Showing posts with label mnp. Show all posts
Showing posts with label mnp. Show all posts

Wednesday, April 22, 2009

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா - 37 இடங்களில் தி.மு.க விற்கு ஆதரவு


தமிழகத்தில் பாப்லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு
மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களில் ஆதரவு
தி.மு.க கூட்டணிக்கு 37 இடங்களில் ஆதரவு


15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.

அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.

பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.

எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tuesday, February 24, 2009

முஸ்லிம்களின் தேசிய அரசியல் மாநாடு



குறிப்பு: இந்த மாநாட்டில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு. குத்பதீன் ஐபக் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் பெயரில் “அதிகாரம் மக்களுக்கே” என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ. உறுப்பினர்கள் உட்பட இலட்சகணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்காற்றினர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது. இதில், பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தர், பஹ்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

அன்று மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் 'அரசியல் அதிகாரமளித்தலும் மாற்று வகைகளும்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இந்தக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த நாள் காலையில் மனித உரிமைகள் ஆர்வலர் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில், ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பி.எப்.ஐ.யின் முன்னாள் தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார். இதில், கான்பூரைச் சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதி நாளான 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கேரள பாப்புலர் பிரண்ட் தலைவர் நசிருதீன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர். அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு 'தேஜஸ் டெய்லி'யின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார். இதில் இந்தியாவின் பலப் பாகங்களிலிருந்தும் பல்வேறு செய்தி, ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பத்திரிக்கையின் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக, "முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக வன்முறையைச் சில பத்திரிகை, தொலைகாட்சிகள் செய்கின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உண்மையைப் பதிவு செய்யவேண்டும்" என்று பேசப்பட்டது. "மதவாதத்திற்கு எதிரான செய்திகளைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும்; செய்தி வெளியிடுவதைக் கடந்து சமூகத்தையே மாற்றக்கூடிய பத்திரிக்கையாளர்கள் தங்கள் பலம் உணர்ந்து சமூக பங்களிப்பு ஆற்ற வேண்டும்" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் நக்கீரன், ஜு.வி, புதிய காற்று போன்ற பத்திரிகைகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். மொத்தத்தில் செய்தித் தளத்தில் ஒரு மாற்று வழியை இக்கருத்தரங்கம் அறிமுகப்படுத்தியது.

மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்” என்ற தலைப்பில் நடந்தது.

தேசியப் பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜம்மியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார், அமெரிக்காவைச் சேர்ந்த மரியம் இஸ்மாயில், புது தில்லி ஹசீனா ஹாசிய ஆகியோர் கலந்து கொண்டார்.

"உலகம் முழுக்க எங்கு வன்முறை, இனப் படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பெருகிவிட்டன. இந்தப் பாசிசத்தை எதிர்க்கப் பெண்கள் அணிதிரள வேண்டும். இந்த எதிர்ப்புப் போரில் பங்களிக்க வேண்டும்.

அதே போல் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம் முதலாளித்துவ கலாச்சாரங்கள்தாம். அவை பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் பண்பாட்டை வளர்கின்றன. அவற்றை நாம் அடித்து விரட்ட வேண்டும். நாட்டில் உள்ள பெண்கள் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் கருத்தரங்கம் இஸ்லாமியப் பெண்களிடம் புதிய கருத்துப் பாய்ச்சலை உருவாக்கி உள்ளது எனலாம்.

15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்புப் பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ. தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது. அங்கு, இரவு 7 மணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார்.

இதில், தமிழக பி.எப்.ஐ. தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனிதக் கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.

இக்கூட்டத்தில் பேசிய பி.எஃப்.ஐ தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

"இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் - குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் - பலியாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில்கூட குண்டுகள் வீசப்படுகிறது.

சிங்கள அரசின் இந்த அராஜகப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும் மத்திய அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பேச்சில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினர் என்போர் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே காலங்காலமாய்ச் சித்தரிக்கப் பட்டுவரும் வேளையில், பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்திருப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

நன்றி : சத்தியமார்க்கம்

Thursday, January 01, 2009

We Are With HAMAS - PFI Protests (நாங்கள் ஹமாசுடன்)

கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக உலக பயங்கரவாதி இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தேசிய அரசியல் மாநாட்டு ஒருங்கினைப்புக் குழுவின் மாவட்ட செயளாலர் எஸ். செய்யது இபுறாஹிம் தலைமையேற்று நடத்த மனித நீதிப் பாசறையின் மாவட்ட செயளாலர் அப்துல் ஜமீல், மாவட்ட தலைவர் பி. அப்துல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கண்டன உரையாற்ற வருவதாக இருந்த தமுமுக வின் மாநில துனைச் செயளாலர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் வராததால் தமுமுக வின்மாவட்ட தலைவர் ஜனாப் சலிமுல்லா கான் அவர்கள் தலைமையில் முக்கியமான் தமுமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.




நிகழச்சியில் இஸ்ரேலிய பயங்கரவாத்தை கண்டித்தும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரானுவ ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் கொண்டே இஸ்ரேலிய தீவிரவாத இரானுவம் அப்பாவி பாலஸ்த்தீன மக்களை கொன்று குவிக்கின்றது என்பதால் இந்தியாவை கண்டித்தும்,இந்தியா இஸ்ரேலுடன்இராஜ்ஜிய உரவை துண்டிக்க வேண்டும் என்றும் கோசங்கள்எழுப்பப்பட்டன.


நிகழச்சியின் இறுதியல்மனித நீதிப் பாசறையை சோந்த ஜனாப்ஃபைசல் அவர்கள் நன்றியுரை கூற நிகழச்சி நிறைவுற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள்கலந்து கொண்டனர்.

