Monday, February 16, 2009

ம.நே.ம.க வின் முதல் மனித நேயம்??? முஸ்லிம்கள் மீது தாக்குதல்

இந்த செய்தி தொடர்பாக நிறைய மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புக்களும் வருவதால் இந்த தகவல் இங்கு பதியப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களும், நம்பகத்தன்மையும் அறிய விரும்புபவர்கள் சுன்னத் ஜமாத் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை அவரது தொலைபேசி என் : 9841037856 அல்லது 9940320789 என்ற என்களில் தொடர்பு கொள்ளலாம்.

தமுமுக வின் மனித நேயம்??

தமிழகம் எங்கும் குடும்ப பிரச்சினைகள், கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை காவல் நிலையம் வரை எடுத்துச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் வேலைகளில் புகழ்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தற்போது மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" எனற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியினை நிறுவியுள்ளார்கள். இந்த அமைப்பு தமுமுக வின் கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு அரசியல் சாயம் பூசி மூடி மறைக்க பயன்படுத்தப்படும் ஒரு அரசியல் கட்சியாகவே ஆரம்பிக்கப்ட்டுள்ளது தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் மனித நேயம்??

மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் பரினாம வளர்ச்சி அடைந்த சமுதாயக் காவலர்கள் என தம்பட்டம் அடிக்கும் தமுமுக கட்டப்பஞ்சாயத்து குண்டர்கள் சமுதாயத்தை மீண்டும் படுகுழியி்ல் தள்ளி முஸ்லிம்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கி வயிரு வளர்க்கும் துரோகிகளே என்பதற்கு சமீபத்தில் அம்பத்தூரில் நடந்த இந்நிகழ்வே சாட்சி.

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களால் காயம்பட்ட முகம்மது சித்திக்

சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான முகம்மது சித்திக் என்பவர் கடந்த ஆகஸ்ட் 21, 2008 அன்று மதுரை, மேலூரை சேர்ந்த ரினோசா பரக்கத் என்ற பென்னை திருமனம் செய்தார். எவ்வித வரதட்சினையோ , கொடுக்கல் வாங்கல்களோ இல்லாமல் நட்நத இத்திருமனம் மேலூர் பெரிய பள்ளி ஜமாத் நிர்வாகிகளால் நடத்தி வைக்கப்பட்டது.

தமுமுக குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் முகம்மது ரபீக்

ஆனால் மனமகனுக்கும், மனமகளுக்கும் ஏற்ப்பட்ட சில மனக்கசப்புக்களால் மனப்பென் சமீப காலமாக தனது தாயர் வீட்டிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நேற்று (15-02-2009) இந்த மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் சிலர் அதன் பிரமுகரான மேடவாக்கம் சிராஜ் என்பவர் தலைமையில் TN 22 BX 6085 (டாடா சுமோ , மெட்டாலிக் கிரே கலர்) மற்றும் TN 07 M 2979 (குவாலிஸ் - மெருன் கலர்) கார்களில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை கார்களில் கட்டிக் கொண்டு திடீரென இன்ஜினியர் முகம்மது சித்திக்கின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினர்.

மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம்கள்


முகம்மது சித்திக்கின் வயதான தாய் தந்தையரும் இத்தாக்குதலில் தப்பவில்லை, முகம்மது சித்திக்கின் பெற்றோர் காதர் முகைதீன், மற்றும் சகர் பானு ஆகிய இருவரையும் அடித்து உதைத்தனர் அதை தடுக்க வந்த முகம்மது சித்திக்கையும் அவரது தம்பி முகம்மது ரபீக்கையும் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் கூடவே உடனடியாக மேலே கூறப்பட்ட மனித நேய மக்கள் கட்சி கொடி கட்டப்பட்ட வாகனங்களில் ஏறி இந்த குண்டர்கள் தப்பி விட்டனர்.

தற்சமயம் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் இவர்களிடம் தொலைபேசி வாயிலாக தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மேடவாக்கம் சிராஜ் என்பவனும் தமுமுக வின் ஒரு முக்கிய புள்ளியும் உன் மீதும் உன் அப்பன், ஆத்தா மீதும் நாங்கள் வரதட்சினை கொடுமை படுத்தி பென்னை சித்திரவதை செய்ததாக புகார் கொடுக்க போகின்றோம். நாங்கள் அரசாங்க கூட்டனியில் உள்ளோம், எங்கள் தலைவர் ஹைதர் அலிதான் வக்பு வாரியத் தலைவர், நாங்கள் கூறினால் கலைஞர், முதல் ஸ்டாலின் வரை கால்களில் விழுவார்கள் உங்கள் குடும்பத்தினை ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார்கள்.

