Thursday, March 20, 2008

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம்

குடும்பம்

முஹம்மது (ஸல்) அவர்களின் கண்ணியமிக்க தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். இவர் அப்துல்லா முத்தலிபின் மகன் ஆவார். இவர்களுடைய வம்சாவளித் தொடர் ஏறத்தாழ அறுபது தலைமுறைகளைக் கடந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் nருமானார் நபி (அலை) அவர்களைச் சென்றடைகிறது. அண்ணலாருடைய குலத்தின் பெயர் குறைஷ் என்பதாகும். இது அரபுக் குடும்பங்கள் அனைத்திலும் மிகுந்த கண்ணியமும் சிறப்பும் வாய்ந்த தாகக் கருதப்பட்டது. அரபுகளின் வரலாற்றில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கண்ணியத்திற்குரியவர்களாயும் செல்வாக்குடையவர்களாயும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக நஸ்ரு, ஃபத்ஹ்ரு, குசை பின் கிலாப் ஆகியோர். குசை தமது காலத்தில் புனித கஅபாவின் நிர்வாகப் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். இவ்விதம் அவருடைய மதிப்பு இன்னும் அதிகரித்து விட்டது. குசை பெரும் பணிகள் பல ஆற்றினார். எடுத்துக்காட்டாக ஹஐ; பயணிகளுக்கு நீர் புகட்டவும் அவர்களுக்கு விருந்துபசாரம் செய்யவும் ஏற்பாடு செய்தார். இந்தப் பயணிகளை குசைக்குப் பின்னர் அவரது குடும்பத்தார் செய்து வந்தார்கள். இந்த திருப்பணிகளைச் செய்து வந்தாலும் இறையில்லம் கஅபாவின் நிர்வாகப் பொருப்பாளர்களாக இருந்து வந்த காரணத்தாலும் குறைஷிகளுக்கு அரபுகள் அனைவரிடையேயும் கண்ணியமும் முக்கியத்துவமும் கிடைத்துவிட்டிருந்தது.

பொதுவாக அரபுகளிடையே கொலை. கொள்ளை, ஆகியன பரவலாக வழக்கிலிருந்து வந்தன. அரபு நாடு முழவதும் பாதைகள் பாதுகாப்பாய் இருக்கவில்லை ஆனால் புனித காபாவுடன் இருந்த தொடர்பின் காரணத்தாலும், ஹஐ; பயணிகளுக்குச் சேவை செய்து வந்த காரணத்தாலும் குறைஷிகளின் வானிவக் குழுக்களை மட்டும் எவரும் கொள்ளை அடிப்பதில்லை. அவர்கள் அச்சமின்றித் தம் வாணிப பொருட்;களை ஓரிடத்திதிலிருந்து மற்றோர் இடத்திற்க்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

அபூலஹப்

அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு புதல்வர்கள் இருந்தனர். ஆனால் நிராகரிப்பு அல்லது இஸ்லாத்தின் காரணத்தால் அப்பன்னிருவரில் ஐந்து பேர் மிகப் பிரபலமானவர்களாய் திகழ்கின்றனர். ஓருவர் அண்ணலாரின் கண்ணியத்திற்;குறிய தந்தையாரான அப்துல்லா அவர்கள். இரண்டாமவர், இஸ்லாத்தைத் தழுவாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அண்ணலாறை பராமரித்து வந்த அபூதாலிப் அவர்கள். மூன்றாமவர் ஹம்ஸா(ரலி) அவர்கள். நான்காமவர் அப்பாஸ் (ரலி) அவர்கள் அண்ணலாரின் இந்த இரு தந்தையரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றனர். ஐந்தாமவன் அபூலஹப். இவன் இஸ்லாத்தின் வரலாற்றில் இஸ்லாத்துடன் பகைமை பாரட்டும் போக்கிற்கு மிகவும் பிரசித்தி பெற்றவனாவான்.

