Thursday, July 09, 2009

முகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் பதவியேற்பு மக்கள் வாழ்த்து

முகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவா பதவியேற்பு மக்கள் வாழ்த்து


மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு திரு. முகவைத்தமிழன் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.

இராமநாதபுரம்c,ஜுலை.09-

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக நிய மிக்கப்பட்டுள்ள டி.என். ஹரிஹரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டரை இராமநாதபுரம் மாவட்ட நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் மவட்ட சேர்மனும் பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனருமான திரு. அப்துல் ரசாக், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் செக்ரட்டரி ஆடிட்டர் திரு. சுந்தர்ராஜன், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் ஜாய்ன்ட் செக்கரட்டரி திரு. முகம்மது ரைசுதீன் ஆகியோர் நேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சென்று சந்தித்து வரவேற்று தங்கள் வாழத்துக்களை தெறிவித்து கொண்டனர். பின்தங்கிய மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை இப்பொறுப்பில் இருந்து தாம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்கு அனைவரின் முழு ஒத்துழைப்பும் தேவை என்று திரு. டி.என் ஹரிஹரன் அவர்கள் தெறிவித்தார்.

மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனர் திரு. அப்துல் ரசாக் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.

இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சித்தலைவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு :

இராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக டி.என். ஹரிஹரன் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் இன்று (9-ந்தேதி) இராமநாதபுரம் கலெக் டராக பொறுப்பேற்றார். சென்னையை சேர்ந்தவ ரான இவர் கடந்த 92ம் ஆண்டு வேலூரில் பயிற்சி துணை கலெக்டராக பயிற்சி முடித்த பின் 93ம் ஆண்டு கோவில்பட்டி, கொடைக் கானல், சைதாப்பேட்டை ஆகிய கோட்டங்களில் வரு வாய் கோட்டாட்சியராக பணியாற்றி உள்ளார். 97-ல் சென்னை வருவாய் அலுவல ராகவும், 98 முதல் 2001 வரை நாகபட்டினம் மாவட்ட வரு வாய் அலுவலராகவும் பணி யாற்றி உள்ளார்.

மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு அடிட்டர் திரு. சுந்தர்ராஜன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.



தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கொள்ளை போன ரூ.7.5 லட்சத்தை விரைந்து நடவடிக்கை எடுத்து திரும்ப பெற்று தந்த மைக்காக இவருக்கு தமி ழக அரசு சார்பில் வீரதீர செயலுக் காக அண்ணா விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக முது நிலை மண்டல மேலாளராக வும், கலால் துறை மண்டல மேலாளராகவும் பதவி வகித் தார்.

நியமனம்

2006ம் ஆண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவல ராகவும், அதைத்தொடர்ந்து சென்னையில் மாநில இணை புரோட்டோகால் அலுவலரா கவும் பணிபுரிந்தார். கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ குடிநீர் செயல் இயக்குனராக பணி புரிந்து வரும் இவர் தற்போது இராமநாதபுரம் மாவட்ட கலெக் டராக நியமிக்கப்பட்டுள் ளார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், சாய்ரித் திக், குமார் என்ற இரு குழந் தைகளும் உள்ளனர்.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template