Wednesday, December 31, 2008

இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து மதுரையில் PFI ஆர்ப்பாட்டம்


கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவில் அங்கம் வகிக்கும் மனித நீதீ பாசறையின் மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம் தலைமை தாங்க மனித நீதீ பாசறையின் மாநில செயற்குழுஉறுப்பினர் A. முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட தலைவர்A.காலித் முஹம்மது, மாவட்ட செயலாளர்S.Pமுஹம்மது நஸ்ருதீன், மத்திய பகுதி தலைவர் M.ஹீரா ஜான் கிழக்கு பகுதி தலைவர் M.லத்தீப் சாஹிப், மேற்கு பகுதிதலைவர் M.அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இதில் திரளாக கலந்துகொண்டனர்.

Saturday, December 20, 2008

மங்களம்பேட்டையில் ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா


மங்களம்பேட்டையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. கடலூர் மாவட்ட எ.ம்.என். பி தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். நகர் தலைவா'திரு. அபுல் ஹசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மாநில துனைத்தலைவர் தாவா குழு திரு. பஸ்லுர் ரஹ்மான் அவர்களும், அறிவகத்தின் முதல்வர் மௌவி சையது இபுறாஹிம் உஸ்மானி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினார்களாக மாவட்ட காவல்துறை துனை கண்கானிகப்பாளர் திரு. என். ராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஏ.ஏ. ஜமேஸ் அவர்கள், மங்களம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் திரு. கோபு பிள்ளை அவர்கள், விருத்தாசலம் அரசு வழக்குறைஞர் திரு. இரா. சுப்பிரமணியம் அவர்கள், திரு. ஏ. அக்பர்சா முத்தவல்லி அவர்கள், திரு. எம். அபதுல் பாரி அவர்கள், திரு. சரவன குமரன காவல் ஆய்வாளர் மங்களம்பேட்டை அவர்கள், வழக்கறிஞர் திரு. முகம்மது இபுறாஹிம் அவர்கள், அரசு மருத்துவர்திரு. கதிர் வேல் அவர்கள்,மங்களம்பேட்டை திருச்சபை திரு. மகிமைதாஸ் அவர்கள், திரு. அபிருத்தீன் மன்ப, அவர்கள், திரு. ரிஸ்வர்ன பாசகா அவர்கள் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரு. ஏ. சாஜஹான் வெர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

News : Mr. Abirudeen Manbayee

Monday, December 15, 2008

UNITED STUDENTS FRONT- ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்புவிழா


UNITED STUDENTS FRONT- ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் (13/12/08) சனிக்கிழமை மாலை 4:30 ம்ணியளவில் அதிராம்பட்டினம்,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டிலுள்ள தனலக்ஷ்மி பேங்க் மாடியில், ஹாஜி A.M.K.முகம்மது ஹனீஃப் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் A.முகம்மது அன்வர் M.A.,M.Phill., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஹாஜா நஜ்முதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்,Z. முகம்மது தம்பி அவர்கள் வரவேற்புரையாற்றினார், A.முகம்மது அன்வர் M.A.,M.Phill.,அவர்கள் பணிகளை விளக்கிப் பேசினார், A.M.Kமுகம்மது ஹனீஃப், A.T.அப்துல்லாஹ் B.Com.,D.C.P., மெளலவி, ஷேக் முகம்மது ஆகியோர் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் USF-ஐ வாழ்த்தியும் சிறப்புரையாற்றினர், இறுதியாக, M.சாகுல் ஹமீது நன்ரறியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், ஜமாத்தார்களும், பொதுமக்களும் கலந்துக் கொன்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைன் தஞ்சை தெற்கு மாவ்ட்டச் செயலாளர், S.நிஜாமுதீன் தொகுத்து வழங்கினார்.

Sunday, December 14, 2008

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்


டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர் முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர் திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.


அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.

அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.

ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

Saturday, November 08, 2008

முகவையில் PFI அரசியல் மாநாடு அறிமுக கருத்தரங்கம்

மேடையில் இடமிருந்து வலக்கறிஞர் யூசுஃப், சகோ. செய்யது சாஹிப், சகோ. ஜின்னா

முகவை, நவம்பர் 08, இன்று இராமநாதபுரம் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பல்லக்கிபிளாசா ஈ.எம். ஃபாருக் ஆடிட்டோரியத்தில் எம்.என்.பி அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேரள மாநிலம் கோலிக்கோட்டில் நடக்க இருக்கும் PFI தேசிய அரசியல் மாநாட்டின் அறிமுக மற்றும் பிரச்சார நிகழச்சியாக முகவை மாவட்ட எம்.என்.பி யினரால் உள்ளரங்க கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறிவு ஜீவிகளும், முக்கிய அரசியல் பிரமுகர்களும், சமூக பிரமுகர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயளாலர் சகோ. E.M. அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்க உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத காரனங்களாள் அவர் வராத நிலையில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்கள் வந்திருந்து 1 மனி நேரத்திற்கும் அதிகமாக சர்வதேச அரசியலில் இஸ்லாமியர்கள் எப்படி புறக்கனிக்கப்பட்டுள்ளார்கள், தேசிய அரசியலில் இஸ்லாமியர்கள் எவ்வாறு அந்நியப்படுத்தப்பட்டுள்ளார்கள், பிராந்திய அரசியலிலும் நாம் எவ்வாறு புறந்தள்ளப்பட்டுள்ளோம் என்பதை பலவாறாக விளக்கியவர்கள்., இதற்கு ஒரே தீர்வு இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதுதான் என்றும், பல அமைப்புகளாகவும், இயக்கங்களாகவும் பிரிந்து கிடக்கும் நம் சமுதாயத்தை ஒருங்கினைத்து நேரடி தேசிய அரசியலில் எவ்வாறு ஈடபடுவது என்பது குறித்து கருத்தாய்வு செய்வதற்காக கேரளாவில் மூன்று நாள் மாநாடு நடக்க இருப்பதாகவும் இதன் மூலம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நேரடி அரசியலில் இரங்கும் என்றும் அறிவித்தார்கள். இதற்கு நீங்கள், நாங்கள் என்ற பேதம் இல்லாமல் நாம் என்ற ஒற்றுமையில் அனைவரும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

