Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, August 26, 2012

ஆகஸ்ட் 31 - ஏன்? ...எதற்காக.....?


 
அன்பின் தோழமைகளே,

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லிம்கள் உட்பட தமிழகமெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலநூறு முஸ்லீம் சிறைவாசிகளின் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறை இருப்பையும், ஆதாரங்களற்ற முறையில் ராசிவ் காந்தி கொலை வழக்கில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்ட்டிருக்கும் முருகன், பேரரிவாளன், சாந்தன் என தமிழ் சொந்தங்களும், இன்னும் தமிழக சிறைகலெங்கும் பல்லான்டு காலமாக விடுதலைக்கான முகாந்திரமே இல்லாமல் அடைபட்டு கிடக்கும் அனைத்து அப்பாவி சிறைவாசிகளின் நிலை நிச்சயமாக 21 ஆம் நூற்றாண்டு இந்திய சமூகத்தின் அவலமாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

நீதி நியாயம் ஜனநாயகம் சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி , நியாயம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத நீண்ட சிறை இருப்பில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினருக்கும், மேற்கூறிய அப்பாவிகளுக்கும் நம்மாள் நீதி பெற்றுத்தர இயலவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு வேறொன்று இருக்குமோ?

 இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயமே. இதன் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளன, இச்சமுதாயத்தின் பென்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் இச்மூகமே தண்டிக்கப்படும் விதமாய அக்கலவரங்களுக்கு காரனம் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவெங்கும் சிறையிலும் அடைபட்டு கிடக்கின்றனர். இக்கலவரங்களுக்கு காரனமான சங்பரிவார கூட்டங்கள் ஒரு போதும் சிறையில் அடைக்கப்பட்டதுமில்லை, தண்டிக்கப்பட்டதுமில்லை இது தான் ஜனநாயக இந்தியா!! 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக தமிழ் இனம் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ராஜிவ் காந்தி படுகொலையின் மூல காரன கர்த்தாக்களான "சாமி" வகையராக்கள் சுதந்திரமாக உலா வருகையில் ஏதுமறியாத அப்பாவிகள் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சிகளின் அடிப்படையில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ்கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது இன்னும் ஏன் இந்த அப்பாவிகளை துர்க்கு தண்டனை கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்? இது மனித உரிமை மீறல் இல்லையா? இன்னும் இந்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 20 ஆன்டுகளை தாண்டியும் அடைபட்டுள்ளனர். ஒரு கைதி எட்டு ஆன்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது என்பது அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று மனித உரிமை ஆர்வளர் திரு. வி.ஆர். கிருஷ்னய்யர் என்பவர் கூறியுள்ளார்.

நமது தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்தி அவர்களை கொன்ற கோபால் கோட்சே என்பவன் 16 ஆன்டுகளில் விடுதலை செய்யப்பட்டான், இவ்வளவுக்கும் கோபால் கோட்சே மகாத்மா காந்தியின் படுகொலையில் நேரடியாக தொடர்புள்ளவன் என்று குற்றம் சாட்டப்பட்டு அது நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவன். ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த வித நேரடி குற்றச்சாட்டுகக்களும் இன்றி சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் 20 ஆன்டுகளை தாண்டியும் சிறைக் கொட்டடிகளில் எமது தமிழ் இனத்தை சேர்ந்த தோழர்கள் பலர் கரையே தெறியாது வாடி வருகின்றனர். தேசப்பிதாவை கொன்ற கொடியவர்கள் எல்லாம் விடுதலையாகும்போது எமது இனச்சொந்தங்களை மட்டும் இந்த அரசு வஞ்சப்பது ஏனோ? 

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்திய திருநாட்டில் சங்கராச்சாரிகளுக்கும், அம்பானி வகையாராக்களுக்கும் ஒரு நீதி சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு ஒரு நீதி!! என்ன ஒரு அவலம்?

பாதிக்கப்பட்டு கொடுஞ்சிறைகளில் அடைபட்டு கிடக்கும் இம்மக்களை பற்றி நாம் அறிந்து கொள்ளாமலோ, அறிந்தும் அறியாமலோ, இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறுக்கவோ , மறைக்கவோ செய்து அல்லது கண்டும் காணாதது போலவோ இருந்து விடலாம். அறிந்து கொல்லுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட மிக நேர்மையாக இயங்குகிறது

வரும் ஆகஸ்ட் 31 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூடும் மாநாட்டில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!

ஆகஸ்ட் 31 - சென்னை மன்னடியில் சங்கமிப்போம், வெஞ்சிறைகளில் வேதனைகளோடு வாடும் நம் இனத்தை மீட்க போராடுவோம் , வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

Tuesday, August 07, 2012

சிறைவாசிகள் மீட்பு மாநாட்டுக்காக நிதிவேண்டி.....

ஏக இறையவனின் அளப்பரிய கருணையினால்...


உண்மையுடன்...உரிமையுடன்...உணர்வுடன்...அழைக்கிறது...
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்


ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக முஸ்லீம்கள ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும். நமக்கென்ன என்று விட்டு விடுவது நல்ல முஸ்லீம்களின் பண்பு அல்ல. முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி இந்த அநீதிக்கு எதிரான யுத்தத்தில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் மாநிலமெங்கும் மாநாடுகளையும் சட்ட போர்களையும் நடத்தி வருகின்றது.

அண்ணலார் பெருமானார் கூறியிருக்கின்றார்கள்:

ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவார், அவன் அடுத்தவனை (முஸ்லீமை) அமுக்கவோ அடுத்தவனுடைய உரிமைகளை பறிக்கவோ மாட்டான். சகோதர முஸ்லீமுடைய தேவையை தருபவனுக்கு அல்லாஹு உதவி செய்வான். சகோதர முஸ்லீமுடைய ஒரு துன்பத்தை அகற்றுபவனுடைய துன்பங்களில் ஒன்றை அல்லாஹு மறுமைநாளில் அகற்றுவான். முஸ்லீம் சகோதரருடைய குறையை மறைப்பவனுக்கு மறுமைநாளில் அல்லாஹ் அவனுடைய குறையை மறைத்து அருள் புரிவான் (முஸ்லிம்)

மேலும் அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள். அல்குர்ஆன்(76:8)

அநீதி சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த ஆறுமாதகாலமாக பல்வேறு சிரமங்கள் சிக்கல்கள் இவற்றுக்கு மத்தியில்... இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் முன்னெடுத்து நடத்திய தொடர் பொதுக்கூட்டங்கள் இதுவரை இல்லாத வகையில் அரசின் கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமல்லாது மாபெரும் மக்கள் எழுச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது...

இதோ நமது அறப்போராட்டம் இறுதிகட்டத்தை நோக்கி... எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் நாள் சென்னை மண்ணடியில்... "மாபெரும் அரசியல் சிறைவாசிகள் மீட்ப்பு மாநாடு"

ஆயத்தமாகுங்கள்... அணிதிரள... கருனைக்கரங்களை நீட்டுங்கள்... கொடுங்சிறையின் கதவுகள் திறந்திட...

இன்னும் அநீதிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்திற்கு உதவுவது நம் மீது கடமையாகும். ஆகவே, நன்மையை கொள்ளையடிக்க வேண்டிய ரமலான் மாதத்தில் உங்களின் நிதி உதவிகளை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் நடத்தும் மாநாட்டுக்காக வாரி வழங்குவீர். அல்லாஹ்வின் தூதர் இம்மாதத்தை அடைந்து விட்டால் வேகமாக வீசக்கூடிய புயல் காற்றை விட அதிகமாக தானதர்மங்கள் செய்வார்கள். அண்ணலாரின் அடியொற்றி வாழும் நாமும் இச்சுவனத்தைப் பின்பற்றி சிறை பட்டோரின் நலனுக்கு வாரி வழங்கி மறுமை ஈடேற்றம் என்ற நற்பேற்றினை அடைவீராக!.

முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்கக்கோரி  அரசியல் சிறைவாசிகள் மீட்பு மாநாட்டுக்காக உங்கள் உதவிகளை வாரி வழங்கிட


அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 
9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

Saturday, January 08, 2011

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
[Bombs Made by Narendra Modi]


கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.


தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.


நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவனுக்குத்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.


இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.


தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இது தொடர்பான பதிவுகள் :-



THANKS : WWW.IIPONLINE.ORG

Sunday, September 05, 2010

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமழான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமழான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.

சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

ரியாத் - சௌதி அரேபியா

+966 557316929

Thursday, June 03, 2010

ததஜ வினருக்கு அறிவுரை - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (மீழ்பதிவு)

அல்லாஹ்வின் திருநாமத்தால்........



நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்-- நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு--தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை --அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது-- மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் ...குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.



நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.

நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:


ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.

  • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.

  • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.

  • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை-- அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.

  • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.

  • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.

  • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை-- தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.



அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

  • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.

  • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.



ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.



சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் -- இவரும் இணைந்திருந்த காலத்தில்--ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.



உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.



இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்---ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்-- அல்லாஹ் போதுமானவன்.

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்கோபர்

சவுதி அரேபியா

Monday, March 08, 2010

பேர​பா​யம் காத்​தி​ருக்​கி​றது...! - தினமனி தலையங்கம்

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?


இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.


இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.


சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?


சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.


இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

நன்றி : தினமனி

Sunday, February 14, 2010

மனித உரிமைகள் கழகம் - முப்பெரும் விழா

டாக்டர். சுரேஸ் கண்ணன், ஆசிரியர் பாரத ராஜா, திரு. செந்தில் செல்வானந்த், திரு. செந்தில்நாதன் ஆகியோர்


மனித உரிமைகள் கழகம் - முப்பெரும் விழா

பிப்ரவரி 14, இராமநாதபுரம் மாவட்டம், தேர்போகி கிராமத்தில் மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் மாவட்ட தலைவர் திரு. செந்தில் செல்வானந்த் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் தலைவர் டாக்டர் சுரேஸ் கண்ணன் M.A., B.L., M.Phil., M.Ed, HDCM., Ph.D., அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் பொதுச்செயலாலர் திரு. ஜெயபாலன் அவர்கள், மனித உரிமைகள் மாத இதழ ஆசிரியர் திர. பாரதராஜா அவர்கள், மாநில அமைப்பாளர் விளையாட்டு பிரிவு திரு. செந்தில் அவர்கள், திரு. சுப. முருகேசன் அவர்கள் மற்றும் மாநில கமான்டன்ட் இணைத் தலைவர் திரு. தாஜீதீன் ஆகியோர் சிறப்ப அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.





இடமிருந்து பொதுச்செயலாலர் திரு. ஜெயபாலன், சர்வதேச தலைவர் டாக்டர் சுரேஸ் கண்ணன், பத்திரிகையாளர் திரு முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன், மாநில அமைப்பாளர் விளையாட்டு பிரிவு திரு. செந்தில், ஆசிரியர் திரு. பாரதராஜா ஆகியோர் மேடையில்






மனித உரிமைகள் மாத இதழின் மாவட்ட நிருபர்கள் திரு. தலிப்குமார் அவர்கள், திரு. முகம்மது ரைசுதீன், திரு. சீனிவாசன், முகவை மாவட்ட பொருப்பாளர் (கிழக்கு) திரு. சித்திக் அலி அவர்கள், நகர அமைப்பாளர் திரு. அபுபக்கர், இனை அமைப்பாளர் திரு. முஸ்த்தபா ஆகியோர் முன்னிலை வகித்து வாழத்துரை வழங்கினர்.

நிகழச்சிக்கான ஏற்ப்பாடுகளை தேர்போகி திரு. செந்தில்நாதன், இராமநாதபுரம் ஒன்றிய துனை அமைபடபாளர் செய்திரந்தார். நிகழச்சியில் ஊர் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பில் இணைவதற்கு அழைக்கவும் 9443138255, 9865695105, 9843252802,9962337907.


செய்திகள் : முகவைத்தமிழன்

Saturday, January 23, 2010

சவுதிக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதுகட்டுப்பாடு

துபாய் : சவுதி அரேபியா சென்று பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், பணியாளர் விசா பெற, போலீசாரின் தடையின்மை சான்றிதழ் பெற்று (கிளியரன்ஸ் சர்டிபிகேட்) சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, "அரபு நியூஸ்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:சவுதி அரேபியாவில் பணியாற்ற விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவரும், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன், போலீசாரின் தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்றும்படி, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு பணி நியமன நிறுவனங்கள் ஆகியவை, இந்த புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, டில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் அமைந்துள்ள துணை தூதரகம் ஆகியவையும் கேட்டுக் கொண்டுள்ளன.


"இந்த புதிய சட்டத்தால், குற்றப்பின்னணி உடையவர்கள், சவுதி அரேபியாவிற்கு வருவது தடுக்கப்படும்' என, பணி நியமனம் செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குனரான இப்ராஹிம் குட்டி என்பவர் தெரிவித்தார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இதுபற்றி சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ""இந்தப் புதிய சட்டம் இரு நாட்டு ஒப்புதலின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே, சவுதிக்கு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தலாம்'' என்றார்.

நன்றி : தினமலர்

Tuesday, January 05, 2010

காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!


நன்றி: ஜூனியர் விகடன்


குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால்,தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர
விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.



இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள்.

சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.

பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார்.

'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது.

ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான்.

புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான்.

செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை.

யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான்.

நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம்.

அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல.

அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது.

இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.


எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!


'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள்.

செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!


SOURCE: JUNIOR VIKATAN. COURTSEY TO :neetheinkural.blogspot.

Wednesday, November 11, 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

Sunday, November 01, 2009

யார் பொய்களின் மொத்த உருவம்? - அப்துர்ரஹ்மான் மண்பஈ

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

சகோதரர் பீ.ஜைனுல் ஆபீதீன் அவர்களின் இணையதளத்தில் வெளியான தவறான தகவல்களுக்கு பதிலளித்து நான் எழுதியவற்றுக்கு அப்துர் ரஹ்மானின் அறியாமை என்ற தலைப்பில் மறுப்ப எழுதியிருக்கிறார்கள். அதில் தனக்கே உரிய பாணியில் பல பொய்களையும் சமாளிப்புகளையும் பதிய வைத்திருக்கிறார்கள்.

என் பெயரை எழுவதிலேயே பரிகாசம் செய்து அப்துர்ரஹ்மான் மண்பை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு பதிலாக நாமும், ஜைனுல் ஆபீதீன் 'உளறி' என்று குறிப்பிடலாம், ஆனால் நாம் அவருடைய தவறான வழி முறையை தவிர்க்கிறோம்.

மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்களை விமர்சி;க்கும் போது துவக்கத்திலேயே அபத்தமானது என்று மட்டம் தட்டுவார்கள். இதை அவரது எழுத்துக்களை படிப்பவர்கள் கவனித்திருப்பார்கள். விசயத்திற்குள் செலவதற்கு முன்பே, வாசகரின் மனதில் எதிராளியைப் பற்றி தவறான எண்ணத்தை நுழைக்கும் வேலை தான் இது, எனது நியாயமான ஆக்கம் பற்றியும் முதல் பாராவிலேயே இரண்டு தடைவை அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களின் தவறான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதையெல்லாம் அபத்தமானது என்றுதான் எழுதுவார்கள்!

ஆப்துர்ரஹ்மான் அறிமுகம் என்று தலைப்பிட்டு என்னைப் பற்றிய பல தவரான தகவல்களை அள்ளி இறைத்ததுள்ளார்கள்.கடையநல்லூர் மதரசாவில் எனக்கு வேலை இல்லை என்று சொன்னதால் அவர்களுக்கு எதிராக எழுதுவதாக எழுதியிருக்கிறார்கள். இதுவே பெரிய பொய். ஏன்னை அவர்களிடம் பணியாற்றுவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் நானாகத்தான் ஒதுங்கிக்கொண்டேன். அப்போது சில மாதம் கழித்து தொண்டியில் TNTJயின் சிலர், வேலை இல்லை என்று சொன்னதால்தான் பீ. ஜைனுல் ஆபிதீனை எதிhக்;கிறான.; என்று சொன்ன போது M.I. சுலைமானிடம், நானே நேரடியாக போனில் பேசினேன். ஆப்போது நீங்கள் என்னை ஆசிரியராகப் பணியாற்ற எதிர்பார்த்திருந்த போது நானாகத்தான் வராமல் இருந்தேன். இப்போது என்னைப் பற்றி இங்கு தவறான செய்தியைச் சொல்கிறார்களே என்று கேட்ட போது, நீங்களாகத்தான் வரவில்லை ஊரில் உங்களைப் பற்றி தவறாக பேசுபவர்கள் அவர்களாகப் பேசுகிறார்கள் என்றார்.

இப்போது இவர்கள் இப்படி எழுதியிருப்பதிலிருந்து இந்தப் பொய்யை அவிழ்த்துவிட்டது ஜெய்னுல் ஆபிதீன்தான் என்பது தெளிவாகிவிட்டது.

TNTJ யில் நான் பொறுப்பிலிருக்கும் போதே சகோதரர் அவர்களின் தவறான கருத்துக்களுக்கு மாற்று கருத்து கூறியுள்ளேன். என்பது அவர்களுக்கும் மற்ற சகோதரர்களுக்கும் தெறியும்.

கொள்கைவாதி வேலை?

ஒரு இயக்கத்தில் இணைந்திருப்பது எதற்காக? ஒரு லட்சியத்தை அடைவதற்கு சேவை செய்யத்தான். அந்த இயக்கத்தில் மிகச் சிலருக்கு வருவாய் வருகிற வேலை இருக்கலாம். வேலை இல்லை. என்று சொன்ன காரணத்துக்காக அந்த இயக்கத்தின் தலைவரின் கொள்கைகளை எதிர்ப்பது என்பது, வினோதமான அற்பத்தனம், இது நம்மிடம் இல்லை.

அவர்களிடம் இருக்கிறது என்பதற்கு அவர்களின் எழுத்துக்களே ஆதாரம், எனக்கு கொள்கையளவில் ஒத்துவரும், ஜமா அத்தில், ஒரு கொள்கைவாதி வேலை கேட்பாரா? அதுவும் அக்கொள்கையைப் போதிக்கும் மதரஸாவில் வேலை கேட்பாரா? என்று கேட்டிருக்கிறார்கள்.


நீங்கள் குறிப்பிடும் இயக்கத்திலோ வேறு எந்த இயக்கத்திலுமோ கொள்கைவாதி வேலை' என்று ஒன்று இல்லை. வருவாய்க்காக கொள்கை வாதியாக இருப்பது உங்களிடம் இருக்கிறதென்று தெரிகிறது. நீங்கள் ஒரு பெரிய அறிஞராக இருந்தும், உங்களின் குர்ஆன் ஹதீஸூக்கு எதிரான போக்கினால் மிக மோசமாக இடறி விழுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் இயக்கத்தின் மதரஸாவில் ஆசிரியராக இருக்க என்னை அழைக்கத்தான் செய்கிறார்கள்.

அரபுக்களை ஏமாற்றி பணபறிக்கும் நிறுவனம் என்று அபாண்டப் பழி போட்டுள்ளார்கள் மார்க்கப்பணி செய்கிறோம் என்று பிறரை ஏமாற்றவும், கொள்கையை விட்டுக் கொடுத்து நயவஞ்சகத்தனம் செய்யவும் வேண்டிய நிலையிருந்தால் நான் அந்த வேலையை செய்ய மாட்டேன், அல்லாஹ் அனுமதித்துல்ல எத்தனையோ, தொழில்களும,; வேலைகளும் இருக்கின்றன் அதை செய்து அல்லாஹ்வின் ரிஸ்கை தேடிக்கொண்டு என்னால் இயன்ற மார்க்கப் பணியை செய்து கொள்வேன்.

சவூதியிலிருக்கும் போதும் இந்தியா வந்த பின்பும் அப்படி நான் செயல் பட்டுள்ளேன். என்பது உங்களுக்கும் தொண்டியிலுள்ளவர்களுக்கும் தெரியும்.

ஆனால் யார் ஏய்த்துப் பிழைப்பார்?

சொந்த ஊரில் லட்சக்கணக்கில் செலவழித்துக்கட்டிய வீடு இருந்தாலும் எங்களைப் போன்றோரின் சம்பளத்தை விட கூடுதலான வாடகைக்கு வீடு எடுத்து சொகுசாக தங்கியிருப்பவரும், சொகுசு வாகனங்களில் பவனி வருபவரும், மார்க்கப்பணி செய்யக்கூடிய சகோதரர்கள் மீது அவதுறு கூறி அவர்கள் போடும் மான நஷ;ட ஈடு வழக்கை எதிர்கொண்டு பல ஆயிரங்களையோ லட்சங்களையோ செலவு செய்பவரும் தான் ஏய்த்துப்பிழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதற்கெல்லாம், தன் பேச்சில் மயங்கிய பணக்காரர்களை ஏய்த்தாக வேண்டும்.
உலக லாபத்திற்காக கொள்கையில்லாமல் செயல்படுவதாக பல தவறான தகவல்களை என் மீது அள்ளித் தெளிக்கிறார்கள் ஜைனுல் ஆபீதீன் அவர்கள்,

குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இவர் அவிழ்த்து விடும் மார்க்க விரோதக்கருத்துக்களை எதிர்க்கும் பல பெரிய மார்க்க அறிஞர்களையும் இவ்வாறே பேசுகிறார். இது அபாண்டப் பழியும், தன் தவறுகளைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கான தந்திரமும் ஆகும்.

முனாஃபிக் என்றும் அடிமை என்றும் அநியாயப் பழி போடுகிறார்.

தன்னிடம் இருப்பவர்கள் போல் :

இவர் தன்னிடம் இருக்கும், உலக லாபத்திற்காக முனாஃபிக் தனம் செய்யும் கும்பலை போல் மற்றவர்களையும் சித்தரிக்கிறார்.

இவரிடம் இருப்பவர்கள் பற்றி இவரே அவ்வாறு எழுதியிருக்கிறார். நடைமுறை நிகழ்வையும் ஆதாரமாகத்தருகிறேன். இவர்;கள் இப்போது முக்கிய பதவியில் வைத்துள்ள ஒருவர் துபை சென்றிருக்கும் போது அங்கிருகக்கூடிய அவருடைய வகுப்புத் தோழர் மார்க்க விரோதப் போக்குள்ள ஒரு இயக்கத்தில் நீ ஏன் இருந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டதற்கு, நான் வேறு இடத்தில் இருந்தால் இங்கு கிடைப்பது போல் கூடுதல் சம்பளம்;; கிடைக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் அதே நபர், தொண்டி விவாதத்திற்குப்பின் திருச்சியில் ஜூம்மா பிரசங்கத்தில், மிம்பரில் நின்று கொண்டு, முஜிபுர்ரஹ்மான் விவாத மேடையிலேயே அழுது தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். என்று பேசியிருக்கிறார். அதைக் கேட்ட விவாதத்தை நேரில் பார்த்த ஒருவர். விவாதத்தை நேரில்; பார்க்காத நீங்கள் சிடியில் பார்த்தீர்களா? நீங்கள் சொன்னது போல் நடக்கவில்லையே என்று சென்னதற்கு நான் சிடியை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பீ.ஜே.க்கு சப்போர்ட்டாகத்தான் பேசுவேன் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த தவறான நயவஞ்சகப்போக்கை கண்டித்து அந்த சகோதரர் ஒரு நோட்டீஸ்ஸும் வெயியிட்டிருக்கிறார்.

இதிலிருந்து காசு பணத்திற்காக நயவஞ்சகத்தோடு அடிமையாயிருக்கும் கும்பல் எங்குள்ளது என்பதை தெறிந்து கொள்ளலாம்.

தன் சகோதரி திருமணச் செலவுக்காக கூடுதலாக தேவைப்பட்ட பணம் துயுஞர் ல் கிடைக்காமல் போய் உங்களிடம் கிடைத்ததும் உங்களோடு ஒட்டிக்கொண்ட கொள்கை குன்றுகளும், பள்ளிவாசல் பணத்தை லட்சக்கணக்கில் மோசடி செய்து உங்களால் காப்பாற்றப்படக் கூடியவர்களும் உங்கள் ஜமாத்தில் மேலாண்மை செய்து கொண்டிருக்கையில், மார்க்க காரணத்திற்காக உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்ட என்னைப் போன்றவர்களை முனாபிஃக்குகள் என் கூறுகிறீர்கள்.

இது. நீங்கள் வாய் கிழிய பேசும் குர்ஆன் ஹதீஸூக்கு நீங்கள் மாறு செய்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி, 'குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் நல்லறிஞர்களுக்கு' இது தகுதியல்ல.

ஏன்னைப்பற்றி இன்னும் பலபொய்களை எழுதிவிட்டு தகுந்த காரணத்ததுடன் என்னை டேமேஜ் பண்ணுவதாக எழுதியிருக்கிறார்கள். பீ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள். இவர் மார்க்கத்திற்காக உழைக்கும் எத்தனையோ நல்லறிஞர்களையும், பிரச்சாரர்கர்களையும் இழிவு படுத்தியும் மட்டம் தட்டியும் பேசுவதையும் எழுதுவதையும் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் நடத்திய தஞ்சாவூர் மாநாட்டில் ,இவர்களின் சத்தியமான(?) வழியிலிருந்து பணத்தாசை மற்றும் உலக ஆசாபாசங்களுக்காகவும் வழி தவறிப் போனவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலை, வெளியிட்டடிருந்தார்கள். அந்த பட்டியலிலுள்ள பலர் குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் இவர் அவிழ்த்து விடும் வழிகேடுகளுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள். அது மட்டுமின்றி வெளிநாட்டிலுள்ள நல்ல மார்க்க அறிஞர்களை கூட இவரின் வழிமுறைப்படி அபாண்டமாக இழிவு படுத்தி பேசாமல் விட்டதில்லை.
இப்படியிருக்கையில் என்னைப் போன்றவர்கள் பற்றி இப்படிக் கேவலாக எழுதுவது பெரிய விசயமில்லை.

என்னை அறிமுகப்படுத்துவதாக கூறிக்கொண்டு பீ.ஜைனுலாப்தீன் அவர்கள் பொய்களை எழுதியதும் நன்மையாக முடிந்துவிட்டது.இவர் பொய்யர் என்று விமர்சிக்கபபடுவதை நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இவரின் புதிய நெருக்கமான உறவுகள் எல்லாம் இவர் மகா பொய்யர் என்று உறுதியாக தெறிந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்



என்னை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர் எழுதியவை அவரே கேவலப்பட காரணமாகிவிட்டது .நீங்கள் புத்திக் கூர்மையுள்ள பெரிய அறிஞர் என்றாலும் ணே;டுமென்றே தவறான போக்கை தொடர்ந்தால் அல்லாஹூத்தாலா தகுந்த நேரத்தில் சிக்க வைத்துவிடுவான் என்பதை குறிப்பாக பீ.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கும் பொதுவாக மற்றவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

மார்க்க விசயத்தில் தாங்கள் புகுத்தியுள்ள தவறான கருத்துக்களை திருத்திக் கொள்ளவும.; மார்க்கப்பணியில் ஒன்றாயிருந்து பிரிந்த சகோதரர்கள் மீது தாங்கள் சுமத்தியுள்ள பழிகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கவும் காலம் கடந்துவிடவில்லை. அல்லாஹ் விதித்த தவணை வந்துவிட்டால் காலம் கடந்ததாகிவிடும் இந்த எனது வார்த்தைகளையும் அலட்சியப்படுத்தி பரிகாசம் செய்யப்போகிறீர்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மக்கள் ஆடு மாடுகள் மாதிரி;


'மக்கள் ஆடு மாடுகள் மாதிரி' என்று பீ. ஜெய்னுல் ஆபிதீன் தான் கூறியதை மறைப்பதற்காக எவனோ ஒரு டிரைவர் சொன்னானாம். எனறுதிசை திருப்புகிறார்.அதோடு நாம் அப்படிச் சொலவதாகவும் பேச்சைமாற்றுகிறர்.

மக்கள் ஆடு மாடுகள் மாதிரி என்று பீ. ஜெய்னுல் ஆபிதீன் சொன்னது முன்னால் TNTJ மாநில செயலாளர் சகோதரர் கோடடூர் ரஃபீக் அவர்களின் டிரைவர் அப்பாஸ் அவர்களிடம் தான் சகோதரர் ரஃபீக் அவர்களின் உத்தரவுப்படி சில வருடங்களுக்கு முன்னால் பீ.ஜெய்னுக்காக அப்பாஸ் இரவு பகலாக வண்டி ஓட்டி இருக்கிறார்.

இதையெல்லாம் என்னிடம் தெரிவித்தது கோட்டூர் ரபீஃக் அவர்கள் தான். உங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டவன் தான் இதையெல்லாம் சொல்லியிருப்பான் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கோட்டூர் ரபீஃக் அவர்கள், TNTJ தலைமையின் போக்கு சரியில்லை என்று தலைமை நிர்வாகிகளிடமே (நீங்கள் உட்பட) கடுமையாக கண்டித்துவிட்டு உங்களிடமிருந்து விலகிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

தங்களைச் சார்ந்த மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைத் தங்களுக்கு இருப்பதால் தான் எனக்கு பதில் சொல்வதாக வாதம் பதில், வாதம் பதில், என்று தலைப்பிட்டு ஏதேதோ எழுதியிருக்கிறீர்கள். விவாதத்தில், தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் சமாளித்துவிட்டு, விவாதத்திற்குப்பின் திருத்தியருப்பதை சுட்டிக்காட்டி பி.ஜெய்னுவின் தோல்வியை எடுத்துக்காட்டியிருந்தேன். அதற்கு பதில் சொல்லப்புகுந்த அவர், நான் மறுத்து பதில் பேசினேன் என்று ஒப்புக்கொண்டார். அதனல் நான் தோல்வி அடையவில்லை என்று வihந்திருக்கிறார்கள் பீ. ஜைனு அவர்கள்.; மறுத்ததைமட்டும் நான் சொல்லவில்லை. பீ. ஜைனு சமாளித்தார் என்றும் சொல்லியிருக்கிறேன்.

சரி, ஒருவர் விவாதத்தில் மறுத்துப்பேசி சமாளித்துவிட்டால், அவர் வென்றுவிட்டார் என்று அர்த்தமா? அப்படியானால் களியக்காவிளையில் உங்களுடன் விவாதம் நடத்திய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி குழுவும் பதில் பேசி சமாளிக்கத்தான் செய்தது. அவர்கள் வெற்றி பெற்றவர்களா?

விவாதத்தில் அவர்கள் பேசி சமாளித்தாலும், கருத்து அடிப்படையில் அவர்கள் தோல்வி அடைந்தவர்கள். (உங்கள் தரப்பில் சில சில்லரைத்தனமான பேச்சுக்கள்குறையாக இருந்த போதிலும்) ஆனாலும் அவர்கள் விவாதம் முடிந்தபின் தாங்களே வென்றதாக வெற்றிவிழா கூட்டங்கள் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

அதே போலவே தொண்டி விவாதத்தில் பேசி சமாளித்த நீங்கள் கருத்து அடிப்படையில் தோற்று இருக்கிறீர்கள். ஷேக் அப்துல்லா ஜமாலி வென்றாக ஆர்ப்பரித்தது போல் நீங்கள் பரையடித்துக் கொணடிருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.

(நீங்கள் திருத்தம் செய்துள்ள பிறகும் என்னென் தவறான வியாக்கியானம் கொடுத்துக் கொணடிருக்கிறீர்கள் என்பது பற்றியும் முன்பு தில்லு முல்லு செய்த வேறு சில ஹதீஸ்களில் விவாதத்திற்குப் பின் எப்படி திருத்தம் செய்துள்ளீர்கள் என்பது பற்றியும் தனியாக எழுதுகிறேன்)


பொய்களின் மொத்த உருவம்

எனக்கு பதில் சொல்கின்ற,, என்னைப் பற்றி எழுதுகிற கட்டுரையிலேயே என் விசயத்தில் பொய்களை எழுதிவிட்டு, என்னை நோக்கி, 'பொய்களின் மொத்த உருவம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த விசயத்தில் உங்களின் அபார துணிச்சல் கண்டு ஆச்சரியப்படுகிறேன். கோயபல்ஸ்ஸயே மிஞ்சிவிட்டீர்கள்.

இந்த துணிச்சலால்தான் சிடியை எடிட்செய்துவிட்டு வீராப்பு பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் பதில் எட்டு என்று எழுதியுள்ளவற்றி;ல் நீங்கள் சிடியை எடிட் செய்துள்ளதை ஒப்புக் கொள்வது தெளிவாக தெரிகிறது.

ஏன்னைப்பற்றி என்னிடமே மகா பொய்களை அவிழ்த்துவிடும் நீங்கள் முஜிபுர்ரஹ்மானின் பொய் பித்தலாட்டங்களை பட்டியலிடப்போவதாக மிரட்டியிருக்கிறீர்கள். ஏன்னைப்பற்றி என்னிடமே பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் நீங்கள் அடுத்தவர் பற்றி இன்னும் அதிகமாக அவிழ்த்துவிட முடியும்! ஒரு வேளை முஜிபுர்hஹ்மான் பித்தலாட்டம் செய்தால் அவரையும் கண்டிக்கவும் இயன்றால் தண்டிக்கவும் செய்வேன் ஏனென்றால் எனக்கு அதிக அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராயிருந்த உங்களை மார்கத்தில் தாங்கள் செய்யும் தில்லு முல்லு, கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீது தாங்கள் பழிபோட்டு பேசுவது போன்ற காரணங்களால்த்தான் எதிர்க்கத் துணிந்தேன்.

உங்களை எஜமானர்களாக கருதுபவர்கள் உங்கள் தவறுகளை நியாயப்படுத்தி பேசும் நிலையில் இருக்கிறார்கள். ஏன்னையும் அது போல் அடிமையாக சித்ததரித்து இருக்கிறீர்கள்;.

ஜமாத் பொறுப்பாளர்கள்

உங்கள் பொறுப்பாளர்களின் முறையற்ற நடைமுறையை நான் குறை கூறியிருந்ததை மறுத்து அவர்களின் முரட்டுத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். அமைதியாக பேசவிட்டிருந்தால் உண்மைகள் வெளிபட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதை அப்போது நீங்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது.

விவாதத்திற்கு பணம் செலவழித்ததால் கோபப்பட்டு முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக சொல்கிறீர்கள் .பீ.ஜெய்னுலாபிதீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நலமாக திருப்பி அனுப்பப்பட்டது தெரிநந்தும் வரவேற்க தனி வண்டி எடுத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கு மேல்செலவு செய்து ஏறத்தாழ ஐநூறு கிலோமீட்டர் பயணம் சென்று, பணத்தை கணக்குப்பார்த்து அக்கரையோடு(?) செலவழித்த பொறுப்பாளர்கள் அல்லவா? அவர்கள் (இதை உங்கள் ஜமாஅத் முன்னால் மாவட்ட பொறுப்பாளர் சொன்னார்.) உங்கள் கட்டு உரைப்படி விவாதத்தில் தோல்வி அடைந்து கண்ணீர் வடித்து அழுத ஒருவருடன் பேச இன்னொரு முறை பணத்தை செலவழிகத்தான் அந்த முரட்டுத்தனமா?


முஜிபு ஓடி ஒளிவதாக எழுதியுள்ளீர்கள். தொண்டி விவாதத்திற்கு முன் நீங்கள் ஓடி ஒளிந்து கொண்டிருந்தீர்கள். இப்போது அவர் ஓடி ஒளிவதாக எழுதியிருக்கிறீர்கள்.எனக்கு உங்களைப்போன்று கட்டு உரைகளெல்லாம் தொகுக்க தெரியாது. நானறிந்து அவர் கலந்துரையாடலுக்கு தயாராகவே இருந்தார். நான் உங்களுக்கு நினைவு திரும்பியது பற்றி எழுதிய ஆக்கத்திலேயே நீங்கள் அழைக்கும் போது என்ன பேச திட்டமிட்டிருந்தார் என்று எழுதியிருந்தேன்.

முன்பு நினைவு திரும்பிய ஜெய்னுல் ஆபிதீன் என்று நான் தலைப்பிட்டிருந்ததற்குக் காரணம், நீங்கள் சொகுசு காரில் செல்வதை விட்:டு சொகுசு பஸ்ஸில் பயணிப்பதற்கு நின்ற நேரத்தில் முஜிபுர்ரஹ்மான் உங்களை எதார்த்தமாக சந்தித்த போது அப்துர்ரஹ்மான் எஸ்.பி. பட்டிணம் பள்ளி பற்றி நோடடீஸ் வெளியிட்டதால் தான் இப்போது தாக்கி எழுதுவதாக கூறியிருக்கிறீர்கள். அதனால் தான் அந்த தலைப்பு வந்தது.

நான் எழுதுவதற்கு பதில் எழுவதற்காக காத்துக்கொண்டிருப்பதாக மார்தட்டியிருக்கிறீர்கள், உண்மைதான் கருத்து வேறுபாடு கொண்ட சகோதரர்கள் மீது பழிபோட்டு எழுதுவதும் கேவலமான வார்த்தைகளாலும் இழிந்த நடையாலும் பரிகாசம் செய்து மட்டம் தட்டி பேசுவதும் எழுதுவதும் உங்களுக்கு கை வந்த கலை.

ஏன்னைப் பற்றி நீங்கள் கூறும் தவறான விமர்சனங்களுக்கு பதில் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் நீங்கள் மார்க்க விசயத்தில் செய்துள்ள, செய்துகொண்டிருக்கிற தவறுகளை அடையாளம் காட்டி எழுதுவதை நிறுத்தப்போவதில்லைஇன்ஷா அல்லாஹ்.

நான் கூலிக்கு மாரடிப்பதாகவும் --- உங்களுடன் இருப்பவர்களைப்போல --- அந்த வேலை இல்லாமல் போய்விடும் என்றும் கடைசியாக எச்சரிக்கும் விதத்தில் எழுதியுள்ளீர்கள். அல்லாஹ்வின் கிருபையால் நான் கூலிக்கு மாரடிப்பவனில்லை. தொண்டியில் எனது சிறு பணிகளால் குர்ஆன் ஹதீஸ் பேசும் உங்களை போன்ற வழிதவறியவர்கள் பற்றி மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள். இங்கும் பணி தொடர்வதோடு தலைநகரம் வந்து பணி செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். அங்கு அந்தப்பணி தொடரும். (இன்ஷா அல்லாஹ்) எதிர் பாருங்கள்.

எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவூட்டும் அல்லாஹ்வின் வசனம்: 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் .ஒவ்வொருவரும் நாளை (மறுமை)க்காக எதனை முற்படுத்தி வைக்கிறார். என்பதை கவனித்துப்பார்க்கவும்:' (59:18)

Saturday, October 17, 2009

மீண்டும் பெண் சாமியார் பிரக்யா சிங்கின் தீவிரவாதம்!! கோவா குண்டு வெடிப்பு


பனாஜி: கோவாவில் ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பொருள் வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.


கோவாவில் பனாஜி அருகே மார்கோ நகரில் கிரேஸ் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிமருந்து பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து அமைப்பை சேர்ந்த மெல்குண்டா பாட்டீல் பலியானார். யோகேஷ் நாய்க் என்பவர் படுகாயம் அடைந்தார். வெடிமருந்து பொருள் வெடித்ததில் மூன்று வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.


மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குரின் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் இந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்கள், என போலீசார் தெரிவிக்கின்றனர். ஸ்கூட்டரின் உரிமையாளர் நிஷாத் பாக்லே என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 20 கிலோ மீட்டர் தூரத்தில் மின் ஒயர்கள் சுற்றப்பட்ட பையையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். மார்கோ பகுதி, கோவா முதல்வர் திகம்பர் காமத்தின் தொகுதி என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு :

1) பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள் - IIPONLINE.ORG

2) மாலேகான் குண்டுவெடிப்பும் இந்து பயங்கரவாதிகளும்

3) மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்

Tuesday, October 13, 2009

இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் பி.ஜே யா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)


நினைவு திரும்பி, ‘முக்கிய அறிவிப்புகள்’ என்று தலைப்பிட்டு முஜிபுர்ரஹ்மான் உமரி கலந்துறையாடலுக்கு வராமல் ஓடுகிறார் என்றும், இன்னொரு தலைப்பிட்டு அதில் முஜிபுர்ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்த செய்தியையும் அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை இனைத்தும் சில செய்திகளை பீ. ஜைய்னுல் ஆபிதீன் எழுதியிருக்கிறார்.
மாய்ந்து மாய்ந்து அவர் எழுதியருப்பதில் முக்கிய பாயிண்ட் என்னவென்றால், ‘கடந்த மார்ச் மாதம் பீ. ஜைய்னுலாபிதீனின் தர்ஜமா தவறுகள் தொடர்பான விவாதத்தில் ஜைனுலாப்தீன் வென்றார் முஜிபுர்ரஹ்மான் தோற்றார். அதனால் அடுத்த கலந்துரையாடல்களுக்கு முஜிபுர்ரஹ்மான் பயப்படுகிறார்’ இது தான் அவர் முக்கியமாக வைப்பது.


தோல்வி அடைந்தது பீ. ஜைனுல் ஆபிதீன்-தான்:


அவர் தோற்றதற்கு தெளிவான ஆதாரத்தைத் தருகிறோம். அதை மூளை சரியாக வேலை செய்யக்கூடிய, சிந்திக்கின்ற ஆற்றல் உள்ள தமிழ் படிக்கத்தெறிந்த எல்லோரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
முஜிபுர்ரஹ்மான் எடுத்துவைத்த பீஜேவின் தவறுகளில் முக்கியமான ஒன்று, ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் தன் கருத்தைப் புகுத்துவதற்காக ஹதீஸில் இடைச்செறுகள் செய்துள்ளது பற்றியதாகும்.


அதாவது ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) வந்து நபியுடன் குர்ஆனை ஓதி செல்வது பற்றிய ஹதீஸில், “அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை திரும்ப” என்று எழுதி, அந்த வருடத்தில் என்ற வாசகத்தை செறுகி இருக்கிறார்.


இது, அவர் பின்னால் சொல்லப்போகிற ஒரு கருத்தை முன் கூட்டியே படிப்பவர்கள் மனதில் பதியவைப்பதற்காக செய்துள்ள காரியம் எனபதனால் இது ஹதீஸில் செய்கிற தில்லு முல்லு என்ற ரீதியில் முஜிபுர்ரஹ்மான் தனது வாதத்தை வைத்தார்.


ஆனால் ஜைனுல் ஆபிதீன் இதனை மறுத்தார். விவாதத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட சுற்றுக்கள் இது பற்றி பேசப்பட்ட போதும், தான் தவறு செய்யவில்லை என்றும் தான் எழுதியது சரிதான் என்று சமாளித்தார்.
ஆனால் விவாதத்திற்குப் பின் வெளியிட்டுள்ள தனது தர்ஜமாவின் எட்டாவது பதிப்பில், முஜிபுர்ரஹ்மான் தவறானது என்று நிரூபித்த வாசகத்தை பீ ஜைனுல் ஆபிதீன் நீக்கியுள்ளார். இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிபிட்டாக வேண்டும். இதே தவறை விவாதத்தில் சுட்டிக்காட்டும் போது அந்த நேரத்திலும் பிடிவாதமாக மறுத்தார். விவாதத்தின் இறுதி உரையிலும் முஜிபுர்ரஹ்மான் ஒரு தவறையும் எடுத்து வைத்து நிரூபிக்கவில்லை என்றும் இவர் கூறும் தவறு எதுவும் தவறு இல்லை என்றும் திமிராக பேசினார்.


இங்கே விவாதத்திற்கு முன்பு இருந்த பாதிப்புகளில் இடைச்செறுகலான வாசகம் இடம் பெற்று இருப்பதையும் விவாதத்திற்கு பின்பு அது நீக்கப்பட்டிருப்பதையும் தருகிறோம்.-பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமாவில் ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ தலைப்பின் கீழ் ஏழாம் பதிப்பிலும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் இடம் பெற்றதாவது


அதாவது விவாதத்துக்குமுன்:இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார்.

(பக்கம்:35-36 ஏழாம் பதிப்பு)
பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்




விவாதத்திற்குப் பின் இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரில் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களை திரும்ப நினைவு படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 41, எட்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2009)


பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்




முந்தைய பதிப்புகளில் ‘அந்த வருடத்தில்’ என்று செறுகியிருந்த வாசகத்தை விவாதத்திற்குப் பின் நீக்கியுள்ளார்.


இந்த வாசகத்தின் விபரீதத்ததை புரியாதவர்கள் இதிலென்ன பெரிய தவறு வந்துவிடப்போகிறது என்று நினைக்கலாம். இதற்கு ஒரு சில பக்கங்களுக்குப் பின் குர்ஆனின் சூராக்களின் வரிசை நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்பட்டதல்ல என்ற கருத்தை பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கருத்தை முன்பே வாசகர்களின் மனதில் போடுவதற்காக மேற்கண்ட ஹதீஸூக்கு மாற்றமான செய்தியை அதற்குள் லாவகமாக இடைச் செறுகல் செய்துள்ளார்.


ஹதீஸ் வாய்வழியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாழ்ந்திருந்தால் ஹதீஸ் கலை அறிஞ்ர்கள அவரை இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் என்று அறிவித்திருப்பார்கள்.
தான் எழுதியது சரி தான் என்று விவாதத்தில் வைத்து சமாளித்ததுக்கொண்டிருந்தவர் இதனை நீக்கியிருக்கிறார். நீக்கியபின், முஜிபுர்ரஹ்மான் அது எப்படி இருக்கவேண்டுமென்று சொன்னாரோ அப்படியே வந்திருக்கிறது. (இன்னும் பல திருத்தங்கள் உள்ளன நாம் பின்பு மக்களுக்கு எடுத்துவைப்போம் இன்ஷா அல்லாஹ்) ஆனாலும் தானே ஜெயித்தாக பரையடித்ததுக்கொண்டிருக்கிறார் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் விவாதத்தில் தோற்றவர்தான் தனது தோல்வியையும் பலவீனமான வாதத்தையும், விதண்டாவாதத்தையும், மறைப்பதற்காக சீடியை எடிட் செய்து வெளியிடுவார். ஆகவே விவாத சீடியை எடிட் செய்து வெளியிட்ட சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் மேற்படி விவாதத்தில் தோற்றவர் என்பது நிரூபனமாகிவிட்டது.


ஆனாலும் அவர் துணிச்சலாக, தான் வென்றதாக எழுதிக்கொண்டும் எதிராளியை மட்டம் தட்டி பரிகாசம் செய்து கொண்டும் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?


அதற்குக் காரணம் மக்களை (அதாவது அவரது இது போன்ற பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நம்பும் மக்களை) அவர் ஆடு மாடுகள் போல் கருதுவதால்தான், இதை நாமாகச் சொல்லவில்லை. அவர் வாயினாலேயே சொன்னது!


TNTJ உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதன் மாநிலச்செயலாளராயிருந்த ஒரு சகோதரர் அப்போது நடந்த (சகோதர இயக்கத்துக்கெதிரான) வன்முறை சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.


அது பற்றி பேசுவதற்காக, பீ ஜைனுல் ஆபிதீனுக்கு போன் செய்த அந்த சகோதரரின் டிரைவர் (இவர் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ளவர்) இப்போது நடக்கும் சம்பவங்களால் மக்களிடத்திலே தவ்ஹீத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமே என்ற கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு பீ.ஜைனுலாபிதீன் சொன்ன பதில்:

‘மக்கள் என்பது ஆடு மாடுகள் மாதிரி , சீக்கிரமே மறந்து
விடுவார்கள்.

ஆக இவரை நம்பும் TNTJ காரர்களை இவர் இப்படித்தான் வைத்திருக்கிறார். இவர் நிலையை தெரிந்து கொண்ட எங்களைப்போல் பலர் அவரிடமிருந்து விலகிக் கொண்டோம். இவ்வளவும் தெரிந்த பின்னும் அவருக்கு ஆதரவாளர்களாயிருக்கும் சகோதரர்கள் சற்று யோசிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் ஆடு மாடுகள் மாதிரி இருக்கப்போகிறீர்கள்? ஜைனுல் ஆபிதீனிடம்!


அவர் இவ்வாறு கருதும் மக்களை –குறிப்பாக TNTJ-யிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரீயுடன் கலந்துரையாடல் நடக்காதது குறித்து தவறான தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளார். ஆடு, மாடுகள் மாதிரியில்லாத மனிதர்களுக்கு அது குறித்து சுருக்கமான தெளிவைத் தருகிறோம்.


பீ. ஜைனுல்ஆபீதீனீன் தர்ஜூமா தவறுகளின் விவாத முடிவில், மற்ற தலைப்புகளை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளும்படி ஜாக் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் கேட்டுக் கொண்டதனால் கலந்துரையாடலுக்கு தாம் ஒப்புக் கொண்டதாக எழுதி தவறான செய்தியை தருகிறார். உண்மையில் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்ததே ஜைனுல் ஆபிதீன்தான்.


அடுத்த மூன்று தலைப்பு விவாதங்கள் பற்றி மேடையில் இருந்நதவர்கள் ஆலோசனை செய்த போது ஒரே நாளில் மூன்று விவாதங்களையும் வைத்துக் கொள்ளலாம். என்று நான் கூறினேன். அதை இமாம் ஹூசைன் ஜைனுலாபீதீன் அவர்களிடம் சொன்ன போது, ஒரு நாளா? போதாது அப்படியென்றால் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம், என்று முதலவாதாக கூறியது ஜைனுலாபிதீதான் அதனை முஜீபுர்ரஹ்மானிடம் இமாம் ஹூசைன் எடுத்துக்கூறிய போது அவரும் ஒப்புக்கொண்டார்.
இதுவெல்லாம் சிடியில் பதிவாகியிருந்தும் அதை மட்டும் துண்டித்திருக்கிறார். பிறரை மட்டம் தட்டுவதற்காக இவர் கையாளும் இழிந்த தந்திரங்களில் இது முதலாவது அல்ல என்பது ஆடு, மாடுகள் போல் இல்லாத மக்களுக்கும் தெரியும்.


முஜிபுர்ரஹ்மான் உமரீ ஓடி ஒளிவதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டு தான் மவுனம் காத்ததாகவும் பி.ஜைனுலாபிதீன் கதைத்திருக்கிறார். ‘வாக்களித்த காலம் முடிந்து மாதங்கள் பல ஓடிவிட்டன. தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறார். என்று எழுதிய ஜைனுலாபிதீனுக்கு நாம கூறுகிறோம் வாக்களித்த காலம் முடிந்தவுடன் உடனடியாக நேரில் அவரிடம் ஆள் அனுப்பிக்கேட்கவில்லை. விருதுநகரில் அவர் இருக்கும் பகுதியில் தான் TNTJ மாவட்டச் செயலாளாரும் நகர நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அல்லது நேரடியாக தபால் எழுதியும் கேட்க வில்லை. நாம் இதில் தொடர்ந்து தலையிட மறுத்து நேரடியாக பேசிக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிய பின் மேற்கண்டவாறு பீ ஜைனுல் ஆபிதீன் செய்திருந்தால் இப்போது அவர் கதைப்பது உண்மையாக இருந்திருக்கும். ஆனால் நேரடியாக தனது கட்சி பொறுப்பாளரை அனுப்பி பேசுவதற்கோ அல்லது தபால் மூலம் தொடர்பு கொள்ளவோ பயந்தார் ஜைனுலாப்தீன். ஏனென்றால் அப்படிச் செய்திருந்தால், விவாத சி.டி.யில் பல இடங்களில் எடிட் மோசடி செய்து வெளியிட்டது அதைப்பற்றி முஜிபுர்ரஹ்மான் கேள்வி எழுப்புவார் தான் அவமானப்பட வேண்டியது வரும் என்ற பயத்தினாலேயே மவுனம் காத்தார்.


ஆனால் முஜிபுர்ரஹ்மான் உமரீ மீது பரிதாபப்பட்டு மவுனம் காத்ததாக சொல்லி இவர் ஆடு மாடுகளாக கருதும் மக்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்.
யாருக்கு பரிதாபப்படுகிறாராம் இவர்? இவரது கருத்துப்படிதவ்ஹீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய, பணத்துக்காக சத்தியக் கொள்கையிலிருந்து வழி கெட்டுக்குபோய் அந்த வழிகேட்டைப் பிரச்சாரம் செய்யக்கூடிய, இவரது தர்ஜமாவில் தவறே இல்லாதவற்றை தவறென்று கூறிய, தவ்ஹூதுக்கு எதிராக சதி செய்யக்கூடிய, இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே மாற்றம் செய்துவிட்ட ஜாக் இயக்கத்தினரோடு சேர்ந்து கொண்டு மார்க்கத்தில் குழப்பம் செய்யும் ஒருவரை மார்க்க அடிப்படையில் எதிர்கொண்டு அடையாளம் காட்டாமல் பரிதாபப்பட்டு சும்மா இருந்நதாராம். இதை நம்புபவர் ஆடு மாடுகளைப் போன்றவர்கள் அல்ல, ஆடுமாடுகளாகத்தான் இருக்க முடியும்!
முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் குறித்துப் பேச நாம் மேற்குறிப்பிட்ட இலகுவான வழிகள் இருக்கும் போது குப்பை, குப்பை என பிதற்றிக்கொண்டு டாட்காம்களுக்கும் சவால் விடுகிறார் என்றால் இதன் மூலம் ‘இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!’


