Monday, May 12, 2008

தினமனியில் வந்த விளம்பரம் - பஸ்லுல் இலாஹி (மீள் பதிவு)


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்கினார்களா?

ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே இஸ்லாமிய இணையப் பேரவையில் முஸ்லிம் விரோத தினமணியின் பித்தளாட்டத்தையும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களையும் கண்டித்து ""அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?"" ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உயர் திரு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. முதற்கண் உங்கள் மீது ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உண்டாகச் செய்வானாக என்ற வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். 14.10.2007 அரசியல் அரங்கம் எனும் தலைப்பில் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன் என்பவர் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி என்ற பெயரில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அவரைப் பற்றி அவர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்து கொள்ள விரும்பினாரோ அந்த விளம்பர வாசகங்களை அப்படியே அவரது பேட்டி போல் வெளியிட்டிருந்தார்கள். தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உண்டு. அதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால்தான் இந்த கண்டன மடல்.

அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா?

முன்னதாக நீங்கள் செய்துள்ள அறிமுக வாசகங்கள் கூட உங்களுடையது அல்ல. விளம்பரத்துக்காக அவர்கள் எழுதி தந்துள்ளதையே நீங்கள் அறிமுகம் செய்வது போல் இடம் பெறச் செய்துள்ளீர்கள். விளம்பரம் என்றாலே அவர்கள் எழுதி தருவதைத்தானே போட முடியும். ஜைனுல் ஆபிதீனின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு நூல் விளம்பரத்துக்காக சினிமா நடிகர் விஜய டி ராஜேந்தரைக் கொண்டு விளம்பரம் தயாரித்தார்கள். இதுவரை வெளி வந்த திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளிலேயே இதுதான் சிறந்தது என்று அவரை பேச வைத்தாhகள்;. இதுவரை வெளி வந்துள்ளதில் இதுதான் சிறந்தது என்று டி ராஜேந்தர் சொல்வதாக இருந்தால் இதுவரை வெளி வந்துள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகள் அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா? என்று அறிவுள்ளவர்கள் கேட்டார்கள். அதன் பிறகு அந்த விளம்பரத்தை நிறுத்தினார்கள். இந்த மாதிரிதான் உங்கள் அறிமுக எழுத்துக்ளும் உள்ளன.

பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள்.

எல்லா மதத்தினரையும் ஜாதியினரையும் கொண்ட தி.மு.க, அ.தி.மு.க. நடத்திய நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் 10 லட்சத்தைக் கூட்டியதாகக் கூறவில்லை. 2007 டிசம்பர் 14இல் தி.மு.க நடத்த இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு கூட 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றுதான் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். சிறுபான்மை முஸ்லிம்களில் மிகச் சிறுபான்மையினரான தவ்ஹீதுவாதிகளில் பல பிரிவுகளில் ஒன்றுதான் த.த.ஜ. அது 10 லட்சத்தைக் கூட்டியதாக எழுதி தந்ததை போட முடியாத நீங்கள் சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பேரணி என்று கூறப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று சொன்னாலே த.த.ஜ. தலைவரின் அகராதிப்படி அவற்றின் மறு பெயர் பொய் என்பதுதான். உண்மைகளைத்தான் திட்டவட்டமாக உறுதியிட்டுக் கூற முடியும். பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள். அப்படித்தான் அந்த விளம்பரத்திலும் உங்கள் பெயரால் எழுதப்பட்டுள்ள வாசகம் உள்ளது.

மொத்தத்தில் இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம்.

தேச துரோகி கிரிமினல் பி.ஜே

(ISI என்ற பாகிஸ்த்தானிய உளவு அமைப்பின் தொடர்போடு தமிழக முஸ்லிம்களிடத்தில் முதல் முதலில் தீவிரவாதத்தை விதைத்து தமிழகமெங்கும் பல இந்து தலைவர்கள் கொல்லப்படுவதற்கும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கும் மூல காரணமாயிருந்தவன் சவுதியில் ஜித்தாவில் உள்ள ஜிப்லி என்ற தனது ஏஜென்ட் மூலமும் இன்னும் இலங்கையில் உள்ள பாகிஸ்த்தானிய தூதரகத்தில் வைத்து நேரிலும் ISI உடன் ஆலோசனை நடத்தியவன். தற்போது முதல்வர் மகள் கனிமொழியின் பெயரையும் முதல்வர் பெயரையும் அடிக்கடி பயன் படுத்தி வருகின்றான் சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் முக்கியமாக தோழி கனிமொழி அவர்கள் உஷாராக இருக்கவும்)


சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் இருந்த முஸ்லிம் கட்சிகளில் த.மு.மு.க. மட்டும்தான் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்து கூட்டணி அமைத்தது. இந்தச் செய்திகள் தேர்தல் நேர தினமணியின் எல்லா பதிப்புகளிலும் செய்தியாக வந்திருக்கிறது. இந்த உண்மைக்கு முரணாக எழுத முடியாது. அதனால்தான் அவர்கள் கூற்றை அப்படியே போட முடியாமல் கருத இடமுண்டு என்று எழுதியுள்ளீர்கள். ஒருவனை நல்ல படிக்கிறான் என்று ஆசிரியரும் நல்ல படித்திருக்கிறான் என்பதை அவனை விட கூடுதலாக படித்தவனும்தான் சொல்ல முடியும். வைத்தியநாதனின் கருத்து போல் இடம் பெறச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கோட்பாடுகளை கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுக்கும் இதுதான் அளவுகோல்.

இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம் இது. செய்திகள் வாசிப்பது போல் பேட்டி எடுப்பது போல் விளம்பரங்கள் டி.வி.க்களில் வருகின்றன. அது போன்ற ஒன்றுதான் இது என்பதை அப்பாவிகள் அறிய மாட்டார்கள்.


ஜைனுல் ஆபிதீன். இடம் பெறச் செய்துள்ள பொய்.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்களாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்புகளை நியாயமாக தெரிவிக்க முடியாதபோதுதான் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர்கள் இறங்குகிறார்கள். இது முதல் கேள்வியின் பதிலில் ஜைனுல் ஆபிதீன் இடம் பெறச் செய்துள்ள பொய். அதாவது தனக்கு விளம்பரம் தேடுவதற்காக தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக தன்னை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று எழுதியுள்ளார். இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்த விடக் கூடாது என்பதுதான் த.த.ஜ. கோரிக்கை என்றும் எழுதியுள்ளார்.

அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார்.

உண்மை என்னவென்றால் ஜாக் என்ற அமைப்பில் இருந்த ஜைனுல் ஆபிதீன் அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார். 1992இல் இலங்கை சென்ற அவர் பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார். ஐ.எஸ்.ஐ.யின் சதி வலையாக ஆனார். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடைய ஜைனுல் ஆபிதீன் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை வளைத்து திரித்து விளக்கம் கூறி இளைஞர்களை தூண்டி விட்டு கெடுத்து வந்தார். எனவே அதன் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனியை பார்த்து நீ கோழை, தொடை நடுங்கி என்றெல்லாம் ஜைனுல் ஆபிதீன் விமர்சித்தார். 1992இல் இலங்கை சென்று ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார்.

மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

எனவே ஜைனுல் ஆபிதீனிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிய ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி ஜைனுல் ஆபிதீனை ஜாக்கிலிருந்து ஓரங் கட்டினார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் ஜாக்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டதை அறியாதவர்கள் பல சமாதான கூட்டங்களை கூட்டினார்கள். அவற்றில் ஒன்றுதான் 01.05.1997 வியாழன் அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் நடந்த ரகசிய கூட்டம். 38 மவுலவிகள் (மதக் குருக்கள்) மட்டுமே கலந்த கொண்ட அந்த ரகசிய கூட்டத்தில் ஜைனுல் ஆபிதீன் அளித்த ரகசிய வாக்கு மூலம் ஆடியோவாகப் பதியப்பட்டுள்ளது. அதில் சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு, நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு, சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு, மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்கும் நான்தான் மூல காரணம் என ரகசியமாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்கள் மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்களில் உள்ளதை அறிந்ததால்தான் 2004இல் அவர் துபையிலிருந்து அடித்து விரட்டப்பட்டார். இந்த ரகசிய கேஸட்டை கேட்டு விட்டுத்தான் சிலோன் போலீஸ் 2005இல் அவசரமாக நாடு கடத்தியது. தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் நான்தான் மூல காரணம் என்று ஜைனுல் ஆபிதீன் கேஸட்களில் சொல்லி உள்ளதை கேட்டு விட்டுத்தான் கத்தர் அரசு வெளியான விஸாவை ரத்து செய்தது. மலேசிய அரசும் நாடு கடத்தியது. இந்தியாவில் மட்டும்தான் சட்டத் துறையினரை சரி செய்து இவரால் தூண்டி விடப்பட்டவர்களை இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.

