Wednesday, January 28, 2009

IDMK மாவட்ட அலுவலக் திறப்புவிழா நிகழ்ச்சி

IDMK மாவட்ட தலைமையகம்


கடந்த 26.01.2009 திங்கள் கிழமை அன்று இராமநாதபுரம் கேணிக்கரை கார்னரில் மையமான பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட தலைமையகம் திறப்புவிழா விமரிசையாக நடைபெற்றது. மாவட்டமெங்கும் இருந்து திரளான பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழகம் இக்பால் அவர்கள் திறந்து வைக்கிறார், அருகில் திரு.முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர், திரு. நஜ்முதீன்,திரு. அக்பர் ராஜா, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்

இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A. B.L., அவர்கள் தலைமை வகிக்க, பரமக்குடி பிரபல வழக்கறிஞர் திரு. பசுமலை B.Sc. B.L அவர்கள், திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. காமராஜ, மாநில ஊணமுற்றோர் பேரவை தலைவர், திரு. K.S. அன்வர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட வர்த்தகர் அணி செயளாலர், மருத்தவர் அணீஸ் அஹமது - இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணஜ செயளாலர், திரு. முகவைத்தமிழன் - இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் உட்பட பலர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

திரு. தமிழகம் இக்பால், திரு. ஜான் பாஷா, திரு. P.V.M அப்துல் ரசாக் ஆகியோர் உரையாற்றுகையில்


இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் மருத்துவர் பகுர்தீன் அவர்கள், PVM அறக்கட்டளையின் நிறுவனர் திரு. PVM அப்துல் ரசாக் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கீர் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாலர் திரு. நஜிமுதீன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. ஜான் பாஷா அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயளாலர் திரு. K. கண்ணன் M.B.A. M.L., அவர்கள் உட்பட பலர் வாழத்தரை வழங்கினார்கள்.

திரு. முகவைத்தமிழன் @ ரைசுதீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்குகிறார்கள் திரு. தமிழகம் இக்பால் மற்றும், மூத்த உயர் நீதி மன்ற வழக்கறிஞர் திரு. கண்ணன் M.B.A. M.L., அவர்கள், அருகில் நிர்வாகிகள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துனை பொதுச் செயளாலர் தமிழகம் S. இக்பால் அவர்கள் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்கள். அதன் பின்னர் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் முகவை சிங்கம் திரு. M. குத்புதீன் ஐபக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழச்சியின் இறுதியில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை மாநகர தலைவர் திரு. முஹைதீன் அடுமை அவர்கள் நன்றியுரை நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

திரு. அக்பர் ராஜா B.A. B.L அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் வழக்கறிஞர் திரு. கண்ணன் அவர்கள். திரு. நஜ்முதீன் அவர்களுக்கு பொனடனாடை போர்த்துகிறார் டாக்டர். அனீஸ் அஹமத அவர்கள்.


நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட தலைமை அலுவலக நிர்வாகிகளுக்கு வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. ஜான் பாஷா அவர்கள் அளித்த நினைவு பரிசினை வழங்குகிறார் மாநில தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template