Sunday, November 01, 2009

யார் பொய்களின் மொத்த உருவம்? - அப்துர்ரஹ்மான் மண்பஈ

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

சகோதரர் பீ.ஜைனுல் ஆபீதீன் அவர்களின் இணையதளத்தில் வெளியான தவறான தகவல்களுக்கு பதிலளித்து நான் எழுதியவற்றுக்கு அப்துர் ரஹ்மானின் அறியாமை என்ற தலைப்பில் மறுப்ப எழுதியிருக்கிறார்கள். அதில் தனக்கே உரிய பாணியில் பல பொய்களையும் சமாளிப்புகளையும் பதிய வைத்திருக்கிறார்கள்.

என் பெயரை எழுவதிலேயே பரிகாசம் செய்து அப்துர்ரஹ்மான் மண்பை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு பதிலாக நாமும், ஜைனுல் ஆபீதீன் 'உளறி' என்று குறிப்பிடலாம், ஆனால் நாம் அவருடைய தவறான வழி முறையை தவிர்க்கிறோம்.

மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்களை விமர்சி;க்கும் போது துவக்கத்திலேயே அபத்தமானது என்று மட்டம் தட்டுவார்கள். இதை அவரது எழுத்துக்களை படிப்பவர்கள் கவனித்திருப்பார்கள். விசயத்திற்குள் செலவதற்கு முன்பே, வாசகரின் மனதில் எதிராளியைப் பற்றி தவறான எண்ணத்தை நுழைக்கும் வேலை தான் இது, எனது நியாயமான ஆக்கம் பற்றியும் முதல் பாராவிலேயே இரண்டு தடைவை அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களின் தவறான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதையெல்லாம் அபத்தமானது என்றுதான் எழுதுவார்கள்!

ஆப்துர்ரஹ்மான் அறிமுகம் என்று தலைப்பிட்டு என்னைப் பற்றிய பல தவரான தகவல்களை அள்ளி இறைத்ததுள்ளார்கள்.கடையநல்லூர் மதரசாவில் எனக்கு வேலை இல்லை என்று சொன்னதால் அவர்களுக்கு எதிராக எழுதுவதாக எழுதியிருக்கிறார்கள். இதுவே பெரிய பொய். ஏன்னை அவர்களிடம் பணியாற்றுவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் நானாகத்தான் ஒதுங்கிக்கொண்டேன். அப்போது சில மாதம் கழித்து தொண்டியில் TNTJயின் சிலர், வேலை இல்லை என்று சொன்னதால்தான் பீ. ஜைனுல் ஆபிதீனை எதிhக்;கிறான.; என்று சொன்ன போது M.I. சுலைமானிடம், நானே நேரடியாக போனில் பேசினேன். ஆப்போது நீங்கள் என்னை ஆசிரியராகப் பணியாற்ற எதிர்பார்த்திருந்த போது நானாகத்தான் வராமல் இருந்தேன். இப்போது என்னைப் பற்றி இங்கு தவறான செய்தியைச் சொல்கிறார்களே என்று கேட்ட போது, நீங்களாகத்தான் வரவில்லை ஊரில் உங்களைப் பற்றி தவறாக பேசுபவர்கள் அவர்களாகப் பேசுகிறார்கள் என்றார்.

இப்போது இவர்கள் இப்படி எழுதியிருப்பதிலிருந்து இந்தப் பொய்யை அவிழ்த்துவிட்டது ஜெய்னுல் ஆபிதீன்தான் என்பது தெளிவாகிவிட்டது.

TNTJ யில் நான் பொறுப்பிலிருக்கும் போதே சகோதரர் அவர்களின் தவறான கருத்துக்களுக்கு மாற்று கருத்து கூறியுள்ளேன். என்பது அவர்களுக்கும் மற்ற சகோதரர்களுக்கும் தெறியும்.

கொள்கைவாதி வேலை?

ஒரு இயக்கத்தில் இணைந்திருப்பது எதற்காக? ஒரு லட்சியத்தை அடைவதற்கு சேவை செய்யத்தான். அந்த இயக்கத்தில் மிகச் சிலருக்கு வருவாய் வருகிற வேலை இருக்கலாம். வேலை இல்லை. என்று சொன்ன காரணத்துக்காக அந்த இயக்கத்தின் தலைவரின் கொள்கைகளை எதிர்ப்பது என்பது, வினோதமான அற்பத்தனம், இது நம்மிடம் இல்லை.

