Showing posts with label ரித்தீஷ். Show all posts
Showing posts with label ரித்தீஷ். Show all posts

Friday, June 05, 2009

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு முகவையில் சிறப்பான வரவேற்பு

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் அவர்கள் டெல்லியில் நடந்த பதவியேற்பு வைபவத்திற்கு பின்னர் முதல் முறையாக முகவை மாநகருக்கு இன்று வருகை தந்திருந்தார்கள். திரு. ஜே.கே ரித்தீஷ் அவர்களை திரு. முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் மற்றும் வழக்குறைஞர் திரு. அக்பர் ராஜா B.A.B.L ஆகியோர் தங்கள் நன்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சந்தித்து வாழ்த்துக்களை தெறிவித்து கொண்டனர்.

திரு. முகவைத்தமிழன், ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி உடன்

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுக்கு தி.மு.க பிரமுகர் திரு. சன்முகநாதன் அவர்கள் பொண்னாடை போர்த்துகிறார்.


இன்று இராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க ஊழியர் கூட்டத்தில் பங்கெடுத்தபின் நன்பர்கள், தோழாமை கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.தி.மு.க ஊழியர் கூட்டத்தில் அமைச்சர் சு.ப. தங்கவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜே.கே ரித்தீஷ் (எ) சிவக்குமார் எம்.பி அவர்களுடன் வழக்குறைஞர் திரு. அக்பர் ராஜா அவர்கள்

Sunday, May 17, 2009

திரு. ரித்தீஷ் அவர்கள் வெற்றி !! - முகவை தேர்தல் முடிவுகள்

திரு. ரித்தீஷ் (எ) சிவக்குமார் M.P அவர்கள்

ராமநாதபுரம் தொகுதியில்
தி.மு.க.வேட்பாளர் ரித்திஷ் வெற்றி

ராமநாதபுரம்,மே.17-
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை

பாராளுமன்ற தேர்தல் அறி விப்பு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 68.7 ச தவீத வாக்குகள் பதிவாகியது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று ராமநாதபுரம் செய்யதம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வாசுகி முன்னிலையில் தொகுதிவாரியாக தனி அறையில் சீல் வைக்கப்பட்டு இருந்த வாக்குபதிவு எந்திரங்கள் அந்ததந்த தொகுதி வாக்குகள் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ராமநாதபுரம்,திருவாடானைசட்டசபை தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தரைத் தளத்திலும்,திருச்சுழி,அறந் தாங்கிதொகுதி வாக்குஎண் ணிக்கை மேற்குபகுதியில்உள்ள தரைத்தளத்திலும், பரமக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் மாடியில்கிழக்குபகுயிலும், முதுகுளத் தூர் தொகுதி வாக்குஎண் ணிக்கை முதல் மாடியில் மேற்கு பகுதியிலும் நடந்தது.வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொருசட்ட மன்றதொகுதிக்கும் 12 மேஜைகள் வீதம் 72 மேஜைகள்அமைக்கப்பட்டு ள்ளன. ஒவ்வொரு மேஜைக் கும் ஒரு மேற்பார் வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார் வையாளர் வீதம் மொத்தம் 216 அரசுஅலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட்டனர்.

வாக்குஎண்ணிகை மையத்துக்குள்வேட்பா ளர்கள், அனுமதி பெற்ற அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தைசுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்ஏராள மான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
தி.மு.க.வெற்றி

வாக்கு எண்ணிக்கை மொத்தம் 27 சுற்றுகள் நடந்தது. இதன் முடிவில் தி.மு.க.வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு திரு. ரித்தீஸ் அவர்கள் பொன்னாடை அனிவிக்கிறார். அருகில் தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி, அமைச்சர் சு.ப. தங்கவேலன், திருமதி. பவானி எம்.பி , திரு. ரகுமான்கான் ஆகியோர்

மொத்தவாக்குகள் -11,30,489

பதிவானவை - 7,75,461

தபால்ஓட்டு - 2,378

செல்லாதவை - 499

ஜே.கே.ரித்திஷ்(தி.மு.க.வெற்றி)- 2,94,945

வ.சத்திய மூர்த்தி(அ.தி.மு.க.) - 2,25,030

சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க.) - 1,28,322

சிங்கைஜின்னா (தே.மு.தி.க.) - 49,571

பிரிசில்லாபாண்டியன்(ப.சமாஜ்)- 39,086

சலிமுல்லாகான்(ம.ம.க.) - 21,439

முகமதுஅபிதலி(ஜா.மு.மோ) - 1,496

ஜகாங்கீர்(சுயேட்சை) - 5,872

முருகேந்திரன்(சுயே) - 3470

பாஸ்கரன் (சுயே) -2329

காளிமுத்து(சுயே) -1769

பாலமுருகன்(சுயே) -1244

செல்லதுரை(சுயே) - 1186

சண்முகையாபாண்டியன்(சுயே) -1119

சுவார்ட்ஸ்துரை (சுயே) - 961


பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ரித்திசுக்கு தேர்தல் அதிகாரி வாசுகி சான்றிதழை வழங்கினார். அப்போது வேட்பாளர் ரித்திசை அமைச்சர் சுப.தங்கவேலன்,எம்.எல்.ஏ.க்கள்அசன்அலி, முருகவேல்,ராம்பிரபு,உதயம்சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நகர்தி.மு.க.செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், ïனியன் தலைவர்கள் திவாகரன், நல்லசேதுபதி, எம்எ.சேக், பெருநாழிபோஸ்,மாவட்டதுணை செயலாளர் அகமதுதம்பி, ராமர்,திசை வீரன், சேது கருணாநிதி, துரைச்சாமி, நாகநாதசேதுபதி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் வாழ்த்தினர்.
செய்தி நன்றி : தினத்தந்தி
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template