கடந்த 25.9.2009 அன்று முஜிபுர்ரஹ்மான் உமரீ தொண்டியில் பீஜே அவர்களை எதார்த்தமாக கண்டபோது தானே சென்று , ஸலாம் சொல்லி கைகுலுக்கியதை இவர்களாக வலுக்கட்டாயமாக அவரிடம் போய் பேசியதாக திசை திருப்பியிருக்கிறார்.


அதோடு அப்போது நடந்த பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். (அதிலும் கட்டிங்)
அதை வெளியிட்டதும் மிகுந்த நன்மையாக போய் விட்டது. பீ. ஜைனுலாபிதீன் அவர்கள் தன் ஆதரவாளர்களை ஆடு மாடுகளை மாதிரி கருதி வைத்திருக்கிறார். என்பது அவரே சொன்னது. அதன் உதாரண நிகழ்வுதான் அந்த பதிவில் நாம் காண்பது.


முஜீபும் பீ.ஜைனும் லாபிதீனும் உரையாடியதை சற்று நேரம் அமைதியாக தொடரவிட்டிருந்தால், சில உண்மைகள் வெளிப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல், இருவரும் பேசுவதை குழப்பும் விதத்தில் சுற்றி நின்றவர்களில், பீ.ஜைனுவால் ஆடு மாடுகள் மாதிரி என்று சரியாக கணிக்கப்பட்டவர்கள், இடையிலே தாங்கள் சொல்வதையே திரும்பத்திரும்ப சொல்லி கூச்சல் குழப்பம் செய்வதை நாம் பார்க்கிறோம்.


மரியாதையான வார்த்தைகளால் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, தரக்குறைவான வார்த்தைகளை – வேண்டுமென்றே இடையில் புகுந்து பேசி அதை சண்டையாக மாற்றும் ததஜ ஜமாஅத் பொறுப்பாளர்களையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.


பேச்சு நாகரீகமும், மரியாதையும் ஒழுங்கும் அறியாத முரடர்கள் தான், ததஜ ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் என்பதால் அந்த ஜமாஅத்தின் தரம் பற்றி முடிவு செய்வது மக்களுக்கு எளிதாகி விட்டது.
பீ.ஜைனுல் ஆபிதீன் பெரிய அறிவாளி, புத்திசாலி, மனோநிலை அறிந்து பேசுபவர் என்பது எல்லோருக்கும் தெரியும், அதன்படி தன் ஆதரவாளர்களைப்பற்றி ஆடுமாடுகள் மாதிரி என்று அவர் கூறியதற்கு சரியான எடுத்துக்காட்டாக இப்போது தனது இணைய தளத்தில் வெளியிட்ட – முஜிபுர்ரஹ்மானுடன் சச்சரவு செய்த – வீடியோ காட்சிகள் உள்ளன.
ஆகவே, அதை அவசியம் பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்! அதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்குமாறு ஆன்லைன் பீஜே இணைய தளத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.


தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் அல்லாஹ் விட்டு வைத்திருப்பதை தவறாக பயன்படுத்தி மேலும் மேலும் தவறுகள் செய்து, தங்களை கூடுதல் அழிவுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் வழிகேடர்கள்.
அத்தகையவர்களின் வழிமுறையில் தொடர்ந்து செயல்படாமல், வருந்தி திருந்துங்கள் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவுபடுத்தும் இறை வசனம் :


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ


ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)


- M. அப்துர் ரஹ்மான் மன்பஈ

நன்றி : இஸ்லாம் கல்வி

Saturday, October 10, 2009

சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மரணம்

அன்பு நண்பர்களுக்கு,

நம்முடைய நெருங்கிய நண்பரும், சவுதி தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான ஜனாப். அப்துல் மாலிக் அவர்கள், இன்று மதியம் 4: 45 மனி அளவில், ஜெத்தாவில், மாரடைப்பினால் மரணமடந்த செய்தியினை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். (إنا لله وإنا إليه راجعون ) .

அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அவருடன் ஜெத்தாவில் வசித்து வருகின்றனர்.

அன்னாருடைய மறைவினைத் தாங்கும் மன உறுதியினை அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்கிட, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அவருடைய பிழைகளை மன்னித்து அவருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை அருளிட எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!


ஆழ்ந்த வருத்தத்துடன்,
அப்பாஸ் ஷாஜஹான்
செயளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்

Tuesday, October 06, 2009

லஷ்கரே தொய்யிபா, பரலேவிகளின் ஏஜென்ட் - பி.ஜே குற்றச்சாட்டுக்களுக்கு பதில்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஒளியில் எஸ். பி. பட்டிணம் பள்ளி என்ற தலைப்பில் ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தோம். அதில் எஸ்.பி. பட்டிணம் முஸ்லிம் ஜமாத்தினரும் ததஜக்காரர்களும் மோதிக்கொண்டதால் பூட்டப்பட்டிருக்கும் பள்ளிவாசல் பற்றியும் வேறு பல உண்மைகள் பற்றியும் எழுதியிருந்தோம்.

அல்லாஹ்வின் உதவியால் அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதைப்படித்து மக்கள் உண்மை நிலை அறந்து கொண்டார்கள். குறிப்பாக ததஜ சகோதரர்கள் சிலர் கூட தங்கள் தரப்பில் பல தவறுகள் உள்ளதை தாங்களாகவே மன வேதனையோடு தெறிவத்தனர்.

உண்மையும் நியாயமும் மக்களுக்கு வெளிப்படுவது கண்டு ஆத்திரமுற்ற பீ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் நமது நோடடீஸ்ஸூக்கு பதில் அளிப்பதாக கூறிக்கொண்டு பல தவறான விசயங்களை எழுதியிருக்கிறார்கள். அதில் தனக்கே உரிய கேவலமானா இழிந்த கீழ்த்தரமான பொய்யான வாசகங்களால் நம்மை தாக்கி எழுதியிருக்கிறார்கள்.

அவர் நம்மைப்பற்றி எழுதியுள்ள மட்டரகமான தவரான வார்த்தைகளயில் சில:

மூலை குழம்பியவன்,, மவ்லுதும் கந்தூரியும் நடத்த வக்காலத்து வாங்குபவன், பரேலவிகளின் ஏஜண்ட், அறிவீனன் இன்னும் பல இது மட்டுமின்றி நமது நேட்டீஸை வெளியிட்ட சில இணைய தளங்களையும் வாந்தி எடுத்துள்ளார்கள்,வாந்தி எடுத்ததை சாப்பிடட்டும் பரேலவிகளின் ஏஜெண்டுகள் என்று தனக்கே உரிய கேவலமான நடையில் அநியாயமாக தாக்கியுள்ளார்.

அவர் நம்மைப் பற்றி எழுதியுள்ள வாசகங்கள் தவறானவை அதே நேரத்தில் அவர் இவற்றை விட மோசமான விமர்சனங்களுக்கும் அடைமொழிகளுக்கும் மிகத் தகுதியானவர். இதை அவரது நடவடிக்கைகளை சரியாக கவனித்துவரும் எல்லா 'மனிதர்களும்' அறிவார்கள்.
ஆனாலும் அவற்றை இங்கு எழுதி நீட்ட விரும்பவில்லை நமது நோட்டீஸூக்கு விளக்கம் அளிப்பதாக கூறிக்கொண்டு அவர் எழுதியிருக்கும் தவறான விசயங்களுக்கு மட்டும் பதிலளிக்கிறோம்.

பள்ளிவாசல்களில் அடாவடி : நமது நோட்டீஸ்ஸில் ஜாக்; இயக்கத்திடமிருந்து பலவந்தத்தின் மூலம் பிடித்து வைத்துள்ள மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் சில பள்ளி வாசல்களை துதுஜ காரர்கள் திரும்ப ஒப்படைத்து விடவேண்டும். என்ற நியாயத்தை எடுத்து வைத்திருந்தோம் இதற்கு பதிலளிக்க வந்த பீ.ஜைனுலாப்தீன்இ

நிலம் வாங்குவதற்காகவும் கட்டடம் கட்டுவதற்காகவும் உடலாலும் பொருளாலும்; உழைத்தவர்கள் தவ்ஹீத் சகோதரர்கள் என்று பதில் 'அழித்துள்ளார்கள்;' இது என்ன பதில் ?


நாம் என்ன இந்த பள்ளி வாசல்களுக்கு தொடர்பில்லாத சிர்க்; சகோதரர்களிடமா ஒப்படைக்கச் சொல்கிறோம்? ஜாக்; சகோதரர்கள் தவ்ஹீத் இல்லை . என் கும்பலில் இருப்பவர்கள் மட்டும் தான் தவ்ஹீத் வாதிகள் என்று கூறுகிற பித்தலாட்டத்தை கவனியுங்கள் .

ஜாக்; இயக்கத்தால் வாங்கப்பட்டு அந்த இயக்கத்தால் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு உதவி ஒத்தாசை செய்தால் எங்களுக்கும் உரிமை உண்டு என்று சொன்னால் கொஞ்சம் நியாயம் இருக்கும்.

ஆனால் இவர்கள் செய்தது என்ன ? மேலப்பாலயம் பள்ளிவாசலுக்கா சர்ச்சை ஏற்பட்ட போது ஜாக்; அந்த பள்ளிக்கு உரிமை கொண்டாடியதை விமர்சித்து ஜாக்;கிர்க்கு எந்த உரிமையும் இல்லை என்று தங்களின் உணர்வு வார இதழில் (ஜீலை28ஃ 2006 பக்கம்5) பகிரங்கமாக எழுதினார்கள். அதற்கு அல் ஜன்னத் மாத இதழில்இ 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று தலைப்பிட்டு (செப்டம்பர் 2006 பக்கம் 47) மறுப்பு எழுதியிருந்தார்கள் .

தனக்கு தானே முரண்படுதல் :
சரி தாங்கள் பல கட்சிகள் மாறிக் கொண்டிருந்தாலும் பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ள ஜாக்; இயக்கத்தை விட எங்களுக்குத் தான் அதிக உரிமை இருக்கிறது. என்று இவர்கள் இப்போது கூறுவது இவர்களுக்கே உடண்பாடானது தானா என்றால் இல்லை! என்பதே பதிலாகும். இவர் இப்போது நம்மை எதிர்ப்பதற்காக இப்படி எழுதியிருக்கிறாரே தவிர இவர் கருத்துப் படியே இவருடைய இந்த வாதம் தவறாகும்.