அவர்களிடம் இருக்கிறது என்பதற்கு அவர்களின் எழுத்துக்களே ஆதாரம், எனக்கு கொள்கையளவில் ஒத்துவரும், ஜமா அத்தில், ஒரு கொள்கைவாதி வேலை கேட்பாரா? அதுவும் அக்கொள்கையைப் போதிக்கும் மதரஸாவில் வேலை கேட்பாரா? என்று கேட்டிருக்கிறார்கள்.


நீங்கள் குறிப்பிடும் இயக்கத்திலோ வேறு எந்த இயக்கத்திலுமோ கொள்கைவாதி வேலை' என்று ஒன்று இல்லை. வருவாய்க்காக கொள்கை வாதியாக இருப்பது உங்களிடம் இருக்கிறதென்று தெரிகிறது. நீங்கள் ஒரு பெரிய அறிஞராக இருந்தும், உங்களின் குர்ஆன் ஹதீஸூக்கு எதிரான போக்கினால் மிக மோசமாக இடறி விழுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் இயக்கத்தின் மதரஸாவில் ஆசிரியராக இருக்க என்னை அழைக்கத்தான் செய்கிறார்கள்.

அரபுக்களை ஏமாற்றி பணபறிக்கும் நிறுவனம் என்று அபாண்டப் பழி போட்டுள்ளார்கள் மார்க்கப்பணி செய்கிறோம் என்று பிறரை ஏமாற்றவும், கொள்கையை விட்டுக் கொடுத்து நயவஞ்சகத்தனம் செய்யவும் வேண்டிய நிலையிருந்தால் நான் அந்த வேலையை செய்ய மாட்டேன், அல்லாஹ் அனுமதித்துல்ல எத்தனையோ, தொழில்களும,; வேலைகளும் இருக்கின்றன் அதை செய்து அல்லாஹ்வின் ரிஸ்கை தேடிக்கொண்டு என்னால் இயன்ற மார்க்கப் பணியை செய்து கொள்வேன்.

சவூதியிலிருக்கும் போதும் இந்தியா வந்த பின்பும் அப்படி நான் செயல் பட்டுள்ளேன். என்பது உங்களுக்கும் தொண்டியிலுள்ளவர்களுக்கும் தெரியும்.

ஆனால் யார் ஏய்த்துப் பிழைப்பார்?

சொந்த ஊரில் லட்சக்கணக்கில் செலவழித்துக்கட்டிய வீடு இருந்தாலும் எங்களைப் போன்றோரின் சம்பளத்தை விட கூடுதலான வாடகைக்கு வீடு எடுத்து சொகுசாக தங்கியிருப்பவரும், சொகுசு வாகனங்களில் பவனி வருபவரும், மார்க்கப்பணி செய்யக்கூடிய சகோதரர்கள் மீது அவதுறு கூறி அவர்கள் போடும் மான நஷ;ட ஈடு வழக்கை எதிர்கொண்டு பல ஆயிரங்களையோ லட்சங்களையோ செலவு செய்பவரும் தான் ஏய்த்துப்பிழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதற்கெல்லாம், தன் பேச்சில் மயங்கிய பணக்காரர்களை ஏய்த்தாக வேண்டும்.
உலக லாபத்திற்காக கொள்கையில்லாமல் செயல்படுவதாக பல தவறான தகவல்களை என் மீது அள்ளித் தெளிக்கிறார்கள் ஜைனுல் ஆபீதீன் அவர்கள்,

குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இவர் அவிழ்த்து விடும் மார்க்க விரோதக்கருத்துக்களை எதிர்க்கும் பல பெரிய மார்க்க அறிஞர்களையும் இவ்வாறே பேசுகிறார். இது அபாண்டப் பழியும், தன் தவறுகளைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கான தந்திரமும் ஆகும்.

முனாஃபிக் என்றும் அடிமை என்றும் அநியாயப் பழி போடுகிறார்.

தன்னிடம் இருப்பவர்கள் போல் :

இவர் தன்னிடம் இருக்கும், உலக லாபத்திற்காக முனாஃபிக் தனம் செய்யும் கும்பலை போல் மற்றவர்களையும் சித்தரிக்கிறார்.

