Friday, April 24, 2009

இந்திய தேசிய மக்கள் கட்சி தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்கள் பொன்னாடை அனிவிக்கிறார். அருகில் தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி, அமைச்சர் சு.ப. தங்கவேலன், திருமதி. பவானி எம்.பி ஆகியோர்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) யின் இராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள அதன் மாவட்ட அலுவலகத்தில் 15 வது மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்காக இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றக் குழு மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L தலைமை வகித்தார் அதன் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் முன்னிலை வகித்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஜாஃபர் ஆகியோர்.

கூட்டத்தின் முடிவில் பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்கேற்ப இந்த 15 வது மக்களவைத் தேர்தலில் சமுதாய நலன் கருதியும், மதவாத கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவும், சிறுபான்மை சமுதாயத்திற்கு சமூக நீதி கிடைத்திட வேண்டியும் திராவிட முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இப்பகுதி மக்களின் வாழ்வாதார திட்டமான சேது சமுததிர திட்டம் தடையின்றி நிறைவேற்றிடவும், கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்படவும், மீனவர்களின் பாதுகாப்புக்காவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் நடிகர் ரி்த்தீஸ் என்ற சிவக்குமாரை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைப்பதெனெ முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின் நிறைவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவை பாலா அவர்கள் நன்றி கூறினார்.


இப்படிக்கு

வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
இராமநாதபுரம்
தொலைபேசி : 9894262100

நன்றி : இந்திய தேசிய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணயைத்தளம்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template