மனித நீதிப் பாசறையின் தலைவர் சகோ. முகம்மது அலி ஜின்னா அவர்கள் சகோ. செய்யது சாஹிபின் மலையாளத்தில் அமைந்த உரையை தமிழில் மொழி பெயர்த்து சொன்னார். இன்னும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மறைமுக அரசியல் அல்லாது நேரடி அரசியலில் களமிரங்கும் என்றும் அதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பொது அரசியல் கட்சியாக மாறும் என்றும், இது முஸ்லிம்கள் ஆதிக்கமிக்க தலைமையுடன் அனைத்து தரப்பு மக்களையும் கொண்ட தேர்தலில் பங்கேற்க கூடிய பொது அரசியல் கட்சியாக ஆகும் என்றும் இதன் மூலம் இஸ்லாமியர்கள் அரசியல் சக்தியை பெறலாம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

நிகழ்ச்சியை மனித நீதிப் பாசறையின் முகவை மாவட்ட தலைவர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழச்சியில் மனித நீதிப் பாசறையின் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் யூசுஃப் அவர்கள் உட்பட பலா கலந்து கொண்டனர். பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்களின் விளக்க உரையின் பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது வந்திருந்த மக்கள் தங்களது சந்தேகங்களையு் ஆலோசனைகளையும் எழுப்பினர் பின்னர் அவற்றிற்கு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்களும், மனித நீதிப் பாசறையின் தலைவர் சகோ. முகம்மது அலி ஜின்னா அவர்களும் பதில் அளித்தார்கள். மனித நீதிப் பாசறையின் தொண்டர்கள் நிகழச்சி நடந்த அரங்கின் வெளியே நின்று வந்தவர்களை அழகான முறையில் வரவேற்று அரங்கத்தினும் அமறச் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கூடிய தேனீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகவை மாவட்ட மனித நீதிப் பாசறை அமைப்பினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tuesday, November 04, 2008

நேரடி அரசியல் - PFI ஆய்வரங்கம் முகவையில்

அன்பின் சகேரர்களே,
முகவை மாவட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சார்பாக "நேரடி அரசியல்" என்ற தலைப்பின் கீழ் ஆய்வரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வரங்கில் சட்டமியற்றும் சபைகளில் இந்திய முஸ்லிம்களின் பங்கு பற்றியும் இன்னும் அவர்களின் சமூக அரசியல் நிலை பற்றியும் ஆராயப் பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதான ஆய்வுரை வழங்க உள்ளார் :
சகோ. E.M. அப்துர் ரஹ்மான் அவர்கள்
பொதுச் செயளாலர், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா
நாள் : 8ம் தேதி நவம்பர் மாதம் 2008
நேரம் : சரியாக மாலை 6.30 மணியளவில்
இடம் : E.M. ஃபாரூக் ஆடிட்டோரியம் - பல் லக்கி பிளாசா, G.H. ரோடு, முகவை
ஒன்றுபட்டு வலிமை பெற அழைக்கிறது
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா
முகவை மாவட்டம்

Sunday, November 02, 2008

சென்னையில் PFI தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சார துவக்கவிழா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சார துவக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம்


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தேசிய அரசியல் மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளது. இதன் பிரச்சார துவக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியிலுள்ள தம்புச் செட்டித் தெருவில் நேற்று(2112008) நடைபெற்றது.

கூட்டத்திற்கு மனித நீதிப்பாசறையின் மாநிலத்தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் யாமுகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் தேசிய அரசியல் மாநாட்டின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் அவர் கூறியதாவது.

""இன்று சென்னையிலே நடந்து கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய அரசியல் மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழா, இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏன் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது என பலருக்கும் சந்தேகம் வரும். நாம் சுதந்திரமடைந்த 62 ஆண்டுகள் கழிந்து விட்டன. சுதந்திரப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் பங்கெடுத்த நாம் சுதந்திரத்திற்குப் பின் நடந்த தேசப்பிரிவினையின் காரணமாக நிராதரவாக நின்று கொண்டிருக்கிறோம்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் தலித் முஸ்லிம் ஒற்றுமை உயர்ந்து வந்தது. தலித் மக்கள் அம்பேத்கர் தலைமையிலும் முஸ்லிம்கள் முஹம்மது அலி ஜின்னா தலைமையிலும் ஒன்று திரண்டார்கள்.

இந்த தலித் முஸ்லிம் ஒற்றுமையை ஒரு மிகப்பெரிய விபத்தாகக் கண்ட உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆட்சியதிகாரம் தங்கள் கைகளை விட்டுச் சென்று விடுமோ என்று அஞ்சினார்கள்.


இந்த ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உயர்ஜாதி பார்ப்பனர்கள் உருவாக்கிய திட்டமே தேசப்பிரிவினை. இத்திட்டத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். தேசப் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. முஸ்லிம்களின் பொருளாதாரமும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது.
ஆனால் இந்திய முஸ்லிம்கள் இங்குள்ள ஆட்சியாளர்களால் நிர்க்கதியாக்கப்பட்டார்கள். ஆதரவற்று இங்கிருந்த முஸ்லிம்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அது, காங்கிரஸைப் பின்பற்றிச் செல்வது.
இதனடிப்படையில் இந்த முஸ்லிம்கள் உருது மொழி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என சிறு சிறு தேவைகளை மட்டுமே முன் வைத்தனர்.
இதன் பிறகு 30 வருடங்கள் கழித்து மண்டல் கமிஷன் வந்தது. தலித்கள், யாதவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் முன்னேற்றப்பட வேண்டிய சமூகத்தினர் என அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் பிறகு சச்சார் கமிஷன் வந்தது. முஸ்லிகள் தலித்களை விட பின்னே சென்றுள்ளனர் என அறிக்கை சமம்பித்தது. மண்டல் கமிஷனுக்கும் சச்சார் கமிஷனுக்கும் இடைப்பட்ட வருடங்களில் எந்த முன்னேற்றமும் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை.