இவரிடம் இருப்பவர்கள் பற்றி இவரே அவ்வாறு எழுதியிருக்கிறார். நடைமுறை நிகழ்வையும் ஆதாரமாகத்தருகிறேன். இவர்;கள் இப்போது முக்கிய பதவியில் வைத்துள்ள ஒருவர் துபை சென்றிருக்கும் போது அங்கிருகக்கூடிய அவருடைய வகுப்புத் தோழர் மார்க்க விரோதப் போக்குள்ள ஒரு இயக்கத்தில் நீ ஏன் இருந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டதற்கு, நான் வேறு இடத்தில் இருந்தால் இங்கு கிடைப்பது போல் கூடுதல் சம்பளம்;; கிடைக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் அதே நபர், தொண்டி விவாதத்திற்குப்பின் திருச்சியில் ஜூம்மா பிரசங்கத்தில், மிம்பரில் நின்று கொண்டு, முஜிபுர்ரஹ்மான் விவாத மேடையிலேயே அழுது தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். என்று பேசியிருக்கிறார். அதைக் கேட்ட விவாதத்தை நேரில் பார்த்த ஒருவர். விவாதத்தை நேரில்; பார்க்காத நீங்கள் சிடியில் பார்த்தீர்களா? நீங்கள் சொன்னது போல் நடக்கவில்லையே என்று சென்னதற்கு நான் சிடியை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பீ.ஜே.க்கு சப்போர்ட்டாகத்தான் பேசுவேன் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த தவறான நயவஞ்சகப்போக்கை கண்டித்து அந்த சகோதரர் ஒரு நோட்டீஸ்ஸும் வெயியிட்டிருக்கிறார்.

இதிலிருந்து காசு பணத்திற்காக நயவஞ்சகத்தோடு அடிமையாயிருக்கும் கும்பல் எங்குள்ளது என்பதை தெறிந்து கொள்ளலாம்.

தன் சகோதரி திருமணச் செலவுக்காக கூடுதலாக தேவைப்பட்ட பணம் துயுஞர் ல் கிடைக்காமல் போய் உங்களிடம் கிடைத்ததும் உங்களோடு ஒட்டிக்கொண்ட கொள்கை குன்றுகளும், பள்ளிவாசல் பணத்தை லட்சக்கணக்கில் மோசடி செய்து உங்களால் காப்பாற்றப்படக் கூடியவர்களும் உங்கள் ஜமாத்தில் மேலாண்மை செய்து கொண்டிருக்கையில், மார்க்க காரணத்திற்காக உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்ட என்னைப் போன்றவர்களை முனாபிஃக்குகள் என் கூறுகிறீர்கள்.

இது. நீங்கள் வாய் கிழிய பேசும் குர்ஆன் ஹதீஸூக்கு நீங்கள் மாறு செய்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி, 'குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் நல்லறிஞர்களுக்கு' இது தகுதியல்ல.

ஏன்னைப்பற்றி இன்னும் பலபொய்களை எழுதிவிட்டு தகுந்த காரணத்ததுடன் என்னை டேமேஜ் பண்ணுவதாக எழுதியிருக்கிறார்கள். பீ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள். இவர் மார்க்கத்திற்காக உழைக்கும் எத்தனையோ நல்லறிஞர்களையும், பிரச்சாரர்கர்களையும் இழிவு படுத்தியும் மட்டம் தட்டியும் பேசுவதையும் எழுதுவதையும் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் நடத்திய தஞ்சாவூர் மாநாட்டில் ,இவர்களின் சத்தியமான(?) வழியிலிருந்து பணத்தாசை மற்றும் உலக ஆசாபாசங்களுக்காகவும் வழி தவறிப் போனவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலை, வெளியிட்டடிருந்தார்கள். அந்த பட்டியலிலுள்ள பலர் குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இவர் அவிழ்த்து விடும் வழிகேடுகளுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள். அது மட்டுமின்றி வெளிநாட்டிலுள்ள நல்ல மார்க்க அறிஞர்களை கூட இவரின் வழிமுறைப்படி அபாண்டமாக இழிவு படுத்தி பேசாமல் விட்டதில்லை.
இப்படியிருக்கையில் என்னைப் போன்றவர்கள் பற்றி இப்படிக் கேவலாக எழுதுவது பெரிய விசயமில்லை.