ஆப்துல்லாஹ், ஸஹ்ரா குலத்தைத் சேர்ந்த வஹ்ப் பின் அப்துமனாஃப் என்பவரின் மகள் ஆமினாவை மணந்துக் கொண்டார். குறைஷிக் குடும்பத்தில் இந்த ஆமினா பெரும் சிறப்பு வாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார். துpருமணத்தின்போது அப்துல்லாஹ்வின் வயது ஏறத்தாழ பதினேழு. திருமணத்திற்குப் பிறகு குடும்ப மரபுக்கேற்ப மூன்று நாட்கள் வறை அப்துல்லாஹ் தமது மாமியார் வீட்டில் இருந்தர். அதன் பிறகு தமது ஊரான 'மக்கா' திரும்பினார்.

இரண்டு மாதம் களித்து வாணிபத்திற்காக ஷாம் (சிரியா) தேசம் சென்றுவிட்டார். தம் வணிகப் பயணத்திலிருந்து திரும்பி வரும்போது மதீனா நகரில் நோய்வாய் பட்டு அங்கேயே இறப்பெய்திவிட்டார். அப்போது அன்னை ஆமினா அவர்கள் கருவுற்றிருந்தார்கள்.

பிறப்பு

ரபீஉல் அவ்வல் மாதம் 9ஆம் தேதி திங்கட் கிழமை - கி.பி. 571 ஏப்ரல் 20ஆம் தேதியின் பாக்கிய மிக்க அந்தக் காலை நேரத்தில்தான்- எவருடைய வரவால் உலகம் முழவதிலும் மண்டிக்கிடந்த இருள்கள் அனைத்தும் அகல வேண்டியிருந்ததோ, இறுதி நாள்வரை இப்பூமியில் வசிக்கும் மாந்தர் அனைவருக்கும் இப்பேரண்டத்தின் அதிபதியாம் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையான நேர்வழியின் வெளிச்சம் எவரால் கிடைக்க வேண்டியிருந்ததோ அந்தப் பெரும்பேறுடைய மாமனிதர் பிரந்தார். அவர் தந்தையோ அவர் பிறப்பதற்கு முன்பே இறையடி சேர்ந்து விட்டிருந்தார். எனவே அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப், 'முஹம்மத்' என்று பெயர் சூட்டினார்.

வளர்ப்பும் குழந்தைப் பருவமும்

அண்ணலாருக்கு அவர்களுடைய கண்ணியத்திற்குரிய தாயார் ஆமினா அவர்களே முதன்முதலாகப் பாலூட்டினார்கள். அவர்களுக்குப் பின் அபூலஹபின் பணிப்பெண் சுவைபா பாலூட்டினார்கள். அந்தக் காலத்தில் நகரத்தின் பிரமுகர்களும் செல்வந்தர்களும் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டிடவும் அவர்களை வளர்த்திடவும் கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இருந்த செவிலித்தாய்களிடம் அனுப்பி வந்தனர். அவ்விடங்களிலுள்ள திறந்த வெளிகளின் தூய்மையான காற்றை சுவாசித்த வண்ணம் வசித்து, குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் மிகத் தூய்மையான அரபி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் இவ்வாறு செய்துவந்தனர். அரபு நாட்டின் கிராமங்களில் பேசப்படும் மொழி, நகரங்களில் பேசப்படும் மொழியைவிட மிக அதிகத் தூய்மை உடையதாகவும் சிறந்ததாகவும் கருதப்பட்டு வந்தது. மேற்சொன்ன மரபுக்கேற்ப கிராமத்துப் பெண்கள் நகரத்திற்கு வந்து, அங்குள்ள குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள்.

இவ்வாறே அண்ணலார் (ஸல்) பிறந்த சில நாட்களுக்குப் பிறகு ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த சில பெண்கள் வளர்ப்புக் குழந்தைகளைத் தேடி மக்கா நகரத்திற்கு வந்தார்கள். அவர்களிடையே ஹலீமா சஅதிய்யா என்னும் பெண்மணியும் இருந்தார். இவர் வேறெந்தக் குழந்தையும் கிடைக்காத நிலையில் நிர்ப்பந்தமாக ஆமினாவின் அனாதைக் குழந்தையையே எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நற்பாக்கியம் பெற்ற பெண்மணி ஆவார்.

