Wednesday, December 03, 2008

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03, 2008

கருத்தரங்கில் உரையாற்றுகின்றார் மா. காமராசர் அவர்கள் அமர்திருப்பது இடமிருந்து, திரு. நாகேஸ்வரன், திரு. முகவைத்தமிழன், திரு. நூர் அ.தி.மு.க, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்.


டிசம்பர் 03, இராமநாதபுரத்தில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம், பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக இந்த நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கனக்கான உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் முதலில் இராமநாதபுரம் மத்திய பேரூந்து நிலையத்தின் எதிர்புரம் அமைந்துள்ள "வளர்ச்சித்துறை திருமன மஹாலில்" ஆரம்பமாகியது.




திரு. முகவைத்தமிழன் அவர்கள் ஒரு உடல் ஊனமுற்ற பென்னிற்கு உணவை வழங்கி துவக்கி வைக்கின்றார் அருகில் திரு. நூர், முன்னாள் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவர், திரு. குத்புதீன் ஐபக் இ.தே.ம.க


நிகழ்ச்சி சரியாக காலை 10.0 0 மனியளவில் துவங்கியது. ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் திரு. மா. காமராசர் தலைமை தாங்கினார். திரு. நாகசாமி அவர்கள் உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மெர்சி அறக்கட்டளை - திருவன்னாமலை திரு. ச. செழியன் M.A., M.phil அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


திரு. டி.ஆர் சந்திரன், ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. டி. இராதாகிருஷ்னன் அவர்கள், ஆசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி ரெகுநாதபுரம், திரு. மகாலிங்கம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. ஜி. தமிழரசு அவர்கள் செயலாளர், உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம், திரு. காதர் அவர்கள் செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. மு.த. முருகேசு அவர்கள், நிறுவனர் அசுரா தொண்டு நிறுவனம், திரு. பா. மனோஜ்குமார் அவர்கள் அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊனமுற்ற பென்கள் கூட்டத்தின் ஒரு பகுதி


பின்னர் இந்நிகழச்சியில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கனக்கானோர் வந்திரந்தனர் அவர்களில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த 500 க்கும் மேற்ப்பட்ட உடல் ஊனமுற்ற சகோதர, சகோதரிகளுக்கு இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. நூர் ஆகியோர் இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) சார்பாக உணவு பொருட்களை ஊனமுற்றோருக்கு வழங்கினர். பின்னர் கருத்தரங்கின் இறுதியில் திரு. டி. ஆரோக்கியராஜ் திட்ட ஒருங்கினைப்பாளர், இர்வோ தொண்டு நிறுவனம் நன்றியுரை வழங்கினார்.

பின்னர் உலக ஊனமுற்றோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி நடந்தது இப்பேரணியை மாவட்ட காவல்துறை துனை ஆனையர் (DSP) திரு. மா. மோகன் துரைச்சாமி I.P.S அவர்கள் துவக்கி வைத்தார்கள் இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகிலிருந்து துவங்கிய பேரணி இறுதியாக ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் பொதுச்செயளாலர் திரு. எச்.அப்துல் நஜ்முதீன், பரமக்குடி அவர்கள் முடித்து வைக்க இராமநாதபுரம் அரன்மனை அருகே முடிவுக்கு வந்தது. இப்பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட உடல் ஊணமுற்ற ஆன்களும் பென்களும் திரளாக பங்கேற்றனர்.

இராமநாதபுரம் அரன்மனை முன்பாக உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு. கே.ஜி சிவலிங்கம் அவர்கள் , தலைவர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் தலைமை தாங்கினார். திரு. வேல்முருகன் செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. முருகானந்தம், து.செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. ஜலாலுதீன் அவர்கள், ஊனமுற்றோர் இயக்கம், தேவிபட்டினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு. சோலை முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் வரவேற்புரை வழங்கினார்.


பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள், இடமிருந்து திரு. முகவைத்தமிழன், IDMK, திரு குத்புதீன் ஐபக், IDMK, திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய தேசிய காங்கிரஸ், திரு. அப்துல் நஜ்முதீன் ஆகியோர்


முகவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ரவிச்சந்திர ராமவன்னி அவர்கள், தலைவர், மாவட்ட பஞ்சாயத்து இராமநாதபுரம்,, திரு. டி.ஆர் சந்திரன் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம், திரு. குத்புதீன் ஐபக், தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. நாகேஸ்வரன் அவர்கள், மனித நேய காப்பகம், இராமநாதபுரம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

திரு. எம்.பி. தில்லைபாக்கியம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. அடைக்கலம் அவர்கள், அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன், திரு. ஆதித்யா சேக்கிழார் அவர்கள், மாற்று அமைப்பு, இராமநாதபுரம், திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சி, திருமதி. எஸ். புனிதா அவர்கள், மாவட்ட அமைப்பாளர், தேசிய கடலோர பென்கள் இயக்கம், இராமநாதபுரம் மபவட்டம், திரு. ஜஹாங்கீர் அவர்கள், மாவட்ட செயளாலர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. டி. ஆரோக்கியராஜ் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தின் ஒருபகுதி


பின்னர் திரு. மா. காமராசர் அவர்கள், அமைப்பாளர், ஊனமுற்றோர் உரிமை இயக்கம் ஏற்புரை வழங்கினார், இறுதியில் கீழக்கண்ட கோரிக்ககைள் அரசுக்கு வைக்கப்பட்டன.

1. மாநிலம் மாவடடத்தில் அனைத்து அரசு மற்றும் பொது இடங்களில் ஊனமுற்றோருக்காக தடையில்லா சூழலை ஏற்ப்படுத்த வேண்டும்.


2. மாவட்ட அளவில் ஊனமுற்றோர் குறைதீர்ப்புநாள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட வேண்டும்.


3. ஊனமுற்றோர் பாதுகாப்பு சிறப்பு சட்டம் 1995, பிரிவு 43ல் குறிப்பிட்டுள்ளபடி ஊனமுற்ற நபர் குடும்பத் தைலைவராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடத்தை உண்டாக்கும் பொருட்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.


4. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைமுறையில் உள்ள சுய தொழில் கடனுதவி திட்டங்களான, பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டங்களை வழங்க வேண்டும்.


5. ஆதி திராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (THADCO) வாயிலாக ஊனமுற்றோருக்கு கடனுதவி வழங்க வேண்டும்.


6. பாரதப் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் உரிய பிரதிநிதித்துவம் ஊனமுற்றோருக்கு வழங்க வேண்டும்.


7. டவுன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகின்ற SGSRY உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும்.


8. மற்றுமுள்ள அனைத்து திட்டங்களிலும் அரசு உத்தரவின்படி உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவிகிதம் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டன.


நிகழச்சியின் இறுதியில் திரு. பூமி கனேசன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் இனிதே முடிவுற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் செய்திருந்தது.

ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தில் இணையவோ அல்லது உதவி செய்யவோ விரும்புவோர் தொடர்புக்கு :

பொது தொடர்பாளர் திரு. மா. காமராசர். அலைபேசி எண் : 9842367354 , 9994539480
திரு. எச். அப்துல் நஜ்முதீன் துனைத் தலைவர். அலைபேசி எண் : 9842388428


இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM)

திரு. நாகேஸ்வரன் அவர்கள். அலைபேசி எண் : 9786960608

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template