Showing posts with label december 6. Show all posts
Showing posts with label december 6. Show all posts

Wednesday, December 03, 2008

டிசம்பர் 06 - அரசியல் வலிமைபெற உறுதிமொழி எடுப்போம் வாரீர்!

டிசம்பர் 6- இஸ்லாமியர்கள் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம். அரசியல் வலிமைபெற உறுதிமொழி எடுப்போம் வாரீர்!


பாப்ரி மஸ்ஜித் பின்புற தோற்றம் .

துடிக்கும் இதயங்கள் எல்லாம் வெடிக்கும் எரிமலையாய் துக்கம் அனுஷ்டிக்கும் துயரச் சம்பவம் அரங்கேற்றப்பட்ட நாள் டிசம்பர் 6. இஸ்லாமியர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள். நாஜிசத்தையும், பாஸிசத்தையும் விஞ்சிய காவி இசத்தின் காட்டு தர்பாரில் 400 ஆண்டு கால பாபர் பள்ளி இடிக்கப்பட்ட நாள். இந்திய ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும் மாய்க்கப்பட்ட நாள். ஆம் நரபலி ரத்தக்காட்டேறிகள் நாடாண்டதால் பாரத பண்பாட்டின் மானம் உலக அரங்கில் பாழ்படுத்தப்பட்ட நாள். இந்திய அரசியல் சட்டம் எங்கள் கால்களுக்கு கீழே என்று சொல்லி ராணுவம், காவல்துறை வேடிக்கை பார்க்க பட்டப்பகலில் பாபர் பள்ளி உடைக்கப்பட்ட கருப்பு நாள் டிசம்பர் 6.

சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆகையால் தான் அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர் என்றான் கலில் ஜிப்ரான். ஜனநாயகத்தில் அரசியல் வலிமை தெரியாத காரணத்தினால் நீங்கள் அரசியல் அடிமைகளாக வாழ்க, ஒழிக என கோஷமிட்டு மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நீற்கிறீர்கள். 3ல் 2பங்கு பாராளுமன்றத்தில் எப்பொழுது நுழைகிறமோ அப்பொழுது பாபர் பள்ளி இடத்தில் கோயில் கட்டுவேபம் என்கிறார்கள். பி.ஜே.பி சங்பரிவாரக்கூட்டம்.

நீயோ அரசியலை புறக்கணித்து விட்டு பாபர் பள்ளியை மீட்க ரயிலை மறிப்போம், வான் ஊர்தியை மறிப்போம் என வெற்று கோஷ\மிட்டு கூடிக், கூடிக் களைகிறாய். சோடாபாட்டிலை திறந்தவுடன் குப் என்று அடிக்கும் சப்தத்தைப் போன்று டிசம்பர் 6 வந்தால் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் என்று சடங்கைப்போன்று கோஷமிட்டு ஆடி அமர்ந்து விடுகிறாய்.

இதயம் வெடிக்கிறது. சமுதாய இளைஞனே இது அல்ல தீர்வு. இங்கும், அங்கும் மாறி மாறி எத்தனை நாள் இரவல் அரசியலில் சமூகத்தை அடகு வைக்கப்போகிறாய். மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி விரக்தியின் விளிம்பிற்கு இளைஞனை அழைத்துச்சென்றது போதும். கொடுக்காத இடஒதுக்கீட்டிற்கு நன்றி பாராட்டி கூனிக்குறுகி நின்றது போதும். இளைஞனே சிந்தி.

எத்தனை கலவரங்கள், எத்தனை உயிர் உடமை இழப்புக்கள், எத்துனை மனித உரிமை இயக்க குற்றச்சாட்டுகளின் சான்றுகள், எத்தனை விசாரணைக் கமிஷன்களின் ரிப்போர்ட்டுகள், இளைஞனே அரசியலை புறக்கணித்து விட்டு நீதி கேட்கிறாயே? நீதி கிடைத்ததாக வரலாறு உண்டா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? இந்திய தேசத்தில் நிமிர்ந்து நிற்கவேண்டிய நீதிமன்றம் குனிந்து நிற்கிறது. குனிந்து நிற்கவேண்டிய குற்றவாளி நிமிர்ந்து நிற்கிறான். ஆம் பாபர் பள்ளியை இடித்த குற்றவாளிகள் அரசியலில் அதிகாரம் பெற்றதால் சிவப்பு நிற கம்பளத்தில் உலா வருகிறார்கள். நாங்கள் தாம் இடித்தோம் பள்ளியை என்று மார்தட்டுகிறார்கள்.

