Saturday, April 11, 2009

பா.ஜ.,வுடன் கூட்டணி* கார்த்திக் தகவல்

பா.ஜ.,வுடன் கூட்டணி* கார்த்திக் தகவல்





மதுரை : லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வுடன் அ.இ.நா.ம.க., (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி) கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் கார்த்திக் தெரிவித்தார்.


மதுரையில் அவர் கூறியதாவது:தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் கட்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திருப்பூர், நீலகிரி தொகுதிகளில் ஏதாவது ஏழு தொகுதிகளில் போட்டியிடும்.பா.ஜ., 10க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடலாம். இக்கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி இல்லாத இடங்களில் கட்சியின் மாவட்ட செயலர்கள் எந்த கட்சிக்கு ஓட்டளிப்பது என அறிவிப்பார்கள். இந்த லோக்சபா தேர்தலுடன் இக்கூட்டணி முடிந்துவிடும்.இவ்வாறு கார்த்திக் கூறினார்.

நன்றி : தினமலர்



சென்னையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template