தேர்தல் - முஸ்லிம்களுக்கு அல்வா
சில தினங்களுக்கு முன் ஒரு பதிவை பார்க்க நேரிட்டது முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! என்றும் அதனால் இந்த தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்குமாறும் அந்த பதிவில் கேட்டுக் கொள்ளப்படிருந்தது. தி.மு.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் யார் வருவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா?
தி.மு.க. தன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கொடுத்துள்ளது ஆனால் அ.தி.மு.க.வோ ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த்த எந்த ஒரு கட்சியையும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தன் கூட்டணியில் பல காலமாக இருக்கும் இருக்கும் முஸ்லிம் கட்சியானாலும் சரி தனக்கு வேண்டிய சீட் கிடைக்காததால் முறுக்கிக் கொண்டு போன ம.ம.க.வாகட்டும் அ.தி.மு.க. அவர்களை திரும்பி கூட பார்க்கவில்லை. ஏற்கனவே முஸ்லிம்களே இல்லாத அமைச்சரவையை நடத்திய பெருமைக்குரியவர் தான் ஜெயலலிதா
தி.மு.க.விடம் முறுக்கி கொண்டு போன எல்லா கட்சிகளின் நிலைமையையும் பார்த்தோம், கம்யூனிஸ்டுகளாகட்டும் வைகோவாகட்டும் எல்லோருமே கெஞ்சி கூத்தாடி தான் சீட்டுகளை பெற்றனர் அதுவும் அவர்கள் விரும்பிய சீட்டுகள் கூட கிடையாது. இதில் இருந்து தப்பித்தவர் ராமதாஸ் மட்டுமே அதுவும் அவர் வளர்த்து வைத்து இருக்கும் ஜாதி சங்கத்தால் மட்டுமே. அது இல்லை என்றால் அவருக்கும் இதே நிலை தான்
முஸ்லிம்களாகட்டும் ஈழம் ஆகட்டும் அல்லது வேறு யாரகட்டும் தமிழகத்தில் இரண்டே நிலைகள் தான் இங்கு ஏதாவது கிடைக்கும் அங்கு எதுவுமே கிடைக்காது. இங்கே தான் முறுக்கி கொள்ள முடியும் அங்கே போனால் சுருட்டிக் கொள்ள வேண்டும்
நன்றி : தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ
Friday, April 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment