Friday, June 05, 2009

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு முகவையில் சிறப்பான வரவேற்பு

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் அவர்கள் டெல்லியில் நடந்த பதவியேற்பு வைபவத்திற்கு பின்னர் முதல் முறையாக முகவை மாநகருக்கு இன்று வருகை தந்திருந்தார்கள். திரு. ஜே.கே ரித்தீஷ் அவர்களை திரு. முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் மற்றும் வழக்குறைஞர் திரு. அக்பர் ராஜா B.A.B.L ஆகியோர் தங்கள் நன்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சந்தித்து வாழ்த்துக்களை தெறிவித்து கொண்டனர்.

திரு. முகவைத்தமிழன், ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி உடன்

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு தி.மு.க பிரமுகர் திரு. சன்முகநாதன் அவர்கள் பொண்னாடை போர்த்துகிறார்.


இன்று இராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க ஊழியர் கூட்டத்தில் பங்கெடுத்தபின் நன்பர்கள், தோழாமை கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.தி.மு.க ஊழியர் கூட்டத்தில் அமைச்சர் சு.ப. தங்கவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுடன் வழக்குறைஞர் திரு. அக்பர் ராஜா அவர்கள்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template