எதை வைத்து சொல்கிறோம் என்றால் ததஜ யிலிருந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் உருவானபோதுஇ ததஜ பொதுச் செயலாளர் ஒரு அறிவிப்பு செய்திருந்தார். அதில் இனிஇ ததஜ க்காரர்கள் பள்ளிவாசலுக்கு இடம் வாங்கினால் அதை ததஜ பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும் என்று தன் இயக்கத்தினருக்கு கூறியிருந்தார்.

இப்படி இவர்கள் அறிவிப்புச் செய்யக் காரணம் ததஜ யிலிருந்து ஐஎன்டிஜே என்றோ வேறு பெயரிலோ நூறு இயக்கங்களாக உடைந்து பிரிந்து கொண்டிருந்தாலும் முறைப்படி பதிவு செய்த ததஜ நிர்வாகத்திலேயே அந்த பள்ளிகள் இருந்து கொண்டிருக்கும் என்பது தான் இவர்கள் நிலைபாடு இப்படியிருக்க இப்போது ஜாக்; பள்ளிகள் விசயத்தில் மாற்றிப் பேசுவதற்குக் காரணம்இ நமக்கு எதையாவது பதிலாக சொல்லி விட்டு தங்களின் இயக்கத்தினரிடம் தமது இமேஜை தக்க வைத்துக் கொள்வதுதான்.

நம்மைப் பார்த்து மூளைக் குழம்பியவன் என்று வேறு வர்ணித்துள்ளார். இதற்கு பதிலாக அவரை மூளை குழம்பியவர் என்று நாம் கூற மாட்டோம். அவர் இப்படியெல்லாம் எழுதுவதைப் படித்துவிட்டு அண்ணன் சாட்டையடி பதில் கொடுத்து விட்டார் என்று குதூகலிக்கும் சகோதரர்களை மூளையற்றவர்களென நம்புவதாலேயே இவ்வாறு எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த சகோதரர் எச்சரிக்கையாக இருக்கட்டும்.


மேற்கண்ட ஜாக்; பள்ளிகளில் சகோரர் பீ, ஜையினுலாப்தீனீன் வழிகாட்டல் படி நடந்த சண்டை சச்சரவுகள் ஆதிக்க வெறியினால் நடந்த அலிச்சாட்டியங்களா? அல்லது நியாயத்தின் அடிப்டையிலா? என்பதற்கு ததஜக்காரர்களின் செயல்பாட்டையே ஆதராமாகத் தருகிறோம். நியாய உணர்வுள்ளவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

தவ்ஹீத் இமாமுக்கு பின்னாலும் தொழுவதில்லை.
கடையநல்லுர் ஜாக்; பள்ளியில் சண்டை ஏற்பட்ட பின் அங்கிருந்த இமாமைப் பின்பற்றி தொழுவதை புறகணித்தார்கள். எந்த அளவிற்கென்றால், இகாமத் சொல்லப்பட்டு தொழுகை ஆரபிக்கப்படும். அப்போது அங்கிருக்கும் ததஜ காரர்கள் வேண்டுமென்றே சும்மா உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் இருப்பார்கள். அந்த தொழுகை முடிந்ததும் தாங்கள் தனியாக ஜமாஅத் நடத்துவார்கள். இது தவ்ஹீத் மக்களுக்கு மத்தியிலேNயு கொடிய பிரிவினையை உண்டாக்குகிற தவறான போக்கல்லவா?

அங்கு என்ன பிரச்சனை? ஜாக்; நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் அந்தப்பள்ளியை நிர்வாகம் செய்ய நாங்களே அதிக தகுதியானவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதனால் ஏற்பட்ட சச்சரவு நீதீமன்றம் சென்று நீங்களும் வக்கீல் வைத்து வாதாடுகிறீர்கள். அப்படியிருக்கையில் பழைய நிர்வாகத்தின் இமாமைப் பற்றி தொழுவதில் என்ன தடை ?

ஒரே ஒரு தடைதான் - அது தான் 'நாங்கள் நிர்வகிப்போம் என்று சொன்னபின் எங்களுக்கு தராவிட்டால் தவ்ஹீத் பள்ளியிலும் தொழுகை ஜமாஅத்தைக் கூட உடைப்போம். என்ற ஆணவம்' பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் போல்' அடுத்து 'பல வருடங்களாக அதன் அனைத்துச் செலவுகளையும் செய்தவர்கள் இதே சகோதரர்கள் தான்' என்கிறார்.

அதாவது , மேலாப்பளையம் மற்றும் திருச்சி சிங்காரத்தோப்பு பள்ளிவாசல்களுக் கெல்லாம் ததஜ காரர்கள் தான் செலவு செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார். இது எப்படியிருக்கிறதென்றால் , பாபரி மஸ்ஜிதை இடித்தக்கயவர்கள் பலகாலம் தொழுகை நடக்காமல் பூட்டியிருந்த பள்ளிவாசாலைத்தான் நாங்கள் இடித்தோம் என்று சொன்னதுபோல் இருக்கிறது.

பலவந்தமாக பள்ளியைப் பிடித்து வைத்துக் கொண்டு நாங்கள் தான் பள்ளிக்கு செலவழிக்கிறோம் என்று சொல்வதை உங்களால் ஆடு மாடுகளாக மதிக்கப்பட்டவர்களும் ஏற்கமாட்டார்கள்.

எடிட் செய்யாதீர்

அடுத்து , வக்ஃப் செய்த ஒரு காரணத்ததினாலேயே அது ஊர் முஸ்லிம் ஜமா அத் நிர்வாகத்திற்கு சொந்த மானது என்று நாம் எழுதியுள்ளதாக கதைத்திருக்கிறார்.

நாம் அதை மட்டும் காரணமாக சொல்லவில்லை மேம்புல் மேய்ந்து விட்டு கைக்கு வந்தபடி எழுதாதீர்கள். பள்ளி நிர்வாகத்தை ஜமா அத்திடம் ஒப்படைத்ததையும் சமீபத்தில் சச்சரவு ஏற்பட்ட போது இந்த வருடம் (2009) ஜனவரி மாதத்தில் , தான் பொருளாதாரம் கொடுத்தாலும் நிர்வாகத்திற்கு ஜமாஅத் பொறுப்பு என்று சயீது ஹாஜியார் அவர்களே எழுதிக் கொடுத்ததையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். நோட்டீஸைப் படிகாத மக்களிடம் தவறான செய்தியை கொண்டு போகும் விதத்தில், நோட்டீஸ் செய்தியை எடிட் செய்யாதீர்கள் - விவாத சிடிக்களை எடிட் செய்தது போல்!.

பள்ளிவாசல் திறக்க்கப்பட்டதிலிருந்து பல்லாண்டுகாலமாக ஜமா அத்திடம் பொருளாதாரம் கொடுக்கப்பட்டு ஜமாஅத்தின்; மூலமே இமாம், முஅத்ததின் சம்பளம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் பள்ளிவாசலுக்காக அரசாங்கத்தை தொடர்பு கொள்ள எழுதப்பட்ட கடிதங்கள் ஜமா அத் லட்டர் பேடில் எழுதி அனுப்பபட்டுள்ளது. இமாமையும் முஅத்தினையும் சேர்ப்பதும், நீக்குவதும் ஜமா அத்தின் அதிகாரத்தில் இருந்து வந்தது.

இதுவெல்லாம் சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் , மேலே குறிபிட்ட சயீத் ஹாஜியார் கையொப்பமிட்டு ஜமாஅத்துக்கு கொடுத்த கடிதமும் முக்கிய ஆதாராகும்.

இந்தப் பள்ளிவாசலோடு அந்த ஊர் முஸ்லிம் ஜமாத்தினருக்கு எந்த தொடர்புமே இல்லை என்பதுபோல் எழுதியிருக்கிறார் அது தவறு பதினான்கு வருடங்களுக்கு முன் சயீது ஹாஜியார் அவர்கள் ஊர் பெரிய பள்ளியை இடித்து புதிதாக கட்ட நான் உதவி செய்கிறேன். என்ற போது , நம் ஊரில் மெயின் ரோட்டில் முக்கியமாக பள்ளிவாசல் தேவை என்று எடுத்துச் சொல்லி இந்த பள்ளிவாசலை கட்டச் செய்ததும் , அதற்காக உடல் உழைப்பையும் நேரத்தையும் தங்கள் ஊர் பள்ளி என்பதற்காக செலவிட்டதும் ஜமா அத்தினர் தான்

சிர்க்; ஏஜெண்ட்

அடுத்து, எஸ்.பி. பட்டிணம் முஸ்லிம் ஜமா அத்துக்கும் ததஜ வுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து மூன்றாவது நபராகிய நாம் சில உண்மைகளையும் , நியாயங்களையும் ஆலோசனைகளையும் எடுத்து வைத்ததற்காக நம்மீது பரேலவிகளின் ஏஜெண்ட் என்றும் கப்ரு வணங்கிகளின் ஏஜெண்ட் என்றும் பழி சுமத்தியிருக்கிறார் இந்த பீ. ஜைனுலாப்தீன்.

நம்முடைய நோட்டீஸில் சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமையாளருக்கு நாம் கூறியுள்ள கருத்துக்களை படித்த , நம்மைப்பற்றி அறியாத மக்கள் கூட நாம் முஸ்லிம்களிடம் இருக்கும் சிர்க்;, பித்அத்களை எதிர்க்ககூடியவர் என்பதை அறிந்து கொண்டணர். அப்படி இருந்தும் இந்த மேதாவி திசைதிருப்புகிறார். என்றால் இவரைப் பற்றி மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.


இங்கே முக்கியமாக ஒன்றை குறிபிட்டாக வேண்டும். மிகக் குறைந்த அளவு மக்கள் மட்டுமே படிக்கும் வெப்சைட்டில் பெரும்பான்மை முஸ்லிம்களை 'கப்ரு வணங்கிகள்' என்றும் 'பரேலவிகள்' என்றும் சாடி எழுதும் இவர் மேடைகளிலும் டீவியிலும் அதே மக்கள் பற்றி 'சுன்னத்வல் ஜமாஅத்' என்கிற நல்ல பெயரை பயன் படுத்துகிறார்! இதற்கு என்ன காரணம்?

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியிடம் 'ஐம்பது லட்ச ரூபாய்' வாங்கிக்கொண்டு அதே பெரும்பான்மை முஸ்லிம் மக்களிடம் சென்று நீங்களும் எங்கள் மார்க்க சகோதரர்தான் என்று பிரச்சாரம் செய்து ஒட்டுப் பொறுக்கி அரசியல் நடத்துவதற்காகவா? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்.

இரண்டு தரப்பு மோதிக்கொண்டதில் மூன்றாவது நபராகிய நாம் சில நியாயங்களைச் சொல்வதால் பரேலவி ஏஜெண்டாகி விடுவோம் என்றால் எங்களுக்கு எதிர்கருத்துள்ள எந்த முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் வருவோம் என்று நீங்கள் மேடைகளில் முழங்கியிருக்கிறீர்களே! அப்படியானால் பரேலவிகளுக்காகவும் குரல் கொடுப்போம் என்று சொன்ன நீங்கள் ஒரு பரேலவி என்று சொல்ல வேண்டும்.

