Showing posts with label new bill on terror. Show all posts
Showing posts with label new bill on terror. Show all posts

Friday, December 19, 2008

புதிய சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் PFI கோரிக்கை

சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் பாப்புலர் ஃபிரண்ட் கோரிக்கை

திரும்பப் பெறப்பட்ட கருப்பு சட்டங்களான தடா, பொடாவில் உள்ள கடுமையான விதிமுறைகளை (ஷரத்துக்களை) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் மீண்டும் நுழைக்கப்படுகிறது.எனவே சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தலை
மை கோருகிறது.அரவிருக்கும் சட்ட திருத்தம் காவல்துறைக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கொடுக்கிறது. குற்றம்சாட்டப்பட்டஅணிர 180 நாட்களுக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்க அதிகாரம் வழங்குகிறது.தான் குற்றமற்றவர், அப்பாவி என நிரூபிக்கும் பொறுப்பும் குற்றம் சாட்டப்பட்டவரையே சாரும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்பட்டால் அவருடன் தீவிரவாதத்தில் தொடர்புள்ளதாக சந்தேகப்படும் இயக்கங்களின் சொத்துக்களை முடக்கவும் அரசாங்கத்திற்கு
அனுமதியளிக்கிறது.

ஏற்கனவே தடா, பொடா போன்ற சட்டங்கள் அமுலில் இருக்கும் போது நடந்ததைப் போன்று, சட்டவிதிமுறை மீறல்களுக்கு இந்த புதிய ச்ரத்துகள் வழிவகுக்கும். எனவே காரணமின்றி தீவிரவாதகுற்றம் சாட்டப்பட்ட உண்மையான அப்பாவிகளுக்கு நேர்கமையான விசாரனை தடுக்கப்படுவதுடன் நீதியும் மறுக்கப்படுகிறது. இதில் ஆறுதலான விஷயம் என்னவெனில் காவல்துறை அதிகாரிகள் முன்பாக கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் அங்கீகரிக்கப்பட்ட சாட்சியமாக சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை.

தடா, பொடா வழக்குகளை நடுநிலையாக மதிப்பீடு செய்ததில் தெரிய வருவது என்னவெனில் இத்தகைய கடும் ச்ரத்துகள் இருந்தும் இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை கோர்ட் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கவில்லை. இவ்வழக்குகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் அப்பாவிகள். எனவே இத்தகைய தீவிரவாத சட்டங்கள் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரணிக அரசாங்கத்திலும் காவல்துறையிலும் ஊடுறுவியுள்ள சாதிய மதவாத ஃபாசிஸ சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாய தலைவர்களின் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துகிறது.


இச்சட்டத் திருத்தத்தை பா.ஜ.க. அரவேற்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கெதிரணிக பயன்படுத்துவதற்காக இத்தகைய கருப்பு சட்டங்களை கொண்டு அரவேண்டும் என்றஅவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடிபணிந்து விட்டதற்கானகாரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

உள்நாட்டு தீவிரவாத கொள்கையான இந்துத்துவாவை கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக நிரணிகரித்ததிலிருந்து காங்கிரடி கட்சியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும்பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.எனவே பா.ஜ.க.வின் இந்துத்துவ திட்டத்தை தழுவும் எந்த முயற்சியும் எதிர்வரும் பாரணிளுமன்றதேர்தலில் ஆளுங்கட்சிக்கு உதவாது. நமது அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளபடி மும்பை தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத குழுக்கள்பாகிஸ்தானை அடித்தளமாகக் கொண்டு இயங்குபவை அதை பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டுள்ளது.


குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தி தண்டிக்க பாகிஸ்தான் மீது சர்வதேச மற்றும் இரணிச்யத்துறை நிர்பந்தங்களை நமது அரசாங்கம் கொடுத்து சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மும்பை தீவிரவாத செயல்பாடுகளில் இந்தியாவில் உள்ள எந்த தனிநபரோ குழுவோ இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை. எனவே மும்பை தீவிரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி கருப்பு சட்டங்களை மக்கள் மீது திணிப்பதை நியாயப்படுத்த முடியாது. காவலர்கள், பாதுகாப்பு மற்றும் உளவுநிறுவனங்களில் குறைபாடுகள் இருப்பதால் அதைச் சரிசெய்து மேம்படுத்துவதில்தான் உண்மையான நிவாரணம் உள்ளது.

இதற்காக தேசிய புலனாய்வு நிறுவனம் அமைப்பது நல்ல முயற்சியாக கருத முடியாது. இந்த யோசனை மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தலையிட மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசை விட கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதால் இது நமது கூட்டாட்சி தத்துவத்திற்கே (எதிரணிக) அமை
யும்.பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கேமரணிவில் நடைபெறும் வழக்கு விசாரனை வெளிப்படையான நேர்மையான விசாரனை முறையாக அமையாது.

எனவே நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்தக் குடிமக்களையே அச்சுறுத்தி பீதிவயப்படுத்தும் கருப்புச் சட்டங்களை கொண்டுவரத்துடிக்கும் கட்சிகளாக மாறாமல் அந்நிய அடக்குமுறைகள் தலையீடுகளுக்கெதிரணிக நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இவண்,
இ.எம். அப்துர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

19.12.2008
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template