Showing posts with label ganja. Show all posts
Showing posts with label ganja. Show all posts

Thursday, February 04, 2016

பல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருளுடன் எஸ்.டி.பி.ஐ - பி.எஃப்.ஐ நிர்வாகிகள் கைது



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் இசுலாமிய சொந்தங்களுக்கும், நீதி, நியாயமிக்க மனசாட்சி உடையோருக்கும், இன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ போன்ற பெயர்களில் செயல்பட்டு வரும் அமைப்பினர் எம்.என்.பி யாக இருந்த காலங்களில் இருந்து நான் இவர்களின் தீவிர ஆதரவாளனாகவும், அன்றைய காலங்களில் இவ்வமைப்பினர் காவல்துறையாலும் , உளவுத்துறையாலும் துன்புறுத்தப்பட்டபோது என் கையில் இருந்த ஊடகங்களின் மூலம் இவர்களுக்காக நான் பலத்த குரல் எழுப்பியுள்ளேன். இரத்தின சபாபதி என்ற அதிகாரியால் இவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டு இவர்களின் அமைப்பினர் துன்புறுத்தப்பட்டபோது இவர்களுக்காக இணையத்தளங்களின் வாயிலாக இவர்களுக்கு ஆதரவாக பெரிய யுத்தமே நடத்தியவன் நான். எனது எழுத்துக்களின் மூலமும் இவர்களின் வளர்ச்சி இருந்தது என்பது சற்றும் மறுக்க இயலாத உண்மை இவர்கள் இயக்கத்தின் மூத்த தலைவர்களை கேட்டால் தெறியும் நான் இவர்களுக்காற்றிய உதவி எவ்வளவு பாரிய அளவிலானது என்று.



SDPI மெம்பர் என ஹிந்துவில் வந்துள்ள செய்தி
 

ஆனால் 2010 ம் வருடத்திற்கு பின்னால் நான் இந்தியாவில் இருந்து இவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவணித்து வந்தபோது தான் இவர்களின் வேறு ஒரு முகம் எனக்கு தெறியவந்தது. இது குறித்து இவர்களின் தலைமைக்கு தெறியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இவர்களைப்பற்றி யதார்த்தங்களை எனது எழுத்துக்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால் என் மீதான பல தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினத் நடத்தினர். மிகச் சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் என் மீது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி என்னை கொல்ல முயன்றபோது நான் காவல்துறையில் அளித்த புகாரிலும் , வாக்குமூலத்திலும் சில விசயங்களை உறுதிப்பட கூறியிருந்தேன் அவற்றில் ஒன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் இலங்கையில் இருந்து கடல் வாயிலாக போதைப்பொருள் , ஆயுதக்கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று.


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் கீழக்கரை அப்துலு் ஹமீதுடன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நிர்வாகி நவாஸ்கான் 

எனது புகாரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர் ஆனால் மூன்று மாதங்களில் முறையாக இல்லாமல் பிழைகளுடன் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்ததால் அதை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் 450 க்கும் மேறப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர் அதில் இவ்வமைப்பினரும் விடுவிக்கப்பட்டனர். நான் கொடுத்த வழக்கில் தற்சமயம் பிணையில் உள்ளனர் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது இன்சா அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவேன்.


கோடிக்கணக்கான மதிப்புள்ள கஞ்சா கடத்தலில் கைதாகியுள்ளவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ வால் போஸ்ட்டர் 

இந்த வழக்கு குறித்து மேற்படி அமைப்பினரின் ஊதுகுழலான புதிய விடியல் எனும் புத்தகத்தில் 5 பக்கத்திற்கு அவதூறுகளையும், கற்பனைகளையும் தாங்கி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில் நான் கொடுத்த புகார் பொய் என்றும் எனது வாக்குமூலத்தில் நான் கூறியிருந்த தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதை என்றும் அப்போதைய எஸ்.பி யான திரு. மயில்வாகணன் மற்றும் எஸ்.ஐ ஜேசுதாஸ் ஆகியோர் என்னுடன் கூட்டு சோ்ந்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கற்பனை செய்து எழுதியிருந்தனர் . அத்துடன் என்னை ஒரு சமூக விரோதி என்றும் , விபச்சார ஏஜென்ட் என்றும் என்மீதான வழக்குகளை பட்டியலிட்டு எழுதியிருந்தனர். அத்துடன் என் மீது காவல்துறைக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் பொய்யான பெயர்களில் பல மொட்டை கடிதங்களை போட்டு வந்தனர்.

