த ஒரு நாள் மாநாடு இனிதே நிறைவுற்றது.

இம்மாநாட்டில் சவுதி அரேபியாவின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 1400 க்கும் மேற்ப்பட்ட தமிழ் பேச்கூடிய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சியின் இடையிடையே சுவையான தேனீர் வழங்கப்பட்டது, காலையில் அனைவருக்கும் சிற்றுன்டியுடன் தேனீரும், பின்னர் மதியம் சுவையான உணவும் பறிமாறப்பட்டன. மாநட்டிற்கான ஏற்பாடுகளை "இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நடுவம்" (ஜீபைல் தஃவா நிலையம்) செய்திருந்தது மாநாட்டின் பணிகள் அணைத்தையும் அல் ஜீபைல் தஃவா நிலையத்தின் தன்னார்வ தொண்டர்கள் மிக்ச சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு : சகோ. அபு இஸாரா / முகவைத்தமிழன்

Thursday, April 17, 2008

ஹஜ்2008 - 1,57,000 பேருக்கு அனுமதி அமைச்சர் இ.அஹமத் அறிவிப்பு!

ஹஜ்2008! 1,57,000 பேருக்கு அனுமதி! கூடுதலாய் 15,000 பேருக்கு வாய்ப்பு!!
---------------------------------------------------------------------
அமைச்சர் இ.அஹமத் அறிவிப்பு! -டாக்டர்.இமாமுத்தீன்.
----------------------------

ஜெத்தா-ஏப்ரல்16, இவ்வாண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர்.ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளரைச் சந்தித்து விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார் முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் 'வெள்ளை' வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும்.

இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும். கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும்,
சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.

நன்றி : முதுலை ஹிதாயத்

மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்

மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்.


மேலப்பாளையம் I.P.P .சார்பில் 06.04.2008 அன்று மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவில் வைத்து மார்க்க விளக்கப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேர்க்கிளம்பி J.A.Q.H இமாம் யாஸின் இம்தாதி, சமூகக் கொடுமைகள் என்ற தலைப்பிலும், மௌலவி K.S. காசீம் பிர்தௌசி, இழிவுபடுத்தப்படும் இறை இல்லங்கள் என்ற தலைப்பிலும், மீரான் தாவூதி முஸ்லிம்களும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து பயனடைந்தார்கள்.



ஏற்பாடுகளை நகர த.மு.மு.க.தலைவர் K.S..ரசூல் மைதீன், செயலாளர் மைதீன் பாதுஷா, பொருளாளர் காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், E.M. அப்துல் காதர், தக்வா ஜமாத் தலைவர் இனாயத்துல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி : நெல்லை உஸ்மான்

Wednesday, April 16, 2008

இறுதி நாளும் இன்றைய மனிதர்களும்

"இறுதி நாளும் இன்றைய மனிதர்களும்"

அஷ்ஷேய்க். முகம்மது நூஹ் மஹ்லரி அவர்கள்

Al-Sheikh. Nooh Mahlari


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். முகம்மது நூஹ் மஹ்லரி அவர்கள்

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல -MNP அறிக்கை

கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் "படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை" என்ற தலைப்பில் இசக்கி என்ற பாசிஸ்ட் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டு தமிழகத்தில் கலவர விதையை விதைக்க தினமனி முயன்றது. இதைப்பற்றிய ஒரு கட்டுரை நமது தளத்திலும் இடம்பெற்றிருந்தது. தற்போது தினமனியின் அந்த பாசிச செயலுக்கு மறுப்பு தெறிவித்து மனித நீதிப் பாசறை அமைப்பினர் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளனர் அந்த அறிக்கையில் கீழக்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

துவேஷ சிந்தனையில் சிறப்பு புலனாய்வு போலிஸார் - மனித நீதிப் பாசறை கவலை

"படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை" என்ற தலைப்பில் கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் பக்கம் 6ல் வந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது. மனித நீதிப் பாசறை தமிழகத்தில் கடந்த 2001 ம் ஆண்டு துவங்கப்பட்டது 2004ல் அல்ல. நீதிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், தேச நலனுக்காகவும் போராடுவதே மனித நீதிப் பாசறை. கடந்த பல வருடங்களாக சாதி, மத பாகுபாடு இன்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு தனி முத்திரை பதித்து வருகிறது மனித நீதிப் பாசறை.

ராணுவ பயிற்சி அல்ல

நாங்கள் வழங்குவது ராணுவ பயிற்சி அல்ல. சுதந்திர தின அணிவகுப்பிற்கான பயிற்சி ஆகும். நாட்டை காக்க ராணுவம் இருக்கும்போது அந்த வேலையை நாம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. சுதந்திர தின அணிவகுப்பு என்பது முஸ்லிம்களின் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு ஆகும்.

கோவை மாநாட்டில் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீருடை அணிவகுப்பு நடத்தியது, நெல்லையில் இளைஞரனி மாநாட்டில் தி.மு.க தொண்டரனி சீருடை அணைிவகுப்பு நடத்தியது. அதே போல்தான் மனித நீதிப் பாசறை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த இருக்கிறது.

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல

கடந்த 60 ஆன்டுகளாக சுதந்திர இந்தியாவிலும் அதற்கு முன்பு 20 ஆன்டுகளாக பிரிட்டிஷ் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் என்ற ஃபாசிச பயங்கரவாத அமைப்பு சீருடை அணிவகுப்பு நடத்தி வருகிறது. திரிசூலம் வழங்குவது, சூலாயுதம் வழங்குவது, மதுரை விவேகானந்தா கல்லூரி உட்பட பல இடங்களில் துப்பாக்கி பயிற்சி வழங்கியது, அதன் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்தது இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்காத சிறப்பு புலனாய்வு துறை மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது சிறப்பு புலனாய்வு துறையின் துவேஷ சிந்தனையை தெளிவாக காட்டுகின்றது.

துவேஷ சிந்தனையுடன் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை களையெடுக்க தி.மு.க அரசுக்கு எம்.என்.பி வேண்டுகோள்

தாங்கள் நடுநிலையுடன் செயல்படக் கூடிய அரசு ஊழியர் என்பதை மறந்து சிறுபான்மை முஸ்லிம்கள் நடத்த போகும் சுதந்திர தின அணிவகுப்பையே நாட்டுக்கு ஆபத்து என்று சித்தரிக்கும் வகையில் துவேஷ சிந்தனையோடு சிறப்பு புலனாய்வு துறை பிரிவு போலிஸார் செயல்பட்டுக் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.

சிறுபான்மை நலனில் அக்கரை காட்டும் அரசு என்று பெயர் பெற்ற கலைஞர் அரசுக்கு எதிராக முஸ்லிம்களின் சிந்தனையை திருப்பும் வேலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலிஸார் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே துவேஷ எண்ணத்தோடு உள்நோக்கம் கொண்டு செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி மீது தி.மு.க அரசு உடனே நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும் என மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது.

என்பதாக மனித நீதிப் பாசறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டள்ளது.
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template