ஆனால் மண்டல் கமிஷனில் கூறப்பட்ட மற்ற இரண்டு சமூகத்தாரான தலித்களும், யாதவர்களும் மாயாவதி, லல்லு பிரசாத் யாதவ் என இன்று இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறியுள்ளனர்.ஆனால் முஸ்லிம்களின் நிலையோ இன்று மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.


எங்கு, என்ன நடந்தாலும் விசாரணை முஸ்லிம்களை நோக்கியே சுற்றிச் சுற்றி வருகிறது. முஸ்லிம்கள் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம் கடந்த 60 வருடங்களாக அவர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதுதான். இரண்டாந்தரக் குடிமக்களைப் போல் முஸ்லிம்கள் நடத்தப்படுகிறார்கள். தேசப்பற்றில்லாதவர்கள், நாட்டுப் பற்றில்லாதவர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

தேசத் துரோகிகள் என முஸ்லிம்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் நாம் நேசிக்கும் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை. கூமர் நாராயணன் முதல் "ரா'வின் ரபீந்தர் சிங்வரை யாரும் முஸ்லிம்கள் இல்லை.

இப்படி நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு மத்தியில் நாம் நமது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா? பாகிஸ்தானிலிருந்து இங்கு குடியேறி இந்துக்கள் எனவும், முஸ்லிம்கள் எனவும் கிறிஸ்தவர்கள் எனவும் மக்களை மத ரீதியாகப் பிரித்து பிளவுபடுத்தி நாட்டையே ரத்தக் களரியாக்கும் ஃபாசிஸ்டுகளுக்கு முன், சுதந்திப் போராட்ட யுத்த களத்தில் தலை வெட்டி வீழ்த்தப்பட்ட வீர தியாகிகளின் வாரிசுகள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா?

அந்த காலம் கடந்து விட்டது எனதருமை சகோதரர்களே! பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற பீதியை ஏற்படுத்தி தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களை வளைக்கவே, முஸ்லிம்களின் வாக்கு வங்கி சிதறியது. முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இல்லாமலாக்கும் முயற்சியே இது.
இதனை மாற்றி முஸ்லிம்கள் சுயமாக சொத்தக் காலில் நின்று முன்னேறிச் செல்ல வேண்டும். யார் வரக் கூடாது என்று இது நாள் வரை எதிர்மறை (Negative Politics) அரசியலைக் கடைப்பிடித்து வந்த முஸ்லிம்கள் இனி தாங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற நேர்மறை (Positive Politics) அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுவதற்காகவே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.''

மேலும் கூட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் இ.எம்.அப்துர்ரஹ்மான், கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிட்டியின் மாநில தலைவர் டாக்டர் மக்பூப் ஷரீஃப், மூத்த வழக்கறிஞர் பவானி பா. மோகன், தமிழக முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுத்தீன், முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செயலாளர் முகமது ஹனீஃபா, எம்.என்.பி.யின் மாநில துணை தலைவர் ஷேக் முகமது தெஹ்லான் பாகவி மற்றும் மௌலவி முகமது மன்சூர் காசிஃபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய அரசியல் மாநாட்டுக்கு ஆதரவு தந்தனர். இறுதியில் எம்.என்.பி.யின் மாநிலச் செயலாளர் ஃபக்ருதீன் நன்றியுரையாற்றினார்.


செய்திகள் :
ஏ.முகமது யூசுஃப்,
மீடியா கன்வீனர், மனித நீதிப் பாசறை.

Friday, October 31, 2008

MNP - PFI தேசிய அரசியல் மாநாடு

தேசிய அரசியல் மாநாடு
சென்னையில் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் இ.எம். அப்துர் ரஹ்மான் பேட்டி


எதிர்வரும் 13, 14, 15 பிப்ரவரி 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நடத்தவுள்ளது. இதன் நோக்கம் ""ஆக்கப்பூர்வமான நேரடி அரசியலின் மூலம் முழுமையாக எல்லாத் துறையிலும் சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும்'' என்பதுதான்.
பலமான அரசியலமைப்பு மற்றும் சட்ட அடித்தளத்தைக் கொண்ட மிகச்சிறந்த ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மற்றவர்கள் மீது ஆட்சி செய்யும் என்று பொருள் கொள்ள முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்துடன் எல்லாக் குடிமக்களுக்கும் சமநீதி வழங்கக் கூடியதுதான் நமது அரசியல் அமைப்பு.

கடந்த அறுபது ஆண்டுகளாக பெரும் தொழில் நிறுவனக் குழுமங்கள் மற்றும் பாரம்பரிய உயர்சாதியினணிரக் கொண்டு ஆளும் அதிகணிர வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆளும் வர்க்கம் ஜனநாயகத்திலுள்ள பல்வேறு துறைகளை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு கீழுள்ள (அடிமைகள் போல கிடக்கும்) மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து தங்களுடைய ஆளும் மேல்ஜாதி வர்க்கத்திற்காக மட்டும் சேவகம் புரிந்து வருகின்றது.

இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு பலியாகக் கூடியவர்கள் ஏழைகள், கிரணிமவாசிகள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள்,சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் சோஷலிசம் நமது அரசியல் கட்சிகளின் கோஷமாக இருந்தது. இன்று அது காணாமல் போனது.

மேற்கத்திய உலகில் சிறிது சிறிதாக நொறுங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், வளர்ச்சி என்ற போர்வையில் நம்மிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. விவசாய உற்பத்தி, வறுமை ஒழிப்பு, சம பங்கீடு போன்ற அடிப்படை பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகிறது.