 


ஆனால் பாருங்கள் தோழர்களே வல்ல இறைவன் எவ்வளவு வல்லமையானவன் என்று? நான் எனது புகாரிலும், வாக்குமூலத்திலும் கூறிய சம்பவங்கள் ஒவ்வொன்றும் உண்மை என நிறுபிக்கும் வகையில் சமீபத்திய நிகழ்வுகளை இறைவன் நடத்தி காட்டி வருகின்றான்.



பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் முக்கிய வருமானமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் மூலம்தான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது சகோதரர்களே அதுவும் யாரால் தெறியுமா? பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினராலுயே மிக நோ்மையான அதிகாரி என சான்றளிக்கப்பட்ட கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி மூலமாகவவே உண்மைகள் வெளியே வந்துள்ளன.



பி.எப்.ஐ - எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகி நவாஸ்கான்
 

சமீபத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் முக்கிய நிர்வாகியான இராமநாதபுரம் நேரு நகரில் வசிக்கும் நவாஸ் கான் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இவர்களின் ஆதரவில் தங்கியிருந்த இலங்கையை சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயமாக நவாஸ்கான் இதற்கு முழு பொறுப்பாக மாட்டார் , காவல்துறை கட்டாயம் முழு விசாரனை செய்து இதில் பின்புலமாகயிருக்குமு் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பின் முக்கிய தலைவர்களையும் , பொருளாதார உதவி செய்பவர்களையும் விரைவில் பிடிக்கும் அப்போது உண்மை தெறிய வரும்.



நோ்மைக்கும் உண்மைக்கும் பெயர் போன டி.எஸ்.பி மகேஸ்வரியின் மீது அவர் ஒரு பெண் என்று கூட பாராமல் பல அவதூறுகளை தற்சமயம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வாரி இறைத்து வருகின்றனர். கடந்த முறை எஸ்.பி மயில்வாகணன் இருக்கும்போது அவரையும் எஸ்.ஐ ஜேசுதாசையும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என சித்தறித்தனர். தற்போது இருவரும் மாறுதலாகிவிட்டனர் தற்சமயம் திரு. மணிவண்ணன் என்ற ஒரு மிக நோ்மையான அதிகாரி எஸ்.பி. யாக உள்ளார். இவரின் நோ்மைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரே சான்றளித்துள்ளனர். இவர்கள்தான் தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகியான நவாஸ் கானை கையும் களவுமாக கைது செய்துள்ளனர் . இவ்வமைப்பினரின் வீடுகளில் இருந்தே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த செய்தி தமிழகத்தின் ஆங்கிலம், தமிழ் என அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பிடிபட்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் நிர்வாகி நவாஸ்கான் என்பவர் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கிலும் சிக்காதவர், இவரை காவல்துறையினர் ஆதாரங்களுடன் பிடித்துள்ளனர் என்பதிலிருந்து தெறியவில்லையா இது உண்மை என்று. கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம் என்றவுடன் தற்போது இவ்வமைப்பினர் இஸ்லாம், முஸ்லிம்கள், பொய் வழக்கு , காவல்துறையினர் காவித்துறையாக மாறிவிட்டனர் இது ஆர்.எஸ்.எஸ் சின் சதி என கூப்பாடு போடுகின்றனர். ஏன் தமிழக காவல்துறையில் ஒரு அதிகாரி கூடவா நோ்மையானவராக இல்லை? அனைவரும் ஆர்.எஸ்.எஸ் சின் கை்ககூலிகளா?

இஸ்லாம், முஸ்லிம்கள், ஜிஹாத் என கோசம் போட்ட இந்த போலி இஹ்வான்களின் முகத்திறை தற்போது கிழிந்துள்ளது. இவர்களின் உண்மை முகம் கஞ்சா, ஹெராயின், போதை, ஆயுதக்கடத்தல் என்பதுதான் என்பதை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் தடுத்துள்ள போதை வஸ்த்துக்களை கடத்தி அவற்ற கோடிக்கணக்கில் விற்பதிலேயே இவ்வமைப்பினரின் பொருளாதாரம் இயங்குகிறது என்பதையும் மக்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.



காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பத்தோடு பதினொன்றாக ஒரு அமைப்பு இல்லை, இவர்களின் பின்புலும் முழுவதுமாக அலசி ஆறாயப்பட வேண்டிய ஒன்று என்பதையும், இவர்களின் எல்லை தாண்டிய தொடர்புகள் முழுவதுமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும். மாநில , மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நான் இவர்கள் மீது அளித்துள்ள அனைத்து புகார்களையும் ஆய்வு செய்து அவற்றை மறு விசாரனை செய்தால் இவர்களின் முழு குற்ற பிண்ணனியும் தெறிய வரும். இந்திய தேசத்திற்கும், தேச பாதுகாப்பிற்கும் எதிரான அனைத்து காரியங்களையும் செய்து வரும் இவர்கள் தங்களை தற்காத்து கொள்ள இடை இடையே வெள்ள நிவாரனப்பணிகள், நோட:டு புத்தகம், ஸ்கூல் பேக் வழங்குதல் என சில லட்சங்களை செலவு செய்து சமூகப்பணிகள் என்ற பெயரில் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு தங்களை சமூக நல இயக்கம் என நீதிமன்றங்களில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் அதற்கு ஆதாரமாக மேற்கூறிய புகைப்படங்களை தாக்கல் செய்வார்கள், நீதியரசர்களும், அதிகாரிகளும் இவ்விசயத்தில் மிக கவணமாக இருக்க வேண்டும்.



இராமநாதபுரம் எஸ்.பி மணிவண்ணனின் நேர்மையை பாராட்டும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர்
 

வெளிநாட்டில் சம்பாதித்து தங்களின் செல்வங்களை வாரி வழங்கும் தோழர்களு அறிந்து கொள்ளுங்கள் இவர்களின் உண்மை முகத்தினை , நாட்டில் தொழில் செய்கிறோம் உங்களுக்கும் பங்கு தருகிறோம் என உங்களிடம் வாங்கிய பணத்தினை கொண்டு இவர்கள் செய்யும் கேவலமான தொழில் என்ன என்று இப்போது புறிகிறதா? சமூகத்தினை போதை பொருட்களை கொண்டும், மத மோதல்களை ஏற்படுத்தியும் அழிக்க நினைக்கும் இவர்களுக்காக உங்களின் சதக்கா, ஜக்காத், பித்ராக்களை வழங்குகின்றீர்கள்? சிந்தியுங்கள் தோழர்களே?

மாவட்ட காவல்துறை நிர்வாகமும், மாநில காவல்துறையும் இந்த வழக்கை இத்துடன் விட்டுவிடாது முழுமையாக விசாரித்து முழு குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். கடல வழியாக கடத்தி வரப்பட்டது தங்கமும், போதைப்பொருள் மட்டும்தானா? இல்லை ஆயுதங்களும் வெடிபொருள்களுமா? அப்படியானால் அவை சென்ற இடம் எங்கே? இவற்றிற்கு பைனான்ஸ் செய்யும் பெரும் முதலைகள் யார் யார்? நவாஸ்கான் ஒரு துருப்புதான் இவனின் பின்புலம் என்ன என்பது குறித்து உரிய விசாரனை நடத்த வேண்டும்.



தமிழக முதல்வருடன் டி.எஸ்.பி மகேஸ்வரி அவர்கள்
 

பொய் வழக்கு , போராட்டம் என போஸ்ட்டர் அடித்து ஒட்டி , அநாகரிகமாக பெண் டி.எஸ்.பி. யையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்டு வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் அழுத்தம் கொடுத்து விசாரனையை நிறுத்தவோ திசை திருப்பவோ முயல்கிறார்கள் என்பதை மாவட்ட , மாநில நிர்வாகங்கள் புறிந்து கொள்ள வுண்டும். இது ஒரு முக்கிய குற்ற வழக்கு, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு காவல்துறை செயலாற்ற வேண்டும். இவர்களின் அரசியல் மிரட்டல்களுக்கு ஒரு போதும் காவல்துறை அடிபணியக்கூடாது. காவல்துறையின் நெஞ்சில் ஏறி மிதிக்க வேண்டும் என தங்கள் தொண்டர்களுக்கு பயிற்சியளிப்பவர்கள் இவர்கள் என்பதை காவல்துறை கவணத்தில் கொள்ள வேண்டும். இதன் பிண்ணனியில் இவ்வமைப்பின் முக்கிய மாநில , மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையையும் அரசையும் கெட்டு கொள்கிறேன்.
இறுதியாக வெளிநாடுவாழ், உள்நாட்டு இசுலாமிய, மாற்று மத நன்பர்கள் இவர்களின் சாயம் வெளுத்துவிட்டதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கானது பொய் வழக்கல்ல...உண்மையான வழக்காகும், விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அணைவரும் நோ்மையானவர்கள் என்பதையும் புறிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தின் பெயரில் செயல்படும் இவர்கள் மாபெரும் இஸ்லாமிய விரோத , தேச விரோத சக்திகள் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  எனது அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருங்கள் இன்னும் முக்கிய ஆதாரங்களுடன் வருகிறேன்.


என்றும் அன்புடன்,

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template