தீவிரவாதத்தை தூண்டி விடுவார். பயிற்சி கொடுப்பார். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து இன்பார்மர் வேலை செய்து இவர் மட்டும் நல்லவராக திறம்பட நடித்து தப்பி விடுவார். ஆக இதுவரை சிறையில் இருந்தவர்கள் தண்டணை பெற்று இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் ஜைனுல் ஆபிதீன்;தான். இதற்குரிய ஆதார கேஸட் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. அதனால்தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டும் அவர்கள் இருவரையும் த.த.ஜ.வை விட்டு நீக்காமல் தாஜா செய்து அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.
தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் இன்றும் உறுதியாக உள்ளவர்தான் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன். தீவிரவாதத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீனிடம் அனுமதி உண்டு. இதை ஆதாரத்தின் அடிப்படையில் இவரை விசாரிக்க கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்யும்பொழுதெல்லாம். ஆட்சியாளர்களின் காலில் விழுந்து சரண் அடைந்து விடுவார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்ப அப்பொழுது கருணாநிதி காலில் விழுந்தார். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்தார். இப்பொழுது மீண்டும் கருணாநிதி காலில் விழுந்து கிடக்கிறார். இன்றும் இவரிடம் அடியாட்கள் உண்டு. பல கொலைகள் செய்த இவரது அடியாட்கள் இப்பொழுதும் மேலப்பாளையத்தில் உள்ள தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். பெருநாளையொட்டி கடலூர் மவாட்டம் சிதம்பரம் ஈத்கா விஷயத்திலும் வம்பிலுக்க முயன்றார்கள். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடையவர் ஜைனுல் ஆபிதீன்தான்.

குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர்.

த.மு.மு.க. நிர்வாகத்தில் எந்த வேலையும் செய்யாமல் எனது தற்காப்புக்காக த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை வகித்து வந்தேன். இப்பொழுது ஆபத்து நீங்கி விட்டது என 2001லேயே த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை விட்டு விட்டு வனவாசம் செல்வதாக அறிவித்தவர் ஜைனுல் ஆபிதீன். இப்பொழுது ""ஆமாம் அதன் அமைப்பாளர் நான்தான்"" என விளம்பர பேட்டியில் எழுதியுள்ளார். இன்றும் அவர்தான் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற கனவில் இருக்கிறார் பாவம். ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க.வில் சரண்டர் ஆனவர் ஜைனுல் ஆபிதீன். இட ஒதுக்கீடுகளுக்காக குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர் சிறை சென்றவர் குணங்குடி ஹனீபா. பெயரளவில் அமைப்பை வைத்திருந்ததாக எழுதி அவரையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

பதவி அரசியலில் நாட்டம் இல்லாதவர் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு அமைப்பிலும் இருந்தார். புதிய அமைப்பில் தலைவராக இருந்தால் அது பதவியாக இருக்காது. கடினமாக உழைத்து அதை வளர்க்க வேண்டிய பொறுப்பாக இருக்கும் பொறுப்புடன் இருந்து கடமை ஆற்றாமல் அறுவடை செய்து மட்டுமே பழக்கப்பட்டவர் ஜைனுல் ஆபிதீன். எனவே தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டி வந்தார். த.மு.மு.க. பேரியக்கமாக வளர்ந்ததும் அதன் தலைமைப் பதவியை கைப்பற்ற முயன்றார். தஞ்சைப் பேரணிக்கு முன்பு நடந்த பொதுக்குழுவிலேயே மூக்கறுபட்டுப் போனார். தஞ்சைப் பேரணிக்கு முன் விலகினால் செல்லாக் காசு ஆகி விடுவோம் எனவே த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

த.மு.மு.க.வுக்கு அரசியல் ஆசை என்றும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் கூறுகிறார். காங்ரஸ் கட்சியினர் ஜெய் ஹிந் என சொல்கிற மாதிரி. த.த.ஜ. எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்ல வேண்டும் என்றதற்கு மறுத்து இருக்கிறார். தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று 20 வருடமாகக் கூறி வந்தவர் த.த.ஜ. தலைவராக இருந்தவரை கீழே தள்ளி விட்டு விட்டு இவர் தலைவராக ஆகி இருக்கிறார். இப்பொழுது அவரது ஒரே ஆசை தொண்டியைச் சார்ந்த த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி சிகப்பு விளக்க மின்ன பணியாற்றி வருகிறாரே. பணியாற்றும் தகுதி நமக்கு இல்லா விட்டாலும் கொஞ்ச நாளுக்கு சிகப்பு விளக்க மின்ன பவனி வர வேண்டும். இதுதான் ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம்.

அவரது சிகப்பு விளக்க ஆசையை நிறைவேற்ற ஒரே வழி த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக மாற்றுவதுதான். அதற்கு தடையாக இருப்பவர்கள் ரகசிய வாக்கு மூல கேஸட்களை வைத்துக் கொண்டு அவரை ஆட்டிப் படைக்கும் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள்தான். எனவே அவரது ஆதரவாளர்களையெல்லாம் த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக ஆக்க வேண்டும் என அவர்களாக சொல்வது போல் சொல்ல வைக்கும் வேலையில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார் அதற்கான ஆயத்த பணிகளில் ஒன்றுதான் நீங்கள் எடுத்த பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம். பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவது அவரவர் உரிமை. நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் Adv என போட மறந்து விட்டீர்கள். வஸ்ஸலாம்.


அன்புடன்:- கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி,
55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,
மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005.

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template