என்னை அறிமுகப்படுத்துவதாக கூறிக்கொண்டு பீ.ஜைனுலாப்தீன் அவர்கள் பொய்களை எழுதியதும் நன்மையாக முடிந்துவிட்டது.இவர் பொய்யர் என்று விமர்சிக்கபபடுவதை நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இவரின் புதிய நெருக்கமான உறவுகள் எல்லாம் இவர் மகா பொய்யர் என்று உறுதியாக தெறிந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்



என்னை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர் எழுதியவை அவரே கேவலப்பட காரணமாகிவிட்டது .நீங்கள் புத்திக் கூர்மையுள்ள பெரிய அறிஞர் என்றாலும் ணே;டுமென்றே தவறான போக்கை தொடர்ந்தால் அல்லாஹூத்தாலா தகுந்த நேரத்தில் சிக்க வைத்துவிடுவான் என்பதை குறிப்பாக பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கும் பொதுவாக மற்றவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

மார்க்க விசயத்தில் தாங்கள் புகுத்தியுள்ள தவறான கருத்துக்களை திருத்திக் கொள்ளவும.; மார்க்கப்பணியில் ஒன்றாயிருந்து பிரிந்த சகோதரர்கள் மீது தாங்கள் சுமத்தியுள்ள பழிகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கவும் காலம் கடந்துவிடவில்லை. அல்லாஹ் விதித்த தவணை வந்துவிட்டால் காலம் கடந்ததாகிவிடும் இந்த எனது வார்த்தைகளையும் அலட்சியப்படுத்தி பரிகாசம் செய்யப்போகிறீர்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மக்கள் ஆடு மாடுகள் மாதிரி;


'மக்கள் ஆடு மாடுகள் மாதிரி' என்று பீ. ஜெய்னுல் ஆபிதீன் தான் கூறியதை மறைப்பதற்காக எவனோ ஒரு டிரைவர் சொன்னானாம். எனறுதிசை திருப்புகிறார்.அதோடு நாம் அப்படிச் சொலவதாகவும் பேச்சைமாற்றுகிறர்.

மக்கள் ஆடு மாடுகள் மாதிரி என்று பீ. ஜெய்னுல் ஆபிதீன் சொன்னது முன்னால் TNTJ மாநில செயலாளர் சகோதரர் கோடடூர் ரஃபீக் அவர்களின் டிரைவர் அப்பாஸ் அவர்களிடம் தான் சகோதரர் ரஃபீக் அவர்களின் உத்தரவுப்படி சில வருடங்களுக்கு முன்னால் பீ.ஜெய்னுக்காக அப்பாஸ் இரவு பகலாக வண்டி ஓட்டி இருக்கிறார்.

இதையெல்லாம் என்னிடம் தெரிவித்தது கோட்டூர் ரபீஃக் அவர்கள் தான். உங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டவன் தான் இதையெல்லாம் சொல்லியிருப்பான் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கோட்டூர் ரபீஃக் அவர்கள், TNTJ தலைமையின் போக்கு சரியில்லை என்று தலைமை நிர்வாகிகளிடமே (நீங்கள் உட்பட) கடுமையாக கண்டித்துவிட்டு உங்களிடமிருந்து விலகிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

தங்களைச் சார்ந்த மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைத் தங்களுக்கு இருப்பதால் தான் எனக்கு பதில் சொல்வதாக வாதம் பதில், வாதம் பதில், என்று தலைப்பிட்டு ஏதேதோ எழுதியிருக்கிறீர்கள். விவாதத்தில், தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் சமாளித்துவிட்டு, விவாதத்திற்குப்பின் திருத்தியருப்பதை சுட்டிக்காட்டி பி.ஜெய்னுவின் தோல்வியை எடுத்துக்காட்டியிருந்தேன். அதற்கு பதில் சொல்லப்புகுந்த அவர், நான் மறுத்து பதில் பேசினேன் என்று ஒப்புக்கொண்டார். அதனல் நான் தோல்வி அடையவில்லை என்று வihந்திருக்கிறார்கள் பீ. ஜைனு அவர்கள்.; மறுத்ததைமட்டும் நான் சொல்லவில்லை. பீ. ஜைனு சமாளித்தார் என்றும் சொல்லியிருக்கிறேன்.

சரி, ஒருவர் விவாதத்தில் மறுத்துப்பேசி சமாளித்துவிட்டால், அவர் வென்றுவிட்டார் என்று அர்த்தமா? அப்படியானால் களியக்காவிளையில் உங்களுடன் விவாதம் நடத்திய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி குழுவும் பதில் பேசி சமாளிக்கத்தான் செய்தது. அவர்கள் வெற்றி பெற்றவர்களா?

