Saturday, October 10, 2009

சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மரணம்

அன்பு நண்பர்களுக்கு,

நம்முடைய நெருங்கிய நண்பரும், சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான ஜனாப். அப்துல் மாலிக் அவர்கள், இன்று மதியம் 4: 45 மனி அளவில், ஜெத்தாவில், மாரடைப்பினால் மரணமடந்த செய்தியினை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். (إنا لله وإنا إليه راجعون ) .

அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அவருடன் ஜெத்தாவில் வசித்து வருகின்றனர்.

அன்னாருடைய மறைவினைத் தாங்கும் மன உறுதியினை அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்கிட, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அவருடைய பிழைகளை மன்னித்து அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை அருளிட எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!


ஆழ்ந்த வருத்தத்துடன்,
அப்பாஸ் ஷாஜஹான்
செயளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template