ஜனநாயக வழிமுறையின் மூலமே இந்துத்துவ ஃபாசிஸம் நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு நிர்வாகம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒடுக்குகிறோம் என்ற பெயரில் பல முஸ்லிம்களை சட்டவிரோத கஸ்டடியில் விசாரணை இல்லாமலும், பிணையில் விடுதலை செய்யாமலும் போலி என்கவுண்டர் மூலமாகவும் குறி வைத்து வருகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பின் ஒரு சில பிற்பட்ட வகுப்பினணிரச் சேர்ந்த சாதியினர் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தேர்தல் அரசியலில் முன்னேற்றமடைந்துள்ளனர். எனினும் மதவாதிகள், ஆதிக்க வாதிகள் சட்டமியற்றும் சபைகளில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். மற்ற சமூக மதப் பிரிவிக்ணிர ஒப்பிடும் போது முஸ்லிம்கள் என்ற இந்த வகுப்பினர் மட்டும் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இந்த பின்னடைவிற்கான காரணம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்தல் மற்றும் ஹிந்துக்களுடைய ஓட்டுக்கள் கிடைக்காமல் எதிர்ப்புக்குள்ளாகலாம் என்று கருதி அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தத் தயங்குகின்றன. இந்தச் சூழலில், காலங்காலமாக ஓரங்கட்டப்பட்ட சமுதாயம் தங்களுடைய உடனடி (உள்ளூர்) எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் தங்களது ஆதரவு மாற்றும் போக்கைக் கைவிட வேண்டும். இந்த அணுகுமுறை, நாட்டின் கொள்கை முடிவுகளில் முடிவெடுக்கும்போது தங்களது உரிமைகளை தக்க வைக்கவும் (தங்களிடமுள்ள எல்லா வகையான) வளங்களையும் முறையாகப் பங்கீடு செய்து பயன்படுத்துவதிலும் பயனளிக்கிறது.

இந்த பிற்படுத்தப்பட்ட சக்திகளை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தி தங்களுக்குரிய அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் இதுவணிர கொடுத்து வந்த நிர்ப்பந்த அரசியல் (Pressure Group Politics) அவர்களின் அரசியல் வெறுமைக்கு தீர்வாகாது. ஓரங்கட்டப்பட்ட வகுப்பினர் அரசியல் சக்தியும், போதிய பிரதிநிதித்துவமும் பெற தேவையான வழிமுறைகளைப் பற்றி விவாதித்து தேவையான தீர்வுகளை செயல்படுத்த இருக்கும் நிகழ்ச்சிதான் தேசிய அரசியல் மாநாடு.

முதல் இரண்டு நாட்கள், நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்கள், அறிஞர்கள் மேற்கூரிய கருப் பொருளில் பல்வேறு கோணத்தில் விவாதிப்பர். ""அரசியலில் சக்தி பெறுதல்: மாற்று வழிக்கான தேடல்'' ""தீவிரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறும்.

இதே கருத்தை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னையில் நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூ பக்கர் அவர்கள் பொதுக்கூட்டம் வாயிலாக பிரச்சாரத்தைத் துவக்கி வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மனித நீதிப் பாசறையின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஷேக்
முஹம்மது தெஹ்லான் பாகவி, கே.எஃப்.டி.யின் தலைவர் டாக்டர் மஹபூப் ஷரீஃப், மூத்த வழக்றிஞர் பவானி. பா. மோகன், வழக்கறிஞர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன் Ex. M.L.A, மௌலானா மன்சூர் காஷிஃபி, முஸ்லிம் தொண்டு இயக்க செயலாளர் முஹம்மது ஹனீஃபா ஆகியோர் பொதுக் கூட்டத்தில் உணிரயாற்றுகின்றனர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர்
இ.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். பேட்டியின் போது எம்.என்.பி.யின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயலாளர் ஃபக்ருத்தீன், செயற்குழு உறுப்பினர்கள் செய்யது இப்றாஹீம் மற்றும் யூஸுஃப் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : இ.எம். அப்துர் ரஹ்மான்
பொதுச் செயளாலர் - PFI

Saturday, October 18, 2008

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

திறப்பு விழாவில் உரையாற்றும் PFI தலைவர் அபுபக்கர் சாஹிப் அருகில் தலைவர்கள்

வரும் 2009 பிப்ரவரி 13,14,15 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் காலிகட்டில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நடத்த திட்டமிட்டுள்ள தேசிய அரசியல் மாநாட்டின் ஒருங்கினைப்பு கமிட்டி அலுவலக திறப்பு விழா இன்று பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. அபுபக்கர் சாஹிப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நடக்கவிருக்கும் இம்மாநாடு பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை இனத்தவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக பெரும் மாற்றத்திற்குள்ளாக்கி அவர்களை அரசியல் ரீதியாக வலிமை மிக்கவர்களாக மாற்றும். இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய ஆளும் வர்க்கம் இன்று முதலாலித்துவத்தையும், வகுப்புவாத்தையும் பாதுகாக் கூடியதாக மாறிவிட்டது என்றும் நாட்டை ஆளும் மத்திய அரசு சர்வதேச விலை இறக்கத்திற்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலைவாசியை குறைக்கவில்லை என்றும், முஸ்லிம்களின் பெயரில் தீவிரவாதத்தை விதைத்துவரும் சங்பரிவார சக்திகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ள வில்லை என்றும் தெறிவித்தார்.

நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் E.M அப்துல் ரஹ்மான், KFD மாநிலத் தலைவர் டாக்டர் மஹ்பூப் சரீப், தமிழக எம்என்பி தலைவர் முகம்மது அலி ஜின்னா , என்டிஎஃப் மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மான் பாக்கவி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டு ஒருங்கினைப்பு கமிட்டியின் தலைவர் கே.எம். சரீப் அவர்கள வரவேற்புரை நிகழ்த்தினார், திரு.OMA சலாம் நன்றியுரை வழங்கினார்.