விவாதத்தில் அவர்கள் பேசி சமாளித்தாலும், கருத்து அடிப்படையில் அவர்கள் தோல்வி அடைந்தவர்கள். (உங்கள் தரப்பில் சில சில்லரைத்தனமான பேச்சுக்கள்குறையாக இருந்த போதிலும்) ஆனாலும் அவர்கள் விவாதம் முடிந்தபின் தாங்களே வென்றதாக வெற்றிவிழா கூட்டங்கள் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

அதே போலவே தொண்டி விவாதத்தில் பேசி சமாளித்த நீங்கள் கருத்து அடிப்படையில் தோற்று இருக்கிறீர்கள். ஷேக் அப்துல்லா ஜமாலி வென்றாக ஆர்ப்பரித்தது போல் நீங்கள் பரையடித்துக் கொணடிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.

(நீங்கள் திருத்தம் செய்துள்ள பிறகும் என்னென் தவறான வியாக்கியானம் கொடுத்துக் கொணடிருக்கிறீர்கள் என்பது பற்றியும் முன்பு தில்லு முல்லு செய்த வேறு சில ஹதீஸ்களில் விவாதத்திற்குப் பின் எப்படி திருத்தம் செய்துள்ளீர்கள் என்பது பற்றியும் தனியாக எழுதுகிறேன்)


பொய்களின் மொத்த உருவம்

எனக்கு பதில் சொல்கின்ற,, என்னைப் பற்றி எழுதுகிற கட்டுரையிலேயே என் விசயத்தில் பொய்களை எழுதிவிட்டு, என்னை நோக்கி, 'பொய்களின் மொத்த உருவம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த விசயத்தில் உங்களின் அபார துணிச்சல் கண்டு ஆச்சரியப்படுகிறேன். கோயபல்ஸ்ஸயே மிஞ்சிவிட்டீர்கள்.

இந்த துணிச்சலால்தான் சிடியை எடிட்செய்துவிட்டு வீராப்பு பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் பதில் எட்டு என்று எழுதியுள்ளவற்றி;ல் நீங்கள் சிடியை எடிட் செய்துள்ளதை ஒப்புக் கொள்வது தெளிவாக தெரிகிறது.

ஏன்னைப்பற்றி என்னிடமே மகா பொய்களை அவிழ்த்துவிடும் நீங்கள் முஜிபுர்ரஹ்மானின் பொய் பித்தலாட்டங்களை பட்டியலிடப்போவதாக மிரட்டியிருக்கிறீர்கள். ஏன்னைப்பற்றி என்னிடமே பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் நீங்கள் அடுத்தவர் பற்றி இன்னும் அதிகமாக அவிழ்த்துவிட முடியும்! ஒரு வேளை முஜிபுர்hஹ்மான் பித்தலாட்டம் செய்தால் அவரையும் கண்டிக்கவும் இயன்றால் தண்டிக்கவும் செய்வேன் ஏனென்றால் எனக்கு அதிக அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்த உங்களை மார்கத்தில் தாங்கள் செய்யும் தில்லு முல்லு, கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீது தாங்கள் பழிபோட்டு பேசுவது போன்ற காரணங்களால்த்தான் எதிர்க்கத் துணிந்தேன்.

உங்களை எஜமானர்களாக கருதுபவர்கள் உங்கள் தவறுகளை நியாயப்படுத்தி பேசும் நிலையில் இருக்கிறார்கள். ஏன்னையும் அது போல் அடிமையாக சித்ததரித்து இருக்கிறீர்கள்;.

ஜமாத் பொறுப்பாளர்கள்

உங்கள் பொறுப்பாளர்களின் முறையற்ற நடைமுறையை நான் குறை கூறியிருந்ததை மறுத்து அவர்களின் முரட்டுத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். அமைதியாக பேசவிட்டிருந்தால் உண்மைகள் வெளிபட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதை அப்போது நீங்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது.

விவாதத்திற்கு பணம் செலவழித்ததால் கோபப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக சொல்கிறீர்கள் .பீ.ஜெய்னுலாபிதீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நலமாக திருப்பி அனுப்பப்பட்டது தெரிநந்தும் வரவேற்க தனி வண்டி எடுத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கு மேல்செலவு செய்து ஏறத்தாழ ஐநூறு கிலோமீட்டர் பயணம் சென்று, பணத்தை கணக்குப்பார்த்து அக்கரையோடு(?) செலவழித்த பொறுப்பாளர்கள் அல்லவா? அவர்கள் (இதை உங்கள் ஜமாஅத் முன்னால் மாவட்ட பொறுப்பாளர் சொன்னார்.) உங்கள் கட்டு உரைப்படி விவாதத்தில் தோல்வி அடைந்து கண்ணீர் வடித்து அழுத ஒருவருடன் பேச இன்னொரு முறை பணத்தை செலவழிகத்தான் அந்த முரட்டுத்தனமா?


