Friday, May 16, 2008

தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை

குறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்றங்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.



''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES

A/C NO. SB 57991

UNITED BANK OF INDIA
OPPANAKKARA STREET BRANCH
COIMBATORE - 641001.
******************************
CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU,
KARUMPUKKADAI
COIMBATORE - 8
TEL. : 0091-422-2307673 / +91-9786093544

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template