ஈராண்டுகளுக்குப் பிறகு ஹலீம் சஅதிய்யா அண்ணலாரைத் திரும்பவும் அழைத்துவந்தார். ஆனால் அந்த நேரத்தில் மக்கா நகரில் ஏதோ ஒரு நோய் பரவியிருந்தது. எனவே ஆமினா அவர்கள் அண்ணலாரை மீண்டும் செவிலித்தாய் ஹலீமாவுடன் மீண்டும் கிராமத்துற்கு அனுப்பி விட்டார்கள் அங்கு அண்ணலார் (ஸல்) ஏறத்தாழ ஆறு வயது வரை இருந்தார்கள்.

அண்ணலாரின் ஆறாவது வயதில் அவர்களுடைய அன்னையார் மதீனாவுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். அநேகமாக தமது கணவரின்அடக்கத் தலத்தை சந்திப்பதற்காக அங்கு அவர்கள் சென்றிருக்கலாம். ஆல்லது அங்கிருக்கும் தமது உறவினர் எவறையாவது சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம். ஆன்னை ஆமினா அவர்கள் அங்கு ஏறத்தாழ ஒரு மாதம் வரை தங்கியிருந்தார்கள். மதீனாவிலிருந்து திரும்பும்போது வழியில் அபுவா என்னும் இடத்தில் அன்னை ஆமினர் அவர்கள் காலமாகி விட்டார்கள் அங்கேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டாக்கள்.

அன்னையின் மறைவிற்குப் பின்னால் அண்ணலாரைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் அவர்கள் ஏற்றார்கள். அப்துல் முத்தலிப் அவர்கள் அண்ணலாரை எப்போதும் தம்முடனேயே வைத்திருப்பார்கள். அண்ணலாரின் எட்டாவது வயதில் அப்துல் முத்தலிப் அவர்களும் இறந்து விட்டார்கள். இறக்கும் தருவாயில் அவர்கள், தமக்குப்பின் அண்ணலாரைப் பராமரிக்கும் பொறுப்பை தமது புதலாவர் அபூதாலிப் அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அபூதாலிப் அவர்களும் அண்ணலாரின் தந்தை அப்துல்லாஹ் அவர்களும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஆவர். இந்தக் காரணத்தாலும் அபூதாலிப் அவர்கள் அண்ணலாரின் மீது அளப்பரிய நேசம் கொண்டிருந்தார்கள். அண்ணலாரின் முன்பு தம்முடைய குழந்தைகளைக் கூடப் பொருட்படுத்துவதில்லை. உறங்கும்போதும் அண்ணலாருடன் தான் உறங்குவார்கள். வெளியே செல்லும்போது அண்ணலாரை உடன் அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள்.

அண்ணலாருக்குப் பத்து அல்லது பனனிரண்டு வயதிருக்கும். அப்போது அவர்கள் சமவயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஆடு மேய்த்தும் இருக்கின்றார்கள். அரபு நாட்டில் இந்த ஆடு மேய்க்கும் பணி இழிவானதாகக் கருதப்படவில்லை. கண்ணியமும் செல்வாக்கும் மிக்க குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்கூட ஆடு மேய்த்து வந்தார்கள்.

அபூதாலிப் வாணிபம் புரிந்து வந்தார். குறைஷிகளின் வழக்கப்படி ஆண்டுக்கொருமுறை சிரியா தேசத்திற்க்குச் செண்றுவந்தார். அண்ணலாருக்குப் பன்னிரண்டு வயதிறுக்கும்போது அபூதாலிப் சிரியா தேசத்திற்;குப் பயணம் செல்ல முற்பட்டார். பயணம் செய்வதில் இருக்கும் சிரமங்களைக் கருதி அண்ணலாரைத் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆயினும் அழைத்துச் செல்லவில்லை என்றால் அண்ணலாரின் உள்ளம் நோகும் என்பதை உணர்ந்தார். அவ்வாறே அண்ணலார் அபூதாலிப் அவர்களை மறித்து, கட்டிப்பிடித்து உடன் புறப்பட முறன்டு செய்தார்கள். எனவே அவர்களைத் தம்முடன் அழைத்துச் சென்றார் அபூதாலிப்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template