Monday, October 06, 2008

சமுதாய செய்திகள்

கோவை MNP இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 21.09.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை போத்தனூர் ரோட்டில் உள்ள சங்கமம் திருமன மன்டபத்தில் மனித நீதிப் பாசறையின் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எம்.என்.பி மாவட்ட செய்லாளர் திரு. M.Y அப்பாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். தேனியில் இருக்கும் அறிவகம் முதல்வர் D.செய்யது இபுறாஹிம் உஸ்மானி எம்.என்.பி மாவட்ட தலைவர் A.S. இஸ்மாயில் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியாக் எம்.என்.பி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் A.A. அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் விளையாட்டு போட்டிகள்


கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் தினத்தை முன்னிட்டு யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF- UNITED STUDENTS FRONT) சார்பாக விளையாட்டு நிகழச்சிகள் நடைபெற்றன. இதில் கபடி, வாலிபால் போன்ற போட்டிகள் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மங்களம்பேட்டை ஆயிஸா (ரலி) பென்கள் கல்லூரி செக்கரட்டரி அபீருதீன் மன்பஈ அவர்கள், மங்களம்பேட்டை காவல்துறை அதிகாரி திரு. சரவனகுமரன் அவர்கள், MNP நகர் தலைவர் அபுல் ஹஸன் அவர்கள், அம்பயர் திரு. அபுசாலிஹ் , நகர் தமுமுக நிர்வாகி திரு. ஹஸன் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

அணுசக்தி ஓப்பந்தம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியில் தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) இந்திய நலன்களுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் மத்திய அரசின் அனுசக்தி ஓப்பந்தத்தை கண்டித்து மபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. MNP விழுப்புரம் மாவட்ட தலைவர் திரு. ரஃபீக் அவர்கள், MNP கல்லக்குறிச்சி மற்றும; சங்கராபுரம் மன்டல தலைவர் திரு. சித்திக் , மங்களம்பேட்டை ஆயிஸா (ரலி) பென்கள் கல்லூரி செக்கரட்டரி அபீருதீன் மன்பஈ அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

IIC தாவா மற்றும் இஃப்தார்

இஸ்லாமிய தகவல் மையம் (IIC) சார்பாக விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியில் தாவா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழச்சியில் சமதியா பள்ளி இமாம் மெளலவி இபுறாஹிம் அவர்கள், , MNP கல்லக்குறிச்சி மற்றும; சங்கராபுரம் மன்டல தலைவர் திரு. சித்திக் அவர்கள், மெளலவி ஷம்சுல் இக்பால் அவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெறற்னர்.

செய்திகள் : திரு. அபீருதீன் மன்பஈ அவர்கள்

Wednesday, September 17, 2008

CARTOON விவகாரம் தினமலர் நிர்வாகிகள் கைதாவார்களா? - உயர் நீதிமன்றம் ஜாமின் மனுவை நிராகரித்தது

தினமலரின் நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்யுமா?

இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம்
என்று கூறி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டு தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டி விட்டு தமிழகத்தை இரத்தகாடாக்க சதி செய்த தினமலர் பத்திரி்கையின் மீது பல்வேறு பட்ட வழக்குகளை தமிழகமெங்கும் மனித நீதி பாசறை என்ற அமைப்பு தொடுத்தது. இந்த வழக்குகளில் தங்களை கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு செய்திருந்தனர். கடந்த 5.09.2008 அன்று விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் 10.09.2008 க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது இது சம்பந்தமாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மீண்டும் 10ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கும் பின்னர் 15ம் தேதிக்கும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது 15ம் தேதி விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு அவர்கள் வாதாடினார்கள். தினமலர் பத்திரிகை இந்த புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குறிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டு இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்தி மதன கலவரத்தை தூண்டக்குடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தெர்ர்புடைய தினமலர் நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட் வேண்டும் என்றும் அவர்களுக்கு கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் வாதிட்டார்.

தினமலர் சார்பாக வாதாடிய அதன் வழக்கறிஞர், தினமலர் இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லையென்றும் இதன் பததிரிகைகளில் ரமழான் மாதத்தில் அதன் சிறப்புக்களை பற்றிய செய்திகளை தினமும் வெளியிடுவதாகவும், இன்னும் லைலத்துல் கத்ரு பற்றிய செய்திகளையும் வெளியிட்டு வருவதாகவும் இன்னும் இந்த கேலிச்சித்திர விசயமானது தங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு பிரசுரமாகிவி்ட்டது என்றும் அதற்காக தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வருத்தம் தெறிவித்து செய்தி வெளியிட்டதாகவும் வாதிட்டார்.

இடையில் குறுக்கிட்ட மறியாதைக்குறிய நீதிபதி ரகுபதி அவர்கள் தினமலரின் வழக்கறிஞரை பார்த்து " நீங்கள் இது போல் வாதிடாதீர்கள்...உங்கள் விளக்கம் பொறுப்பற்றதாக உள்ளது" என்று கடிந்து கொண்டார்.

இடையில் குறுக்கிட்ம மனித நீதிப்பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு அவர்கள் தினமலரின் வழக்கறிஞர் கூறுவது போல் இல்லை தினமலர் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்துவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும். ஒருதலைப்பட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு முஸ்லிம்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து தொடாந்து செய்திகளை வெளியிட்டு வருவதை தனது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகவே கொண்டுள்ளது என்றும் வாதிட்டார்.

இன்னும் தினமலரை போன்றே இந்த கேலிச்சித்திரத்தை டென்மார்க்க பத்திரிகை பிரசுரித்த காரனத்தால் எழுந்த மேதல்களில் 150 க்கும் அதிகமான உயிர்கள் பலியானதையும், தொடர்ந்து தினமலர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தறித்து அவதூறு பரப்பி நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்து வருவதையும் இதற்காக மனித நீதிப்பாசறை பதிவு செய்துள்ள தினமலருக்கெதிரான பல்வேறு வழக்குகளையும் சுட்டிக்காட்டி தினமலரின் நிர்வாகிகளுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அவர்கள் தினமலரின் நிர்வாகிகள் தங்களை கைது செய்யாமலிருக்க பதிவு செய்திருந்த முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்து அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று கூறி உத்தரவிட்டார்.

