Wednesday, May 05, 2010

த.மு.மு.க வினர் 6 பேர் பலி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஊன்)


கரூர் : கரூர் அருகே, கார் மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர் உட்பட, ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). மனிதநேய மக்கள் கட்சி நீலகிரி மாவட்ட செயலர். இவருடன், ஊட்டி நகர செயலர் சையது சாதிக் (37), நிர்வாகிகள் அப்துல் கனி (42), யாசான் (22), மஸ்தீன் (32), சபியுல்லா (32) ஆகியோர், நேற்று முன்தினம், ஹூண்டாய் சான்ட்ரோ காரில், ஊட்டியிலிருந்து திருச்சி சென்றனர். பின், மீண்டும் ஊர் திரும்பும்போது, நேற்று காலை 10.30 மணியளவில், மயிலம்பட்டியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில், சரசம்பட்டி என்ற இடத்தில் வந்த போது, பாளையத்திலிருந்து அரியலூருக்கு ஜல்லிச் ஏற்றி சென்ற, டாரஸ் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில், பல அடிதூரம் இழுத்து செல்லப்பட்ட கார், அப்பளம் போல் நொறுங்கியதுடன், சாலையோர பள்ளத்தில் தள்ளப்பட்டது. நிலைதடுமாறிய லாரியும் கவிழ்ந்தது. லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு படையினர், காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர்

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template