சில தினங்களுக்கு முன் நம்மை கடந்து சென்ற ரமளானில் தொண்டி மேலப்பள்ளிவாசலுக்கு நீங்கள் நோன்பு கஞ்சிக்கு பணம் கொடுத்து உங்கள் பெயரும் (11.9.2009 அன்று) போர்டில் எழுதப்பட்டிருந்தது அந்தப் பள்ளிவாசல் சிர்க்; நடைபெறும் பள்ளிவாசல் அதன் நிர்வாகம் சிர்க்;கை ஆதரிக்கக் கூடியது. ஆங்குள்ள இமாம் சிர்க்; செய்பவர் என்று காரணம் சொல்லித்தான் அந்தப் பள்ளிவாசலில் தொழக் கூடாது என்று அதற்கு சமீபத்தில் உங்கள் இயக்கத்தின் சார்பில் பள்ளிவாசல் கட்டும் வேலையை ஆரம்பித்திருக்கிறீர்கள் சிர்க்; நடைபெறும் பள்ளிவாசலுக்கு பண உதவி செய்து அங்கீகாரம் கொடுத்த நீங்கள் , உங்கள் கூற்றுபடி சிர்க்;கின் ஏஜெண்ட்டாக இருக்கிறீர்கள்.


வழிகேடர் வழிமுறை

சம்மந்தா சம்மந்தமில்லாமல் சவூதிக்கு அடிமைச் சேவகம் செய்வதாக நம் மீது பழி போடுகிறார்.. யாருக்கும் நாம் அடிமைச்சேவகம் செய்யவில்லை.அது நமக்கு ;தேவையுமில்லை.


பீ. ஜேய்னுல் ஆபிதீனின் இந்த பழிப் பேச்சுஅவர் வழிகேடர்களின் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் என்பதற்கு பெரிய அடையாளமாக உள்ளது. பொதுவாக சிர்க்; பித்அத்தை எதிர்ப்பவர்கள் மீது வழிகெட்டவர்கள்வு சுமத்தும் பழிதான் சவூ10தியிலிருந்து கிடைக்கும் உலக லாபத்துக்காக இந்தப் பிரச்சாரத்தை செய்கிறார்கள்என்பது இவரும் அதே பழியை நம்மீது சுமத்துகிறார்.


ஒரு பேச்சுக்கு நாம் சவூ10தியிலிருந்து கிடைக்கும் உலக லாபத்தைப் பெற்றுக்கொண்டுசெயல் படுவதாக வைத்துக்கொண்டாலும் அது குறையல்ல. ஏனென்றால் தெளிவான உறுதியான தவ்ஹீத் கொள்கை உள்ளவர்கள்தான் சவூதி உலமாக்கள். துற்போது நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்கள் என்றால் மாறியது அவர்கள் அல்ல நீங்கள்தான்.

குரூப்பும் கும்பலும் சேர்ப்பவர்;
எப்போதும் தனக்கென்று குரூப் சேர்த்தும் கும்பல் சேர்த்தும் இன்பமடையும் இவர் நம்மைப் பார்த்து முஜீப் குரூப் என்றும் கும்பல் என்றும் பரிகாசம் செய்கிறார். நாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அப்படி இருப்பதிலேயே பெருமிதம் கொள்கிறோம்.

தெளிவான ஆதாரம்

சகோதரர் பீ. ஜேய்னுல் ஆபிதீன் அவர்கள் தன் தவறான போக்கை நியாயப்படுத்திக் காட்டுவதற்க்காக பொய்களையும் புரட்டுகளையும் அள்ளி வீசுவார்கள்.பித்தலாட்டம் செய்வார்கள் என்பதற்கு அவர்கள் நமக்கு எழுதிய மறுப்பில் தேவையில்லாமல் நுழைத்த கீழ்கண்ட வாசகங்கள் தெளிவான ஆதாரமாக உள்ளன.

அவை , விவாதத்தில் தோற்று விவாத மேடையிலேயேகண்ணீர் விட்டு அழும் நிலை ஏற்பட்டதற்காக தவ்ஹீதையே எதிர்க்க முஜீப் துணிந்துவிட்டார்'

இரு நூறுக்கும் மேற்ப்டடோர் நேரடியாகப்பார்த்துக் கொண்டிருந்த, தொண்டி மக்கள் நேரடி ஒளிபரப்பில் டிவியல் கண்டுகொண்டிருந்த சிடிக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு விசயத்திலேயே இவ்வளவு பொய் சொல்வார் என்றால் பொய்யர்களுக்கு முன் மாதிரியாக இன்னும் கோயபல்ஸ் என்பவனையே சொல்லிக்கொண்டிருப்பது தவறு, கோயபல்ஸ் இடத்தில் சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீனை வைப்பதே சரி.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் உண்மை போல் காட்டிவிடலாம். ஏன்பது கோயபல்ஸின் வழி.

பொய்யை துணிச்சலாக ஒரே தடவை சொல்லி உண்மை போல் காட்டுவதுபீ.ஜெய்னுல் ஆபிதீனின் வழி. கோயபல்ஸையும் மிஞ்சிவிட்டார்.

முஜீபுர்ரஹ்மான் என்ன சொல்லும்போது கண் கலங்கினார்?


பீ. ஜெய்னுல் ஆபிதீன் தர்ஜமா மற்றும்விளக்கவுரை தவறுகள்பற்றிய விவாதத்தின் இறுதி உரையின் இறுதிப்பகுதிவரை தன் தரப்பு வாதத்தை, தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்து வைத்தார். கடைசியாக அவர் கூறியது:


அவர்கள் (பீ. ஜெய்னுல் ஆபிதீன்) உயிரோடு இருக்கையிலேயே இந்த தகவலை பதிய வைக்கக் கூடிய வாய்ப்பை அல்லாஹ் சுப்ஹானஹூவதாலா தந்திருக்கிறான். அதில் ஏதேனும் தவறிருந்தால் அவனது வேதத்திற்கு மாற்றமாக அவனது சுன்னாவிற்கு மாற்றமாக ஏதேனும் இந்த வாதத்திலே விவாதம் என்ற அடிப்படையிலே முன் வைத்திருந்தால் அந்த ரப்பு மன்னித்தருள வேண்டும்! இப்படி கடைசியாக அவர் கூறிய போது அவரது கண் கலங்கியது.


இதிலே தோற்று அழுதது எங்கே இருக்கிறது? சுத்தியத்திற்காக வாதாடி வெல்லக்கூடிய நல்ல மார்க்க அறிஞர்கள் சொல்லவேண்டிய வார்த்தையும் இதுதான்.. இதைச் சொல்லும்போது கண் கலங்குவது பழிப்பிற்குறிய செயல் அல்ல. ஏனென்றால்,

நற்செயலை சரியாகச் செய்யக்கூடிய நல்லடியார்கள்.அது அல்லாஹ்விடம் ஏற்கப்படுமோ ஏற்கப்படாதோ என்ற மன அச்சத்துடன் செய்வார்கள் என்று அல்லாஹ்(அல்குர்ஆன் 23;;:60) சொல்லிக்காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான விசயத்தில் இப்படி பொய் சொல்பவர் மக்களுக்கு அவ்வளவாக தெரியாத விசயங்களில் எப்படி பொய்களை அவில்த்து விடுவார் என்பதை சிந்தித்து பார்த்துக்கொளளுஙகள்.

லஸ்கரே தொய்பா அச்சுறுத்தல்

அடுத்து, அஹ்லீஸ்ஸூன்னா இஸலாமிய ஆய்வு மையத்தின் சார்பில் நம் நோடடீஸ் வெளியிடப்படவில்லை. எழுதிய நாமே வெளியிட்டுள்ளோம்முகவரிக்காக ஆய்வுமையத்தின் அட்ரசைப் பயன் படுத்தினோம். இன்னெரு காரணமும் உண்டு.

அது என்னவெனில் , தொண்டியில் கடந்த 21.12.2008 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அஹ்லீஸ்ஸீன்னா ஆய்வு மையம், லஷ்கரே தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் வேலைக்காக நடத்தப்படுகிறது என்று பேசி பீ. ஜெய்னுல் ஆபிதீன் நம்மீது அபாண்ட பழிபோட்டார்.

ஆனால் அந்த பொதுக்கூட்ட உரையை டிவியில் ஒளிபரப்பிய போதும் சிடியாக வெளியிட்ட போதும் ஆய்வு மையத்தiயும் முஜிபர்ரஹ்மான் உமரியையும் அவதூறு பேசியதை நீக்கியிருந்தார்.

அதன் பின் 7.3.2009 அன்று நடந்த ஒரு கூட்டததில் அவரது அவதூறு பேச்சுக்கு நாம்' மறுப்பளித்தோம். அவர் பொய்யர் என்று அந்தக் கூட்டத்தில் நிரூபித்தோம். இன்னும் நன்றாக அவரது பொய்யை நிரூபிக்க, அந்த சிடியை எடிட் செய்யாமல் எமக்கு அவரிடமிருந்து வாங்கிவாருங்கள் என்று ததஜ காரர்களுக்கும் பொது மக்களுக்கும் கூறினோம்.. பின்பு அவருக்கு நெருக்கமாவரிடம் பேசி, அந்த சிடியை வாங்கித்தருமாறு கேட்டோம்.இது காலம் வரை தரவேயில்லை. இவர் நம்மீது அபாண்ட பழிபோட்டு ஜெயிலில் தள்ள பயன்படுத்திய ஆய்வு மையத்தின் பெயரையும் முகவரியையும் நாம் எழுதி இவர் முகத்தில் கரி பூசியுள்ளளோம்..


ஆக இப்படி இல்லாத பொல்லாத செய்திகளை சாதாரணமாக எழுதவும் பேசவும் செய்யும் சகோதரர் பீ. ஜெய்னுல் ஆபிதீன் தான் நமது 'இஸ்லாமிய ஒளியில் எஸ்.பி..பட்டிணம் பள்ளி' என்ற நோடடீஸீக்கு விளக்கம் அளிப்பதாக சில எழுத்துக்களை எழுதியுள்ளார்கள், கவனமாக படியுங்கள் என்று சிந்தனா சக்தியுள்ள மக்களை கேட்டுக்கொள்கிறோம். எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவூட்டும் இறைவசனம்.

ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளை (மறுமை)க்காக முற்படுத்தி வைப்பதை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும்......(59:18)
அன்புடன்
ஆ. அப்துர்ரஹ்மான் மன்பஈ
(பீ.ஜெய்னுல் ஆபிதீன் மாணவன்)


குறிப்பு : முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம்செய்வது பற்றி பல மாதங்களுக்குப் பிறகு பீ. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ஞாபக சக்தி திரும்பியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ். அதற்கு தனியாக பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template