அல்ஹம்துலில்லாஹ் தினமலருக்கெதிராக நமது சமுதாயத்தின் பிரதிநிதிகளாக மனித நீதிப் பாசறையினர் நடத்திய சட்ட போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இன்சா அல்லாஹ் இத்துடன் நின்றுவிடாது நமது அமைப்புகள் அனைத்தும் விடாது ஒருங்கினைந்து போராட்டங்களை நடத்தி தினமலரின் நிர்வாகிகளை அரசு கைது செய்யும் வரை போராடி அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும்.

தகவல்கள் : நன்றி : திரு. முகம்மது யூசுஃப் M.A B.L
State Executive Council Member, MNP

Tuesday, September 16, 2008

கலைஞரே இதுதான் உம் நெஞ்சுக்குள் நீதியா?

வேண்டும் சம நீதி!
லீலாவதி கொலைக் கைதிகள்
அவசர கருணையோடு விடுதலை!
11 ஆண்டுகள் சிறையில் கழித்த
முஸ்லிம்களுக்கு விடுதலை மறுப்பு!
கலைஞரே இதுதான் உம் நெஞ்சுக்குள் நீதியா?

இவண்
மனித நீதிப் பாசறை தமிழ்நாடு

Monday, September 15, 2008

மங்களம்பேட்டையில் பென்கள் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாவின் அருளால் ISDFT மற்றும் ஜம்இய்யத்துன்னிஸா சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மங்கலம்பேட்டை காயிதே மில்லத் பள்ளியில் ISDFT ன் நிறுவனர் ஆபீருத்தீன் தலைமையில் 14.09.2008 ஞாயிற்று கிழமை துவங்கியது அன்று நிகழ்ச்சியில் ஜம்இய்யத்துன்னிஸô மாவட்ட தலைவர் ஜன்னத்துன் நயீம் ஆலிமா உரைநிகழ்த்தினார்கள். மனித நிதி பாசறை நகரத் தலைவர் அபுல்அசன் நன்றி உரை ஆற்றினார் பயானிலும் இஃப்தார் நிகழ்ச்சியிலும் பெண்கள் 250 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Saturday, September 13, 2008

விழுப்புரத்தில் PFI பீகார் வெள்ள நிவாரன நிதி திரட்டினர்

பீகாரில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கி உயிர் உடமைகளை இழந்த இந்திய குடிமக்களின் நிவாரனததிற்காக தமி்ழ்நாடு, விழுப்புரத்தில் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் உண்டியல் ஏந்தி நிவாரன நிதி திரட்டினர்.

கடை வீதியில்....

பள்ளிவாயில் முன்பாக

Friday, September 12, 2008

முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்குள் நுலைந்து அடித்து நொறுக்கிய போலிஸ் - MNP கண்டனம்

முஸ்லிம்கள் மீது தொடரும் தடியடி மனித நீதிப் பாசறை கண்டனம்

முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கலவர நோக்கில் வந்த சங்பரிவார சக்திகளுக்கு ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக, புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கூட கொடுக்காமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக பள்ளிவாசலுக்குள் "பூட்ஸ்' கால்களுடன் நுழைந்து ரத்தம் வழிந்தோட மயங்கி விழும் அளவிற்கு நோன்பு வைத்திருந்த முஸ்லிம்களைத் தாக்கி பள்ளிவாசல் ஜன்னல் களையும் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்த அப்பாவி முஸ்லிம்களை கைது செய்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித் தனமான கொடூரச் செயலை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

தடியடியில் காயம்பட்ட முஸ்லிம்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் இரத்தம் வழிந்தோடும் நிலையில் பள்ளிவாசலுக்குள்ளே தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற கொடூர செயலை அரங்கேற்றியிருக்கின்றது காவல்துறை. இதை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் வழியாஉகவும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தெருக்கள் வழியாகவும் சென்று மததுவேஷமாக பேசி முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அதில் பலிகடாக்களாக ஆக்க திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறிக் கொண்டு கடையநல்லூர், பேர்ணாம் பட்டு, வேலூர், வேடசந்தூர், திண்டுக்கல், முத்துப் பேட்டை என முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தடியடித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை முஸ்லிம்களிடையே ஆழ்ந்த அதிர்ச்சியையும் பெரும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாகவும் கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தான் சமூக அமைதி கெடுவதற்கும், மதக் கலவரத்திற்கும் காரணம் என பல வருடங்களாக பல உண்மையறிவும் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்தும் இந்துக்களும், முஸ்லிம்களும் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவித்தும் கூட இதில் அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்? மக்கள் ரத்தம் தானே சிந்துகிறது என்ற அலட்சியமா? எனும் கேள்வி மக்கள் மனதில் எழும்பியுள்ளது.

ஆகவே தடியடி நடத்தி முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. இந்த கொலைவெறியாட்டத்தை முன்னின்று நடத்தி சிறுபான்மை விரோதப் போக்குடனும் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அமீத் குமார் சிங், திருச்சி மாவட்ட எஸ்.பி. கலிய மூர்த்தி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாத் குமார், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சிவ பாஸ்கரன், மன்னார்குடி டி.எஸ்.பி. மாணிக்க வாசகம் ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாக கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் ஊர்வலத்தை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. சதுர்த்தி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அல்லாத மாற்றுப் பாதை அமைத்து நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையை மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது.

