Tuesday, September 29, 2009

அக். 4-ல் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு


அக்.4 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் 84-வது பிறந்த தின சமூக நல்லிணக்க விருது வழங் கும் விழாவிற்கு சென்னை மற்றும் செனைன புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளாக பங்கேற்கச் செய்வது என்று மாவட்ட நிர்வாகிகளின் ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வடசென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணி களின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய செயல் வீரர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் நேற்று மாலை நடைபெற்றது.

வடசென்னை மாவட் டத் தலைவர் எம். ஜெய் னுல் ஆபிதீன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட் டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, காஞ்சி புரம் மாவட்டத் தலைவர் கே.எம். அப்துல்லா பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எச். இஸ்மா யில் இறைமறை ஓதி கூட் டத்தை துவக்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப+வை முஸ் தபா அனைவரையும் வர வேற்றுப் பேசினார். இயக்கப் பாடகர் இ.வி.கே. முத்து முஹம்மது இன் னிசை வழங்கினார்.

மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநில செயலாளர் கமுதி பஷீர், இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர், மவ்லானா அப்துல் காதர் மிஸ்பாஹி, சலாஹ{தீன் அய+ப்கான், அப்துல் ரஹீம் ஆகியோர் உரையாற்றினர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹப+ப், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப் பாளர் திருப்ப+ர் சத்தார், மாநில கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் முஸப்பர் அஹமது, காஞ்சி புரம் மாவட்டச் செயலா ளர் கே.எஸ். தாவ+து, வடசென்னை மாவட்டப் பொருளாளர் கேப்டன் பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 4-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவிற்கு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளான சமுதாய மக்களை திரட்டுவது என்று முடிவு செய்யப்பட் டது. சென்னை மாநகரின் ஒவ்வொரு பகுதியிலிருந் தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உறுப்பி னர்கள் மற்றும் ஆதரவா ளர்களை அந்தந்த பகுதிக ளின் பொறுப்பாளர்கள் அழைத்து வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜும்ஆக்களில் அறிவிப்பு செய்ய முடிவு
இந்த விழாவில் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிக்கவும், ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகி கள் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசும் வழங்க இருப்பதால் ஒவ்வொரு மஹல்லாக்களிலும் உள்ள ஜமாஅத் நிர்வாகிகள் சங்கைக்குரிய இமாம்கள், ஆலிம் பெருமக்கள் அனை வரையும் இவ் விழா வில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது, ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்புகள் செய்வ தோடு, ஜும்ஆ தொழு கைக்கு வருகின்ற மக்களி டம் துண்டுப் பிரசுரம் மூலம் இந்த விழா பற்றி அறிவிப்பு செய்வது என் றும் முடிவு செய்யப்பட் டது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங் களில் விழாவிற்கு வருகை தருவோர் பச்சிளம் பிறைக் கொடியை கட்டிக் கொண்டு வருகை தர வேண்டும் எனவும், தங்கள் இல்லங்களிலிருந்து தங்கள் ஆண், பெண், உறவினர் களையும் அழைத்து வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட் டது. சென்னையிலுள்ள கல் லூரி மாணவர்களை திர ளான அளவில் இந் நிகழ்ச்சி யில் பங்கேற்கச் செய்யவும் ஆலோசனை வழங்கப் பட்டது.

முதல்வர் கலைஞர் பங்கேற்பு
இது முதல்வர் கலைஞர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் 4 மணிக்கே கலைவாணர் அரங்கத்திற்கு அனைவரும் வந்து விட வேண்டும் என்றும், சென்னைக்கு வெளியி லுள்ள பகுதிகளிலிருந்து வருகை தருகின்றவர் களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்க ளுக்கு கலைவாணர் அரங் கத்தில் இருக்கைகளை ஏற்பாடு செய்து தர வேண் டும் என்று கேட்டுக் கொள் ளப்பட்டது.

இவ் விழாவை முன் னிட்டு சென்னையில் விளம்பர தட்டிகள், கேபிள் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பு, கொடி தோரணங்கள் கட்டுதல் போன்றவைகளை செய் வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வட சென்னை
இக் கூட்டத்தில் வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ரப்பானி அப்துல் குத்தூஸ், துறைமுகம் ப+க் குளம் கப+ர், பஸல், இம் ரான், ஜே. மக்ரூப், ராயபுரம் காதர் பாய், ஜாபர், வண்ணை நாசர், எம். காதர் ஷா, பெரம்ப+ர் எம்.ஏ. உஸ்மான் அலி, ஹாரிஸ், ப+வை காதர், ஏ. ஹைதர் அலி, ஜே. ஜாஹீர், ஏ.கே. முஹம்மது ரபி, கஜினி, ஆவின் சாகுல், காதர் பாஷா, ஆர்.கே. நகர் ஹனீபா, கே.எம். யாஸின், சுலைமான் ஆலிம், திரு.வி.க. நகர் இர்பான், எம். முஸ்தபா, ஷெரீப், ஆர். ஜானுல்லா, கே. அப்துல் கபார், ஜே. முஹம்மது சலீம், வில்லிவாக்கம் ஷேக் தாவ+து, ரஹ்மானியா ஆட்டோ சங்கம் பரக்கத், நாசர், தென் சென்னை மாவட்டம் ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், கிண்டி மேத்தப்பிள்ளை மரைக்காயர், வி.என். அப்துல் ஜலீல், ஐ. முஹம் மது சலாஹ{தீன், எச். முஹம்மது சுபைர் பாஷா, எம்.எஸ். அப்துல் வஹாப், மேத்தா நகர் அப்துல் ரஹீம், ஹைதர் அலி கான், ஏ.எச். கான், கே.எம்.ஓ. நூருல் மியான், எம்.எஸ்.ஒ. அய்ய+ப்கான், கௌஸ் பேக், சேப்பாக்கம் ஆலம்கான், மீரான் முகைதீன், ஓ.எம். சாகுல் ஹமீது, கலீமுல்லா கான், திருவல்லிக்கேணி நாசர், கே.எம்.ஓ. நாகூர் மீரான்

காஞ்சிபுரம் மாவட் டம் - மாவட்ட அமைப்புச் செயலாளர் புதுப்பட்டி னம் ஜாஹீர், மாவட்டப் பொருளாளர் எஸ். அப்துல் ஹலீம், பொதுக் குழு உறுப்பினர் ஏ. அஸ் லம் பாஷா, காஞ்சி நகரத் தலைவர் எஸ்.எம். அப்துல் குத்தூஸ், செயலாளர் மக்ப+ல் பாஷா, பொருளா ளர் கே.எஸ். உஸ்மான், காஞ்சி ஒன்றியச் செயலா ளர் ஏ.எம். முஹம்மது அலி, தாம்பரம் அப்துல் ரஷீத், பனைய+ர் ய+னுஸ், ஷேக் அப்துல் காதர், முஸ்தபா, குர்ரான், அப்துல் அலி, பேரூர் முஹம்மது அப+பக் கர், இளைஞர் அணி எம். முஹம்மது ய+னுஸ், சர்தார் பாஷா, ஏ. ஆஸிப், ஷரீப், அப்துல் காதர், அன்சாரி, ஆரோக்கிய சுந்தரனார் உள்ளிட்ட முஸ்லிம் லீக் முன்னோடிகள், அணி களின் நிர்வாகிகள், இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=138

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template