Saturday, September 05, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கேசென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள். முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.
மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய பொதுச்செயலாளர்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template