மேலும் வருங்காலங்களில் முத்துப்பேட்டை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் அமைதிக்கான இந்த செயல்திட்டத்தை அமுல்படுத்தி மாநிலம் முழுவதும் நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையும் மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது. முத்துப்பேட்டையில் தனது காட்டுமிராண்டித் தனத்தை மறைப்பதற்காக காவல்துறையினர் பல அப்பாவி முஸ்லிம்களைகைது செய்துள்ளனர். காவல்துறையால் திட்டமிட்டு பலிகடாக்களாக ஆக்கப்பட்ட இந்த அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனித நீதிப் பாசறை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. தடியடியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு
அ. ஃபக்ருதீன்,
மாநிலச் செயலாளர்,
மனித நீதிப் பாசறை.

Wednesday, September 10, 2008

தினமலர் நிர்வாகிகள் தங்களை கைது செய்யமலிருக்க முன்ஜாமின் கேட்டு மனு MNP குறுக்கீடு செய்ய நீதிமன்றம் அனுமதி

தினமலர் நிர்வாகிகள் தங்களை கைது செய்யமலிருக்க முன்ஜாமின் கேட்டு மனு MNP குறுக்கீடு செய்ய நீதிமன்றம் அனுமதி

கடந்த 05.09.2008 அன்று தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களை கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் மனு தாக்கல் செய்து உள்ளனர். தினமலர் கம்ப்யூட்டர் மலரில் முகம்மது நபியவர்களின் கேலிச்சித்திரம் என்று ஒன்றை வெளியிட்டதால் மனிதநீதிப் பாசறை உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்துள்ள பல்வேறு வழக்குகளில் தங்களை கைது செய்யமலிருக்க கோரி இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள்.

இம்மனு தொடர்பான விவாதத்தில் இவர்களின் வழக்குறைஞர்கள் வாதிடுகையில் தினமலர் பத்திரிகையில் இதுதான் முதல் தடவை இவ்வாறு முகம்மது நபியவர்களின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டது என்றும், இஸ்லாமியர்களின் மத உணர்வை புன்படுத்தும் எந்த உள்நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும் இன்னும் இது தொடர்பாக 05.09.2008 அன்று காலை தினமலரில் முதல் பக்கத்தில் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் ஆகவே தங்களுக்கு இவ்வழக்கில் தங்களை கைது செய்யமலிருப்பதற்காக முன்ஜாமின் வழங்க உத்தரவிடுமாறு வாதிட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தில் ஆஜராகிய மனித நீதிப்பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு அவர்கள் இடையில் குறுக்கீடு செய்து தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகள் கூறுவது போல் முதல் முறையாக தினமலர் இது போல் செய்யவில்லை என்றும். இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்துவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும். ஒருதலைப்பட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு முஸ்லிம்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து தொடாந்து செய்திகளை வெளியிட்டு வருவதை தனது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகவே கொண்டுள்ளது என்றும் வாதிட்டார்.

அத்துடன் மனித நீதிப் பாசறையின் சார்பாக தினமலரின் ஒரு சமூகத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்புதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மதுரை மாவட்ட எம்என்பி செயளாலர் திரு நஸ்ருதீன் அவர்கள் மூலம் முகம்மது நபியவர்களை பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக மதுரை என் 5 ஜீடிசியல் கோர்ட்டில் ஒரு கிரிமினல் வழக்கும், ஜே எம் 1 நீதி மன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கும், பெரியகுளம் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கும் தினமலர் மீது தொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இவர்களுக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட மதிப்பிற்குறிய நீதிபதி அவர்கள் எம்.என்.பி இந்த வழக்கில் குறுக்கீடு செய்து வாதிட அனுமதி வழங்கி இது தொடர்பான ஆவனங்கள் அனைத்தையும் 10.09.2008 அன்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மேலதிக விபரங்கள் தெர்டாச்சியாக பதிவு செய்ய்படும் இன்சா அல்லாஹ். வழக்கில் முஸ்லிம்கள் வெல்வதற்கும் தினமலர் நிர்வாகிகளை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவிடுவதற்கும் துஆ செய்யவும்.

செய்தி உதவி : திரு. முகம்மது யூசுஃப் M.A B.L
State Executive Council Member, MNP

Tuesday, September 02, 2008

தினமலருக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் அழைக்கின்றது MNP

எமது இரத்தம்...உயிர்...உடல்...உடமை உமக்கே சொந்தம் எங்கள் நபியே!! இவை அனைத்தையும் இழந்தாவது உமது கண்ணியத்தை காப்போம் யா ரசூலல்லாஹ்...!!!



அஸ்ஸலாமு அலைக்குமு் (வரஹ்)

அன்பின் இஸ்லாமிய சமுதாயமே, பார்ப்பனியம் மற்றும் இந்துத்துவத்தை மொத்த குத்தகைக்கு எடுத்து இஸ்லாமியருக்கு எதிரான செய்தி வெளியிடுவதையே தனது முக்கிய குறிக்கோளாக கொண்ட இந்து தீவிரவாத பத்திரிகைளான தினமலத்தின் நேற்றைய வெளியீட்டில் நமது உயிரினும் மேலான அண்ணல் நபியவர்களின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சிகளை சீன்டி பார்த்துள்ளது.

நாட்டில் தீவிரவாதத்தை விதைத்து வண்முறையை தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ள பார்ப்பனிய பத்திரிகையான தினமலத்தின் இந்த இழிபோக்கை கண்டித்து மனித நீதிப் பாசறை இன்று சரியாக மாலை 3.00 மனியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகினல் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமிய சமுதாயமே திரண்டு வா...இந்து தீவிரவாதத்திற்கு எதிரான நம் போராட்டத்தில் உனது பங்கையும் இடம்பெறச் செய்...


அழைக்கின்றது மனித நீதிப் பாசறை!! அணி திரள்வீர் சமுதாயமே!!
இடம் : சென்னை மெமோரியல் ஹால் அருகில்
நேரம் : இன்று பிற்பகல் சரியாக 3.00 மணியளவில்
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template