Wednesday, May 07, 2008

மேற்குலகத்தில் இஸ்லாமிய கல்வி மேன்பாடு

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

மேற்குலகத்தில் இஸ்லாமிய கல்வி மேன்பாடு
முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த கல்வியினை மேற்குலக மக்கள் விரும்பி ஆர்வமாக படித்து வருகின்றார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து நல் உதவிகளையும் பல இஸ்லாமிய நாடுகள் மிக அமைதியான முறையில் செய்து வருகின்றன என்பதனை காணும் போது இஸ்லாம் புனித மார்க்கம் என்பது மிகவும் உறுதியாகி விட்டது.

இஸ்லாமானது கல்விக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறது, அவற்றின் நிறைகள், பண்புகள், இன்றைய காலக்கட்டத்திற்கு கல்வியானது எவ்வளவு அவசியம் என்பதினை நாம் ஒவ்வொரு தெரிந்து வைத்துக்கொள்வது கட்டாயமாக இருக்கிறது. நம்முடைய சந்திதிகள் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியினை கற்று வர வேண்டும் என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்றால் என்ன, அதன் அடிப்படைக்கொள்ளைகள் என்ன, இஸ்லாத்திற்கும் மற்ற மதத்திற்கு எத்தகைய தொடர்பு உள்ளது என்பதினை பற்றி பலவறாக மேற்குலகினர் ஆராய துவங்கி விட்டனர். தற்போது மற்ற மதங்களை விட இஸ்லாமிய மார்க்கம் பிற மதத்தினரின் மனங்களை கொள்ளை கொண்டு விட்டது. வாடிகன் தலைமையகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை என்னவென்றால், சமீப காலங்களில் இஸ்லாம் மார்க்கம் மிகவும் வேகமாக பரவி விட்டது. வருங்காலத்தில் யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் மண்ணுக்குள் புதைந்து விடுமோ.. என்று நாங்கள் பயம் படுகிறோம் என்றும் சொன்னது என்பதினை நாம் ஊடகத்துறைகள் வாயிலாக அறிந்து இருப்போம்.

மேற்குலகில் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த கல்வியினை மற்றவர்கள் கற்க வேண்டும் என்பற்காக, சவூதி அரேபியாவை சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல தன்னால் ஆன தொண்டுகளை செய்து வருகின்றன. அல்ஹம்து லில்லாஹ்..

சவூதி அரேபியா இளவரசர் அல் வாலித் பின் தலால் (Prince Al waleed bin Talal) என்பவர் துவங்கிய The Kingdom Foundation – Riyadh based charity) என்ற தொண்டு நிறுவனமானது இஸ்லாமிய கல்வியானது மேற்குலகில் பரவ வேண்டி இது வரை 100 மில்லியன் பவுண்டுகளை நிதியுதவியாக கொடுத்துள்ளது. அத்துடன், இங்கிலாந்தில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கும் (Harvard University) மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திற்கும் (Georgetown University) அவர் தன்னுடைய சொந்த பணம் பலவற்றினை இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கொடுத்து உதவி உள்ளார்.

குறிப்பாக, பாரிஸ் நகரில் உள்ள லுவ்ரே அருட்காட்சியத்திற்கு (Louvre Museum in Paris) இஸ்லாம் பற்றிய தகவல்களை திரட்ட வேண்டி 10 மில்லியன் டாலர்களை கொடுத்து உள்ளார். மற்றும் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு, தன் பொறுப்பு ஏற்று நடத்தும் The Chairman of the Kindgom Holding Company (KHC) என்ற நிறுவனம் சார்பாக 8 மில்லியன் டாலர்களை இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கொடுத்து உள்ளார்.

பிரிட்டனில் உள்ள 50த்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இதுவரை, இஸ்லாமிய கல்வி வளர்ச்சி நிதியாக 200 மில்லியன் பவுண்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளன என்று துபாயிலிருந்து வெளிவரும் கலீஸ் டைம்ஸ் என்ற தினப்பத்திரிகையானது தனது ஏப்ரல் 9, 2008 – 18 வது பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தது. நன்றி : (Khaleej Times – April 9 – 2008 Page No – 18)

கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு, பேரரசார் கொடுத்த நிதியுதவினை பற்றி பிரிட்டன் தூதர் திரு. வில்லியம் பாடே (William Patey – British Ambassador) அவர்கள் கருத்து கூறுகையில், இந்த நிதியுதவி எங்களுக்கு கிடைத்தது கண்டு மிக்க மகிழ்ச்சி, இந்த நிதியுதவினை பேரரசர் அவர்கள் நல்ல எண்ணத்துடன் கொடுத்து உள்ளார். நாங்கள் அதனை கொண்டு நாங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காகவும், இஸ்லாமிய பண்பாடுகளை பல்கலைக்கழக மாணாக்கர்களிடம் வளர்க்க வேண்டி பயன் உள்ள முறையில் செலவு செய்வோம். இதன் மூலமாக பிரிட்டனுக்கும் சவூதி நாட்டிற்கும் உள்ள நட்பு உறவானது மீண்டும் வலுப்பெறும் என்றும், பிரிட்டன் இளவரசரான சார்லஸ் (Prince Charles) இஸ்லாமிய கல்வியானது ஐரோப்பாவில் பரவ வேண்டி தனிப்பட்ட முறையில் (Particular Interest) ஆர்வம் கொண்டு ஊக்குவிக்கிறார் என்கிறார்.

பிரிட்டனில் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி, அங்குள்ள 15 த்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த கல்வியினையும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடுகளை பற்றி மாணாக்கர்களுக்கு போதிக்கின்றன.

சென்ற வருடம் இளவரசர் அல்வாலித் அவர்கள் (Prince Al Waleed) மலேஷியா நாட்டில் செயல்படும் பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு (International Islamic University of Malaysia – IIUM)
ஒரு மில்லியன் டாலர்களை அளித்து உள்ளார். மலேஷியா நாட்டில் இந்த பல்கலைக்கழகமானது 1983 ஆம் ஆண்டு செயல்பட்டு செம்மையாக வளர்ந்து வருகிறது. பல உலக நாடுகளின் நிதியுதவியுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்படுகிறது. குறிப்பாக, பங்களாதேஷ், எகிப்து, லிபியா, மாலத்தீவு, பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் தன்னால் ஈயன்ற நிதிகளை கொடுத்து வருகின்றன.


இந்த பல்கலைக்கழகத்தில் பல துறைகளை சார்ந்த கல்விகள் போதிக்கபடுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை (Information Technology), பொறியியல் துறை (Engineering), வேதி அறிவியல் (Chemical Science), கட்டுமானத்துறை (Architecture), பொருளாராதம் (Economics) போன்றத்துறைகளை பற்றிய பாடங்கள் நடத்தப்படுகின்றன. இஸ்லாமிய முதல்வர்களை (Islamic Principles) கொண்டு இந்த பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 90 நாடுகளை சார்ந்த 18,000 மாணாக்கர்கள் கல்வி பயில்கின்றனர்.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய செயல் முடிந்து விடுகிறது, ஆனால் மூன்று விதமான செயல்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன.

1. நீடித்த தர்மங்கள் (அதாவது மக்கள் காலங்காலமாக பயன் அனுபவித்து வரும் வகையிலான தருமங்கள்)
2. பயன் அளிக்கும் கல்வி
3. அவனுக்காகப் பிராத்தனை புரிந்து வரும் நல்ல பிள்ளைகள்.
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template