ஆரம்பித்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் தனது முதல் மனித நேயப் பனியினை செய்த மனித நேய மக்கள் கட்சியின் குன்டர்கள் முஸ்லிம்கள் என்று கூட பாராது மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துக் கொன்டு வண்முறையில் இரங்கி தமுமுக வின் மனித நேயத்தை நிறுபித்துள்ளனர். தமிழகம் எங்கும் இதுபோலவே குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து பன்னி முஸ்லிம் குடும்பங்களையே பிரித்து சமுதாயத்தை கூறு போட்டுக் கொண்டுள்ளனர். தற்சமயம் அரசியலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இன்னுமு் வீரியமாக தங்களின் குண்டர் படையினை வைத்து இது போன்ற முஸ்லிம்களை தாக்கும் மனித நேயப் பணியினை மகத்தாக செய்து வருகின்றார்கள்.

ஜனாப் மேலை நாசர் அவர்கள்

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் தொலைபேசி மிரட்டல்களால் பயந்து போன இக்குடும்பத்தினர் உடனடியாக சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையின் அலுவலக்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆறுதல் கூறி அரவனைத்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளையும் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் அராஜகப் போக்கினை எடுத்துக் கூறி இவர்கள் ஆரம்பி்த்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் முதல்வர், ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை தவறாக பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் போக்கினை விளக்கி கூறி உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சுன்னத் ஜமாத்தினர் சென்னையில் மாபெரும் போராட்டத்தினை அரசிற்கு எதிராகவும் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ரவுடிகளுக்கு எதிராகவும் மக்களை திரட்டி நடத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெறிவித்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் கூறுகையில் ஏற்கனவே தமுமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்று தமிழகமெங்கும் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்தப் பெயரை மாற்றுவதற்காக மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியலுக்கு வந்த தமுமகவினர் முஸ்லிம்களை காப்பற்றுவோம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூச்சலுடன் வந்தனர் ஆனால் தமுமுக பெயரில் மேம்போக்காக கட்டப்பஞ்சாயத்தக்களை செய்து வந்த இவர்கள் தற்சமயம் மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் ஆராவரத்துடன் முஸ்லிம்களை தாக்கி , சமுதாயத்தை கூறு போடம் பனியினை செய்து வருகின்றார்கள். இதற்கு தங்கள் அரசியல் பலத்தினையும் முதல்வர், ஸ்டாலின் போன்றவர்களின் பெயர்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

இன்னும் மேலதிகமாக போய் பொதுவாக இருக்க வேண்டிய வக்ஃபு வாரியத் தலைவரையும் அவரது அதிகாரத்தையும் இவர்கள் பயன்படுத்தி தமிழகமெங்கும் கட்டப் பஞ்சாயத்துக்களிலும் ரவுடித் தனங்கிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் சமுதாய துரோகிகள் என்பதை இந்த சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் இவர்களை கூட வைத்து கொண்ருக்கும் முதல்வர்கள் அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினரை உங்கள் கூட்டனியில் வைத்திருந்தால் தமிழகத்தில் முஸ்லிம்களின் ஒரு ஓட்டை கூட பெற முடியாது என்று உங்களிடம் கூறிக் கொள்கின்றோம்.

அட்டைக் கருப்பாக இருக்கும் ஒருவனுக்கு வெள்ளையன் என்று பெயர் இருக்கும், நோயளியாக இருக்கும் ஒருவனுக்கு ஆரோக்கியம் என்று பெயர் வைத்திருப்பார்கள் அது போல மனித நேயமே அற்ற குண்டர்களை வைத்து நடத்தப்படும் ஒரு கட்சிக்கு மனித நேய மக்கள் கட்சி என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்கள் மனித நேயம் அற்றவர்கள் என்பது இந்த சம்பவத்தில் நிறுபிக்கப்பட்டுள்ளது. மனித நேய மக்கள் கட்சி கொடி கட்டிய கார்களில் வந்து வீடு புகுந்து முஸ்லிம் குடும்பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமக குண்டர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகம் எங்கும் முதல்வரின் பெயரையும், ஸ்டாலின் அவர்களின் பெயரையும், வக்பு வாரியத் தலைவர் பதவி அதிகாரதையும் தவறாக பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்துக்களை செய்து வரும் தமுமுக மனித நேய மக்கள் கட்சி குண்டர்களை தமிழக முதல்வர் எச்சரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டக் கொள்கின்றேன் என்றார்.

செய்தி ஆக்கம் : திரு. மேலை நாசர் அவர்கள் 9841037856 / 9940320789

0 மறுமொழிகள்:

Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template