முஜிபு ஓடி ஒளிவதாக எழுதியுள்ளீர்கள். தொண்டி விவாதத்திற்கு முன் நீங்கள் ஓடி ஒளிந்து கொண்டிருந்தீர்கள். இப்போது அவர் ஓடி ஒளிவதாக எழுதியிருக்கிறீர்கள்.எனக்கு உங்களைப்போன்று கட்டு உரைகளெல்லாம் தொகுக்க தெரியாது. நானறிந்து அவர் கலந்துரையாடலுக்கு தயாராகவே இருந்தார். நான் உங்களுக்கு நினைவு திரும்பியது பற்றி எழுதிய ஆக்கத்திலேயே நீங்கள் அழைக்கும் போது என்ன பேச திட்டமிட்டிருந்தார் என்று எழுதியிருந்தேன்.

முன்பு நினைவு திரும்பிய ஜெய்னுல் ஆபிதீன் என்று நான் தலைப்பிட்டிருந்ததற்குக் காரணம், நீங்கள் சொகுசு காரில் செல்வதை விட்:டு சொகுசு பஸ்ஸில் பயணிப்பதற்கு நின்ற நேரத்தில் முஜிபுர்ரஹ்மான் உங்களை எதார்த்தமாக சந்தித்த போது அப்துர்ரஹ்மான் எஸ்.பி. பட்டிணம் பள்ளி பற்றி நோடடீஸ் வெளியிட்டதால் தான் இப்போது தாக்கி எழுதுவதாக கூறியிருக்கிறீர்கள். அதனால் தான் அந்த தலைப்பு வந்தது.

நான் எழுதுவதற்கு பதில் எழுவதற்காக காத்துக்கொண்டிருப்பதாக மார்தட்டியிருக்கிறீர்கள், உண்மைதான் கருத்து வேறுபாடு கொண்ட சகோதரர்கள் மீது பழிபோட்டு எழுதுவதும் கேவலமான வார்த்தைகளாலும் இழிந்த நடையாலும் பரிகாசம் செய்து மட்டம் தட்டி பேசுவதும் எழுதுவதும் உங்களுக்கு கை வந்த கலை.

ஏன்னைப் பற்றி நீங்கள் கூறும் தவறான விமர்சனங்களுக்கு பதில் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் நீங்கள் மார்க்க விசயத்தில் செய்துள்ள, செய்துகொண்டிருக்கிற தவறுகளை அடையாளம் காட்டி எழுதுவதை நிறுத்தப்போவதில்லைஇன்ஷா அல்லாஹ்.

நான் கூலிக்கு மாரடிப்பதாகவும் --- உங்களுடன் இருப்பவர்களைப்போல --- அந்த வேலை இல்லாமல் போய்விடும் என்றும் கடைசியாக எச்சரிக்கும் விதத்தில் எழுதியுள்ளீர்கள். அல்லாஹ்வின் கிருபையால் நான் கூலிக்கு மாரடிப்பவனில்லை. தொண்டியில் எனது சிறு பணிகளால் குர்ஆன் ஹதீஸ் பேசும் உங்களை போன்ற வழிதவறியவர்கள் பற்றி மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள். இங்கும் பணி தொடர்வதோடு தலைநகரம் வந்து பணி செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். அங்கு அந்தப்பணி தொடரும். (இன்ஷா அல்லாஹ்) எதிர் பாருங்கள்.

எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவூட்டும் அல்லாஹ்வின் வசனம்: 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் .ஒவ்வொருவரும் நாளை (மறுமை)க்காக எதனை முற்படுத்தி வைக்கிறார். என்பதை கவனித்துப்பார்க்கவும்:' (59:18)

2 மறுமொழிகள்:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தாங்கள் என்ன எழுதி உள்ளீர்கள் என்பது புறியவில்லை.

தெளிவாக விளக்கவும்.

வஸ்ஸலாம்

Anonymous said...

what you want to say is not clear. You tell your points clearly one by one, so that we can understand your position
I as a normal humanbeing, unable to understand your wordings. I repeat, please clearly spell your words..........
Waiting for your reply through this blog.

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template