இன்றோ பள்ளி இடிப்பதற்கு துனை நின்ற காங்கிரஸிற்கு மத்தியில் ஆதரவு, பி.ஜே.பி யோடு கைகோர்த்து ஐந்து ஆண்டு பதவி சுகம் அனுபவித்த தி.மு.க விற்கு தமிழகத்தில் ஆதரவு உன் கோமாளி தனங்களை கணக்கிட்டால் இன்னொரு இமயமலையை உருவாக்கிவிடலாம். குதிரை போனபிறகு லாடத்தை தேடும். முட்டாள்களைப்போல் தேர்தல் முடிந்து விட்ட பிறகு நாங்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று குழப்பத்தை அறங்கேற்ற வருகிறாய். ரயிலில் ஏறுவதால் ரயில் நமக்கு சொந்தமாகி விடுவது இல்லை. ரயிலை மறிப்பதால் பாபர் பள்ளி மீண்டு விடுவது இல்லை. திட்டமிட்டு காலத்திற்கேற்ற செயலை செய்ய தவறுகிற சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாபர் பள்ளி குஜராத், கோயம்புத்தூர்,முத்துப்பேட்டை என அநீதி தொடர்கிறது. வல்லவன் வைத்ததே வாய்க்கால் என்ற கூற்றுக்கு ஏற்ப அரசியலில் சிலர் ஆதிக்கம் பெற்றதால் உன்னை அசைக்கிறார்கள். காரணம் நீ அரசியல் அதிகாரம் பெறாததுதான். போதும் இளைஞனே பூக்கடையில் போர்வாள் கேட்கும் இழிநிலையை இதோடு நிறுத்திக்கொள். குறத்தி கூட்டத்தை கூட்டி வித்தை காட்டி களையும் செயலை நிறுத்திக்கொள். நம் உணர்வுகளுக்கு எண்ணக் குமுறல்களுக்கு இதயப் பொறுமல்களுக்கு வடிவம் கொடுத்திட, சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட துயரத்தில் இருந்து ஞானம் பெற்றிட டிசம்பர் 6ல் IDMKல் உறுதிமொழி ஏற்ப்போம். உடன்பிறப்பே, கழிக்க முடியாத கடன் பிறப்பாய் வீழ்ந்த சமுகத்தை அரசியலில் தூக்கி நிறுத்திட சமுகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் குள்ளநரிகளை கூண்டோடு விரட்டிட, தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயலாற்றிட, காட்டாற்று வெள்ளமாய் கடமையாற்றிட புறப்படுவீர் IDMK யை நோக்கி. பிறக்கட்டும் உன் உழைப்பில் அரசியல் வெற்றி. துடிக்கட்டும் ஜால்ரா போடும் சமுதாய துரோகிகள். துலங்கட்டும் உன் வெற்றி. தொடர்பு கொள்வீர். உன் பங்களிப்பை சமுகத்திற்கு பறைசாற்ற. IDMKல்


இவண் :

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு தொடர்புக்கு : 9790318182, 9344510369

WWW.IDMK.ORG

Wednesday, November 26, 2008

டிசம்பர் 6 - இந்து முன்னணி ரயில் மறியல்

போராட்டங்களை தடை செய்வதற்கு இது அரசின் சதியா?
அயோத்தியில் ராமர் கோவில்: இந்து முன்னணி ரயில் மறியல்

சென்னை : அயோத்தியில் கோவில் எழுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநில அமைப் பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 1949ம் ஆண்டு, ராமர் கோவில் இடம் யாருக்கு சொந்தமானது என்பதற்காக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்ந்து 60 ஆண்டு ஆகிவிட்டது.


இதில் 55 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பை இதுவரை கூறாமல் இந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் அரசியல்வாதிகள் சண்டைமூட்டிவீட்டு ஓட்டு பெறுகின்றனர்.எனவே, கோர்ட் தீர்ப்பை உடனடியாக வெளிட்டு, அயோத்தி ராமர் கோவில் பிரச்னை யை நிரந்தரமாக முடிக்க வேண்டும். 100 கோடி இந்துக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய ராமர் கோவிலை அயோத்தியில் கட்ட மத்திய அரசு உடனே அனுமதி தரவேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 6ம் தேதி தமிழகமெங்கும் இந்து முன்னணி இயக்கம் ஆர்ப்பாட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தவுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி : தினமலர்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template