இ.தே.ம.க பெயரில் தாக்கல் செய்ய முற்ப்பட்ட வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு
வேட்புமனு தாக்கல் செய்ய 3ம் நாளான நேற்று இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பில் அதன் ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஜஹாங்கீர்(40) என் பவர் வேட்பு மனு செய்ய தனது கட்சியினருடன் கலெக்டர் அலுவலகம் வந் தார். வேட்பு மனு தாக்கல் செய்ய முன்மொழிய வேண் டியவர்கள் யாரும் இல்லாததாலும், இ.தே.ம.க வின் அதிகாரப்பூர்வ கடிதம் இல்லாததாலும் அவரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது குறித்து கருத்து தெறிவித்த குத்பதீன் ஐபக் என்பவர், இது அதிகாரிகளின் சதி, நாங்கள் மீண்டும் முயற்சிப்போம் என்று கூறினார்.
முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது விதிமுறைகளை மீறி குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோர் ஆட்சியர் அலுவலக பிரதான வாசல் வரை விதிமுறைகளை மீறி வாகனத்தில் சென்றனர் ஆனால் யதார்த்தமாக எஸ்.பி செந்தில் வேலனின் வாகனம் வருவதை கண்ட குத்புதீன் ஐபக் வந்த வாகனத்தின் டிரைவர் வண்டியை நடு ரோட்டில் நிப்பாட்டி விட்டு ஓடி விட்டார். அதனால் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் கேனிக்கரை எஸ்.ஐ யிடம் எஸ்.பி என்ன வாணத்தில் இருந்து குதித்து வந்தாரா? என்று கேட்டுள்ளார்கள். இதனால் குத்புதீன் ஐபக் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குண்டுக்கட்டாக குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோரை காவல்துறையினர் வாகனத்தில் இருந்து வெளியேற்றி காவல்நிலையத்தில் காவலில் வைத்திருந்து பிறகு எச்சரிக்கை செய்து விடுவித்த சம்பவமும் நடந்தது.
Monday, April 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment