Showing posts with label pfi. Show all posts
Showing posts with label pfi. Show all posts

Thursday, February 04, 2016

பல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருளுடன் எஸ்.டி.பி.ஐ - பி.எஃப்.ஐ நிர்வாகிகள் கைது



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் இசுலாமிய சொந்தங்களுக்கும், நீதி, நியாயமிக்க மனசாட்சி உடையோருக்கும், இன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ போன்ற பெயர்களில் செயல்பட்டு வரும் அமைப்பினர் எம்.என்.பி யாக இருந்த காலங்களில் இருந்து நான் இவர்களின் தீவிர ஆதரவாளனாகவும், அன்றைய காலங்களில் இவ்வமைப்பினர் காவல்துறையாலும் , உளவுத்துறையாலும் துன்புறுத்தப்பட்டபோது என் கையில் இருந்த ஊடகங்களின் மூலம் இவர்களுக்காக நான் பலத்த குரல் எழுப்பியுள்ளேன். இரத்தின சபாபதி என்ற அதிகாரியால் இவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டு இவர்களின் அமைப்பினர் துன்புறுத்தப்பட்டபோது இவர்களுக்காக இணையத்தளங்களின் வாயிலாக இவர்களுக்கு ஆதரவாக பெரிய யுத்தமே நடத்தியவன் நான். எனது எழுத்துக்களின் மூலமும் இவர்களின் வளர்ச்சி இருந்தது என்பது சற்றும் மறுக்க இயலாத உண்மை இவர்கள் இயக்கத்தின் மூத்த தலைவர்களை கேட்டால் தெறியும் நான் இவர்களுக்காற்றிய உதவி எவ்வளவு பாரிய அளவிலானது என்று.



SDPI மெம்பர் என ஹிந்துவில் வந்துள்ள செய்தி
 

ஆனால் 2010 ம் வருடத்திற்கு பின்னால் நான் இந்தியாவில் இருந்து இவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவணித்து வந்தபோது தான் இவர்களின் வேறு ஒரு முகம் எனக்கு தெறியவந்தது. இது குறித்து இவர்களின் தலைமைக்கு தெறியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இவர்களைப்பற்றி யதார்த்தங்களை எனது எழுத்துக்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியதால் என் மீதான பல தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினத் நடத்தினர். மிகச் சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் என் மீது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி என்னை கொல்ல முயன்றபோது நான் காவல்துறையில் அளித்த புகாரிலும் , வாக்குமூலத்திலும் சில விசயங்களை உறுதிப்பட கூறியிருந்தேன் அவற்றில் ஒன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பினர் இலங்கையில் இருந்து கடல் வாயிலாக போதைப்பொருள் , ஆயுதக்கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று.


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் கீழக்கரை அப்துலு் ஹமீதுடன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நிர்வாகி நவாஸ்கான் 

எனது புகாரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைத்தனர் ஆனால் மூன்று மாதங்களில் முறையாக இல்லாமல் பிழைகளுடன் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்ததால் அதை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் 450 க்கும் மேறப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர் அதில் இவ்வமைப்பினரும் விடுவிக்கப்பட்டனர். நான் கொடுத்த வழக்கில் தற்சமயம் பிணையில் உள்ளனர் வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது இன்சா அல்லாஹ் இவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவேன்.


கோடிக்கணக்கான மதிப்புள்ள கஞ்சா கடத்தலில் கைதாகியுள்ளவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ வால் போஸ்ட்டர் 

இந்த வழக்கு குறித்து மேற்படி அமைப்பினரின் ஊதுகுழலான புதிய விடியல் எனும் புத்தகத்தில் 5 பக்கத்திற்கு அவதூறுகளையும், கற்பனைகளையும் தாங்கி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில் நான் கொடுத்த புகார் பொய் என்றும் எனது வாக்குமூலத்தில் நான் கூறியிருந்த தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதை என்றும் அப்போதைய எஸ்.பி யான திரு. மயில்வாகணன் மற்றும் எஸ்.ஐ ஜேசுதாஸ் ஆகியோர் என்னுடன் கூட்டு சோ்ந்து அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கற்பனை செய்து எழுதியிருந்தனர் . அத்துடன் என்னை ஒரு சமூக விரோதி என்றும் , விபச்சார ஏஜென்ட் என்றும் என்மீதான வழக்குகளை பட்டியலிட்டு எழுதியிருந்தனர். அத்துடன் என் மீது காவல்துறைக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் பொய்யான பெயர்களில் பல மொட்டை கடிதங்களை போட்டு வந்தனர்.

 


ஆனால் பாருங்கள் தோழர்களே வல்ல இறைவன் எவ்வளவு வல்லமையானவன் என்று? நான் எனது புகாரிலும், வாக்குமூலத்திலும் கூறிய சம்பவங்கள் ஒவ்வொன்றும் உண்மை என நிறுபிக்கும் வகையில் சமீபத்திய நிகழ்வுகளை இறைவன் நடத்தி காட்டி வருகின்றான்.



பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் முக்கிய வருமானமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் மூலம்தான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது சகோதரர்களே அதுவும் யாரால் தெறியுமா? பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினராலுயே மிக நோ்மையான அதிகாரி என சான்றளிக்கப்பட்ட கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி மூலமாகவவே உண்மைகள் வெளியே வந்துள்ளன.



பி.எப்.ஐ - எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகி நவாஸ்கான்
 

சமீபத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் முக்கிய நிர்வாகியான இராமநாதபுரம் நேரு நகரில் வசிக்கும் நவாஸ் கான் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இவர்களின் ஆதரவில் தங்கியிருந்த இலங்கையை சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயமாக நவாஸ்கான் இதற்கு முழு பொறுப்பாக மாட்டார் , காவல்துறை கட்டாயம் முழு விசாரனை செய்து இதில் பின்புலமாகயிருக்குமு் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பின் முக்கிய தலைவர்களையும் , பொருளாதார உதவி செய்பவர்களையும் விரைவில் பிடிக்கும் அப்போது உண்மை தெறிய வரும்.



நோ்மைக்கும் உண்மைக்கும் பெயர் போன டி.எஸ்.பி மகேஸ்வரியின் மீது அவர் ஒரு பெண் என்று கூட பாராமல் பல அவதூறுகளை தற்சமயம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் வாரி இறைத்து வருகின்றனர். கடந்த முறை எஸ்.பி மயில்வாகணன் இருக்கும்போது அவரையும் எஸ்.ஐ ஜேசுதாசையும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என சித்தறித்தனர். தற்போது இருவரும் மாறுதலாகிவிட்டனர் தற்சமயம் திரு. மணிவண்ணன் என்ற ஒரு மிக நோ்மையான அதிகாரி எஸ்.பி. யாக உள்ளார். இவரின் நோ்மைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினரே சான்றளித்துள்ளனர். இவர்கள்தான் தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகியான நவாஸ் கானை கையும் களவுமாக கைது செய்துள்ளனர் . இவ்வமைப்பினரின் வீடுகளில் இருந்தே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த செய்தி தமிழகத்தின் ஆங்கிலம், தமிழ் என அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பிடிபட்டுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ  அமைப்பின் நிர்வாகி நவாஸ்கான் என்பவர் இதுவரை எந்த ஒரு குற்ற வழக்கிலும் சிக்காதவர், இவரை காவல்துறையினர் ஆதாரங்களுடன் பிடித்துள்ளனர் என்பதிலிருந்து தெறியவில்லையா இது உண்மை என்று. கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம் என்றவுடன் தற்போது இவ்வமைப்பினர் இஸ்லாம், முஸ்லிம்கள், பொய் வழக்கு , காவல்துறையினர் காவித்துறையாக மாறிவிட்டனர் இது ஆர்.எஸ்.எஸ் சின் சதி என கூப்பாடு போடுகின்றனர். ஏன் தமிழக காவல்துறையில் ஒரு அதிகாரி கூடவா நோ்மையானவராக இல்லை? அனைவரும் ஆர்.எஸ்.எஸ் சின் கை்ககூலிகளா?

இஸ்லாம், முஸ்லிம்கள், ஜிஹாத் என கோசம் போட்ட இந்த போலி இஹ்வான்களின் முகத்திறை தற்போது கிழிந்துள்ளது. இவர்களின் உண்மை முகம் கஞ்சா, ஹெராயின், போதை, ஆயுதக்கடத்தல் என்பதுதான் என்பதை மக்கள் புறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் தடுத்துள்ள போதை வஸ்த்துக்களை கடத்தி அவற்ற கோடிக்கணக்கில் விற்பதிலேயே இவ்வமைப்பினரின் பொருளாதாரம் இயங்குகிறது என்பதையும் மக்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.



காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் நினைப்பதுபோல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பத்தோடு பதினொன்றாக ஒரு அமைப்பு இல்லை, இவர்களின் பின்புலும் முழுவதுமாக அலசி ஆறாயப்பட வேண்டிய ஒன்று என்பதையும், இவர்களின் எல்லை தாண்டிய தொடர்புகள் முழுவதுமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும். மாநில , மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நான் இவர்கள் மீது அளித்துள்ள அனைத்து புகார்களையும் ஆய்வு செய்து அவற்றை மறு விசாரனை செய்தால் இவர்களின் முழு குற்ற பிண்ணனியும் தெறிய வரும். இந்திய தேசத்திற்கும், தேச பாதுகாப்பிற்கும் எதிரான அனைத்து காரியங்களையும் செய்து வரும் இவர்கள் தங்களை தற்காத்து கொள்ள இடை இடையே வெள்ள நிவாரனப்பணிகள், நோட:டு புத்தகம், ஸ்கூல் பேக் வழங்குதல் என சில லட்சங்களை செலவு செய்து சமூகப்பணிகள் என்ற பெயரில் புகைப்படங்களையும் , வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு தங்களை சமூக நல இயக்கம் என நீதிமன்றங்களில் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள் அதற்கு ஆதாரமாக மேற்கூறிய புகைப்படங்களை தாக்கல் செய்வார்கள், நீதியரசர்களும், அதிகாரிகளும் இவ்விசயத்தில் மிக கவணமாக இருக்க வேண்டும்.



இராமநாதபுரம் எஸ்.பி மணிவண்ணனின் நேர்மையை பாராட்டும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர்
 

வெளிநாட்டில் சம்பாதித்து தங்களின் செல்வங்களை வாரி வழங்கும் தோழர்களு அறிந்து கொள்ளுங்கள் இவர்களின் உண்மை முகத்தினை , நாட்டில் தொழில் செய்கிறோம் உங்களுக்கும் பங்கு தருகிறோம் என உங்களிடம் வாங்கிய பணத்தினை கொண்டு இவர்கள் செய்யும் கேவலமான தொழில் என்ன என்று இப்போது புறிகிறதா? சமூகத்தினை போதை பொருட்களை கொண்டும், மத மோதல்களை ஏற்படுத்தியும் அழிக்க நினைக்கும் இவர்களுக்காக உங்களின் சதக்கா, ஜக்காத், பித்ராக்களை வழங்குகின்றீர்கள்? சிந்தியுங்கள் தோழர்களே?

மாவட்ட காவல்துறை நிர்வாகமும், மாநில காவல்துறையும் இந்த வழக்கை இத்துடன் விட்டுவிடாது முழுமையாக விசாரித்து முழு குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். கடல வழியாக கடத்தி வரப்பட்டது தங்கமும், போதைப்பொருள் மட்டும்தானா? இல்லை ஆயுதங்களும் வெடிபொருள்களுமா? அப்படியானால் அவை சென்ற இடம் எங்கே? இவற்றிற்கு பைனான்ஸ் செய்யும் பெரும் முதலைகள் யார் யார்? நவாஸ்கான் ஒரு துருப்புதான் இவனின் பின்புலம் என்ன என்பது குறித்து உரிய விசாரனை நடத்த வேண்டும்.



தமிழக முதல்வருடன் டி.எஸ்.பி மகேஸ்வரி அவர்கள்
 

பொய் வழக்கு , போராட்டம் என போஸ்ட்டர் அடித்து ஒட்டி , அநாகரிகமாக பெண் டி.எஸ்.பி. யையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போட்டு வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா , எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் அழுத்தம் கொடுத்து விசாரனையை நிறுத்தவோ திசை திருப்பவோ முயல்கிறார்கள் என்பதை மாவட்ட , மாநில நிர்வாகங்கள் புறிந்து கொள்ள வுண்டும். இது ஒரு முக்கிய குற்ற வழக்கு, தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு காவல்துறை செயலாற்ற வேண்டும். இவர்களின் அரசியல் மிரட்டல்களுக்கு ஒரு போதும் காவல்துறை அடிபணியக்கூடாது. காவல்துறையின் நெஞ்சில் ஏறி மிதிக்க வேண்டும் என தங்கள் தொண்டர்களுக்கு பயிற்சியளிப்பவர்கள் இவர்கள் என்பதை காவல்துறை கவணத்தில் கொள்ள வேண்டும். இதன் பிண்ணனியில் இவ்வமைப்பின் முக்கிய மாநில , மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையையும் அரசையும் கெட்டு கொள்கிறேன்.
இறுதியாக வெளிநாடுவாழ், உள்நாட்டு இசுலாமிய, மாற்று மத நன்பர்கள் இவர்களின் சாயம் வெளுத்துவிட்டதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கானது பொய் வழக்கல்ல...உண்மையான வழக்காகும், விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அணைவரும் நோ்மையானவர்கள் என்பதையும் புறிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தின் பெயரில் செயல்படும் இவர்கள் மாபெரும் இஸ்லாமிய விரோத , தேச விரோத சக்திகள் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  எனது அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருங்கள் இன்னும் முக்கிய ஆதாரங்களுடன் வருகிறேன்.


என்றும் அன்புடன்,

முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
9047507665

Wednesday, April 22, 2009

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா - 37 இடங்களில் தி.மு.க விற்கு ஆதரவு


தமிழகத்தில் பாப்லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு
மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களில் ஆதரவு
தி.மு.க கூட்டணிக்கு 37 இடங்களில் ஆதரவு


15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.

அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.

பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.

எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Thursday, April 02, 2009

தாடி வைப்பது தாலிபானிஸமா? உச்சநீதிமன்ற கருத்துக்கு PFI எதிர்ப்பு


முஸ்லிம்ககளின் மத உரிமையை தாலிபானிஸம் என்று உச்சநீதிமன்றம் சித்தரித்தது ஒரு சமூகத்தையே குற்றம் பிடிக்கும் கருத்து பாப்புலர் ஃப்ரண்ட் அதிர்ச்சி

மத்தியபிரதேசத்திலுள்ள சிறுபான்மையின பள்ளியான நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவன் முஹம்மது சலீமை தாடி வைக்கக் கூடாது என தடுத்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து அந்த மாணவன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தையும் சமூக உரிமைப் போரõளிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை சீக்கிய மதத்தினர் அனுபவிக்கின்றனர். மற்ற மதத்தினரும் அனுபவிக்கின்றனர். இந்து மாணவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். ஐயப்பபன் கோவிலுக்கு செல்ல நேர்ச்சை செய்திருக்கும் இந்து மாணவர்கள் மாலை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் மத உரிமையை மறுத்து தாடி வைக்கக் கூடாது, புர்கா அணியக் கூடாது என அனுமதி மறுப்பது மத ரீதியான பாகுபாடே ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அரசியல் சட்டம் உறுப்பு எண் 14 வழங்கியுள்ள சமஉரிமையை மறுப்பதாகவும் உள்ளது. தாடி வளர்ப்பது முஸ்லிம்களின் மத அடையாளம். முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கையான தாடியை தாலிபானிசம் என உச்சநீதிமன்றம் கூறியது இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் உள்ளது என முஸ்லிம் சமூகம் கருதுகின்றது. வேதனையடைகின்றது.ஷாபானு வழக்கில் ஷரீஅத்தைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்தது போல் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து முஸ்லிம்களின் மத நம்பிக்கையை பாதுகாக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.


இவண்
எம். முஹம்மது அலி ஜின்னா
மாநிலத் தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Friday, March 20, 2009

தென்காசி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடு - பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா


தென்காசி டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாப்புலர் பிரன்ட் வலியுறுத்தல்



தென்காசியில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

நெல்லை, மார்ச் 21: நெல்லை மாவட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயலாளர் மஹ்பூப் அன்சாரி கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

மத துவேச செயல்களில் ஈடுபடும் தென்காசி டி.எஸ்.பி., மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகரையில் அப்பாவி முஸ்லிம்கள் 9 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக காவல்நிலையத்தில் வைத்து ஜமாத்தார்கள், பொதுமக்கள் மத்தியில் அப்பாவி முஸ்லிம்களை மததுவேசத்துடன் பேசி கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் இதில் தொடர்புடைய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி உட்கோட்டத்துக்குட்பட்ட முஸ்லிம்களை குறிவைத்து வீண்பழி சுமத்துவதையும், அவர்களுக்கு பாஸ்போர்ட் தரமாட்டோம் என காவல்துறையினர் மிரட்டுவதையும் கைவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தினகரன் (21.03.2009)

Tuesday, February 24, 2009

முஸ்லிம்களின் தேசிய அரசியல் மாநாடு



குறிப்பு: இந்த மாநாட்டில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு. குத்பதீன் ஐபக் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.


தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் பெயரில் “அதிகாரம் மக்களுக்கே” என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ. உறுப்பினர்கள் உட்பட இலட்சகணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்காற்றினர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது. இதில், பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தர், பஹ்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

அன்று மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் 'அரசியல் அதிகாரமளித்தலும் மாற்று வகைகளும்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இந்தக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த நாள் காலையில் மனித உரிமைகள் ஆர்வலர் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில், ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பி.எப்.ஐ.யின் முன்னாள் தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார். இதில், கான்பூரைச் சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதி நாளான 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கேரள பாப்புலர் பிரண்ட் தலைவர் நசிருதீன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர். அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு 'தேஜஸ் டெய்லி'யின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார். இதில் இந்தியாவின் பலப் பாகங்களிலிருந்தும் பல்வேறு செய்தி, ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பத்திரிக்கையின் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக, "முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக வன்முறையைச் சில பத்திரிகை, தொலைகாட்சிகள் செய்கின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உண்மையைப் பதிவு செய்யவேண்டும்" என்று பேசப்பட்டது. "மதவாதத்திற்கு எதிரான செய்திகளைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும்; செய்தி வெளியிடுவதைக் கடந்து சமூகத்தையே மாற்றக்கூடிய பத்திரிக்கையாளர்கள் தங்கள் பலம் உணர்ந்து சமூக பங்களிப்பு ஆற்ற வேண்டும்" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் நக்கீரன், ஜு.வி, புதிய காற்று போன்ற பத்திரிகைகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். மொத்தத்தில் செய்தித் தளத்தில் ஒரு மாற்று வழியை இக்கருத்தரங்கம் அறிமுகப்படுத்தியது.

மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்” என்ற தலைப்பில் நடந்தது.

தேசியப் பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜம்மியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார், அமெரிக்காவைச் சேர்ந்த மரியம் இஸ்மாயில், புது தில்லி ஹசீனா ஹாசிய ஆகியோர் கலந்து கொண்டார்.

"உலகம் முழுக்க எங்கு வன்முறை, இனப் படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பெருகிவிட்டன. இந்தப் பாசிசத்தை எதிர்க்கப் பெண்கள் அணிதிரள வேண்டும். இந்த எதிர்ப்புப் போரில் பங்களிக்க வேண்டும்.

அதே போல் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம் முதலாளித்துவ கலாச்சாரங்கள்தாம். அவை பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் பண்பாட்டை வளர்கின்றன. அவற்றை நாம் அடித்து விரட்ட வேண்டும். நாட்டில் உள்ள பெண்கள் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் கருத்தரங்கம் இஸ்லாமியப் பெண்களிடம் புதிய கருத்துப் பாய்ச்சலை உருவாக்கி உள்ளது எனலாம்.

15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்புப் பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ. தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது. அங்கு, இரவு 7 மணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார்.

இதில், தமிழக பி.எப்.ஐ. தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனிதக் கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.

இக்கூட்டத்தில் பேசிய பி.எஃப்.ஐ தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

"இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் - குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் - பலியாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில்கூட குண்டுகள் வீசப்படுகிறது.

சிங்கள அரசின் இந்த அராஜகப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும் மத்திய அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பேச்சில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினர் என்போர் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே காலங்காலமாய்ச் சித்தரிக்கப் பட்டுவரும் வேளையில், பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்திருப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

நன்றி : சத்தியமார்க்கம்

Tuesday, January 27, 2009

திட்டக்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - PFI ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி ஜனவரி 28,

கடந்த 20ம் தேதி திட்டக்குடி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகளும், பள்ளியும் விசமிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையில் புகார் தெறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை இந்த விசயத்தில் பாராமுகமாக இரந்து விசமிகளுக்கு துனை போவதால் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்தும், பள்ளிவாசலை சேதப்படுத்தி மத துவேசத்தை ஏற்படுத்த முயன்ற விசமிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டக்குடி பஸ் நிலையம் முன்பாக நடந்நதது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் திரு. செளகத் அலி அவர்கள் தலைமை தாங்க, மெளலவி அபீருதீன், நஸ்ருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திட்டக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் திரு. அக்பர், திரு இக்பால் மற்றும் திட்டக்குடி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பசீர்கான் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த விசயத்தில் விசமிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி வலியுருத்தினர்.

செய்திகள் : அபீருதீன்

Thursday, January 01, 2009

We Are With HAMAS - PFI Protests (நாங்கள் ஹமாசுடன்)

கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக உலக பயங்கரவாதி இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தேசிய அரசியல் மாநாட்டு ஒருங்கினைப்புக் குழுவின் மாவட்ட செயளாலர் எஸ். செய்யது இபுறாஹிம் தலைமையேற்று நடத்த மனித நீதிப் பாசறையின் மாவட்ட செயளாலர் அப்துல் ஜமீல், மாவட்ட தலைவர் பி. அப்துல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கண்டன உரையாற்ற வருவதாக இருந்த தமுமுக வின் மாநில துனைச் செயளாலர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் வராததால் தமுமுக வின்மாவட்ட தலைவர் ஜனாப் சலிமுல்லா கான் அவர்கள் தலைமையில் முக்கியமான் தமுமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.




நிகழச்சியில் இஸ்ரேலிய பயங்கரவாத்தை கண்டித்தும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரானுவ ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் கொண்டே இஸ்ரேலிய தீவிரவாத இரானுவம் அப்பாவி பாலஸ்த்தீன மக்களை கொன்று குவிக்கின்றது என்பதால் இந்தியாவை கண்டித்தும்,இந்தியா இஸ்ரேலுடன்இராஜ்ஜிய உரவை துண்டிக்க வேண்டும் என்றும் கோசங்கள்எழுப்பப்பட்டன.


நிகழச்சியின் இறுதியல்மனித நீதிப் பாசறையை சோந்த ஜனாப்ஃபைசல் அவர்கள் நன்றியுரை கூற நிகழச்சி நிறைவுற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள்கலந்து கொண்டனர்.

Wednesday, December 31, 2008

இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து மதுரையில் PFI ஆர்ப்பாட்டம்


கடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.


அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவில் அங்கம் வகிக்கும் மனித நீதீ பாசறையின் மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம் தலைமை தாங்க மனித நீதீ பாசறையின் மாநில செயற்குழுஉறுப்பினர் A. முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட தலைவர்A.காலித் முஹம்மது, மாவட்ட செயலாளர்S.Pமுஹம்மது நஸ்ருதீன், மத்திய பகுதி தலைவர் M.ஹீரா ஜான் கிழக்கு பகுதி தலைவர் M.லத்தீப் சாஹிப், மேற்கு பகுதிதலைவர் M.அபுதாஹிர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இதில் திரளாக கலந்துகொண்டனர்.

Saturday, December 20, 2008

மங்களம்பேட்டையில் ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா


மங்களம்பேட்டையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. கடலூர் மாவட்ட எ.ம்.என். பி தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். நகர் தலைவா'திரு. அபுல் ஹசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மாநில துனைத்தலைவர் தாவா குழு திரு. பஸ்லுர் ரஹ்மான் அவர்களும், அறிவகத்தின் முதல்வர் மௌவி சையது இபுறாஹிம் உஸ்மானி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினார்களாக மாவட்ட காவல்துறை துனை கண்கானிகப்பாளர் திரு. என். ராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஏ.ஏ. ஜமேஸ் அவர்கள், மங்களம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் திரு. கோபு பிள்ளை அவர்கள், விருத்தாசலம் அரசு வழக்குறைஞர் திரு. இரா. சுப்பிரமணியம் அவர்கள், திரு. ஏ. அக்பர்சா முத்தவல்லி அவர்கள், திரு. எம். அபதுல் பாரி அவர்கள், திரு. சரவன குமரன காவல் ஆய்வாளர் மங்களம்பேட்டை அவர்கள், வழக்கறிஞர் திரு. முகம்மது இபுறாஹிம் அவர்கள், அரசு மருத்துவர்திரு. கதிர் வேல் அவர்கள்,மங்களம்பேட்டை திருச்சபை திரு. மகிமைதாஸ் அவர்கள், திரு. அபிருத்தீன் மன்ப, அவர்கள், திரு. ரிஸ்வர்ன பாசகா அவர்கள் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரு. ஏ. சாஜஹான் வெர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

News : Mr. Abirudeen Manbayee

Friday, December 19, 2008

புதிய சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் PFI கோரிக்கை

சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் பாப்புலர் ஃபிரண்ட் கோரிக்கை

திரும்பப் பெறப்பட்ட கருப்பு சட்டங்களான தடா, பொடாவில் உள்ள கடுமையான விதிமுறைகளை (ஷரத்துக்களை) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் மீண்டும் நுழைக்கப்படுகிறது.எனவே சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தலை
மை கோருகிறது.அரவிருக்கும் சட்ட திருத்தம் காவல்துறைக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கொடுக்கிறது. குற்றம்சாட்டப்பட்டஅணிர 180 நாட்களுக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்க அதிகாரம் வழங்குகிறது.தான் குற்றமற்றவர், அப்பாவி என நிரூபிக்கும் பொறுப்பும் குற்றம் சாட்டப்பட்டவரையே சாரும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்பட்டால் அவருடன் தீவிரவாதத்தில் தொடர்புள்ளதாக சந்தேகப்படும் இயக்கங்களின் சொத்துக்களை முடக்கவும் அரசாங்கத்திற்கு
அனுமதியளிக்கிறது.

ஏற்கனவே தடா, பொடா போன்ற சட்டங்கள் அமுலில் இருக்கும் போது நடந்ததைப் போன்று, சட்டவிதிமுறை மீறல்களுக்கு இந்த புதிய ச்ரத்துகள் வழிவகுக்கும். எனவே காரணமின்றி தீவிரவாதகுற்றம் சாட்டப்பட்ட உண்மையான அப்பாவிகளுக்கு நேர்கமையான விசாரனை தடுக்கப்படுவதுடன் நீதியும் மறுக்கப்படுகிறது. இதில் ஆறுதலான விஷயம் என்னவெனில் காவல்துறை அதிகாரிகள் முன்பாக கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் அங்கீகரிக்கப்பட்ட சாட்சியமாக சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை.

தடா, பொடா வழக்குகளை நடுநிலையாக மதிப்பீடு செய்ததில் தெரிய வருவது என்னவெனில் இத்தகைய கடும் ச்ரத்துகள் இருந்தும் இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை கோர்ட் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கவில்லை. இவ்வழக்குகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் அப்பாவிகள். எனவே இத்தகைய தீவிரவாத சட்டங்கள் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரணிக அரசாங்கத்திலும் காவல்துறையிலும் ஊடுறுவியுள்ள சாதிய மதவாத ஃபாசிஸ சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாய தலைவர்களின் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துகிறது.


இச்சட்டத் திருத்தத்தை பா.ஜ.க. அரவேற்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கெதிரணிக பயன்படுத்துவதற்காக இத்தகைய கருப்பு சட்டங்களை கொண்டு அரவேண்டும் என்றஅவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடிபணிந்து விட்டதற்கானகாரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

உள்நாட்டு தீவிரவாத கொள்கையான இந்துத்துவாவை கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக நிரணிகரித்ததிலிருந்து காங்கிரடி கட்சியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும்பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.எனவே பா.ஜ.க.வின் இந்துத்துவ திட்டத்தை தழுவும் எந்த முயற்சியும் எதிர்வரும் பாரணிளுமன்றதேர்தலில் ஆளுங்கட்சிக்கு உதவாது. நமது அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளபடி மும்பை தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத குழுக்கள்பாகிஸ்தானை அடித்தளமாகக் கொண்டு இயங்குபவை அதை பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டுள்ளது.


குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தி தண்டிக்க பாகிஸ்தான் மீது சர்வதேச மற்றும் இரணிச்யத்துறை நிர்பந்தங்களை நமது அரசாங்கம் கொடுத்து சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மும்பை தீவிரவாத செயல்பாடுகளில் இந்தியாவில் உள்ள எந்த தனிநபரோ குழுவோ இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை. எனவே மும்பை தீவிரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி கருப்பு சட்டங்களை மக்கள் மீது திணிப்பதை நியாயப்படுத்த முடியாது. காவலர்கள், பாதுகாப்பு மற்றும் உளவுநிறுவனங்களில் குறைபாடுகள் இருப்பதால் அதைச் சரிசெய்து மேம்படுத்துவதில்தான் உண்மையான நிவாரணம் உள்ளது.

இதற்காக தேசிய புலனாய்வு நிறுவனம் அமைப்பது நல்ல முயற்சியாக கருத முடியாது. இந்த யோசனை மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தலையிட மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசை விட கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதால் இது நமது கூட்டாட்சி தத்துவத்திற்கே (எதிரணிக) அமை
யும்.பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கேமரணிவில் நடைபெறும் வழக்கு விசாரனை வெளிப்படையான நேர்மையான விசாரனை முறையாக அமையாது.

எனவே நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்தக் குடிமக்களையே அச்சுறுத்தி பீதிவயப்படுத்தும் கருப்புச் சட்டங்களை கொண்டுவரத்துடிக்கும் கட்சிகளாக மாறாமல் அந்நிய அடக்குமுறைகள் தலையீடுகளுக்கெதிரணிக நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இவண்,
இ.எம். அப்துர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

19.12.2008

Sunday, December 14, 2008

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்


டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர் முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர் திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.


அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.

அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.

ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

Saturday, November 08, 2008

முகவையில் PFI அரசியல் மாநாடு அறிமுக கருத்தரங்கம்

மேடையில் இடமிருந்து வலக்கறிஞர் யூசுஃப், சகோ. செய்யது சாஹிப், சகோ. ஜின்னா

முகவை, நவம்பர் 08, இன்று இராமநாதபுரம் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பல்லக்கிபிளாசா ஈ.எம். ஃபாருக் ஆடிட்டோரியத்தில் எம்.என்.பி அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேரள மாநிலம் கோலிக்கோட்டில் நடக்க இருக்கும் PFI தேசிய அரசியல் மாநாட்டின் அறிமுக மற்றும் பிரச்சார நிகழச்சியாக முகவை மாவட்ட எம்.என்.பி யினரால் உள்ளரங்க கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறிவு ஜீவிகளும், முக்கிய அரசியல் பிரமுகர்களும், சமூக பிரமுகர்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயளாலர் சகோ. E.M. அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்க உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க இயலாத காரனங்களாள் அவர் வராத நிலையில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்கள் வந்திருந்து 1 மனி நேரத்திற்கும் அதிகமாக சர்வதேச அரசியலில் இஸ்லாமியர்கள் எப்படி புறக்கனிக்கப்பட்டுள்ளார்கள், தேசிய அரசியலில் இஸ்லாமியர்கள் எவ்வாறு அந்நியப்படுத்தப்பட்டுள்ளார்கள், பிராந்திய அரசியலிலும் நாம் எவ்வாறு புறந்தள்ளப்பட்டுள்ளோம் என்பதை பலவாறாக விளக்கியவர்கள்., இதற்கு ஒரே தீர்வு இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதுதான் என்றும், பல அமைப்புகளாகவும், இயக்கங்களாகவும் பிரிந்து கிடக்கும் நம் சமுதாயத்தை ஒருங்கினைத்து நேரடி தேசிய அரசியலில் எவ்வாறு ஈடபடுவது என்பது குறித்து கருத்தாய்வு செய்வதற்காக கேரளாவில் மூன்று நாள் மாநாடு நடக்க இருப்பதாகவும் இதன் மூலம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நேரடி அரசியலில் இரங்கும் என்றும் அறிவித்தார்கள். இதற்கு நீங்கள், நாங்கள் என்ற பேதம் இல்லாமல் நாம் என்ற ஒற்றுமையில் அனைவரும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

மனித நீதிப் பாசறையின் தலைவர் சகோ. முகம்மது அலி ஜின்னா அவர்கள் சகோ. செய்யது சாஹிபின் மலையாளத்தில் அமைந்த உரையை தமிழில் மொழி பெயர்த்து சொன்னார். இன்னும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மறைமுக அரசியல் அல்லாது நேரடி அரசியலில் களமிரங்கும் என்றும் அதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பொது அரசியல் கட்சியாக மாறும் என்றும், இது முஸ்லிம்கள் ஆதிக்கமிக்க தலைமையுடன் அனைத்து தரப்பு மக்களையும் கொண்ட தேர்தலில் பங்கேற்க கூடிய பொது அரசியல் கட்சியாக ஆகும் என்றும் இதன் மூலம் இஸ்லாமியர்கள் அரசியல் சக்தியை பெறலாம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்கள்.

நிகழ்ச்சியை மனித நீதிப் பாசறையின் முகவை மாவட்ட தலைவர் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நிகழச்சியில் மனித நீதிப் பாசறையின் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் யூசுஃப் அவர்கள் உட்பட பலா கலந்து கொண்டனர். பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்களின் விளக்க உரையின் பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது வந்திருந்த மக்கள் தங்களது சந்தேகங்களையு் ஆலோசனைகளையும் எழுப்பினர் பின்னர் அவற்றிற்கு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக குழு செயளாலர் சகோ. செய்யது சாஹிப் அவர்களும், மனித நீதிப் பாசறையின் தலைவர் சகோ. முகம்மது அலி ஜின்னா அவர்களும் பதில் அளித்தார்கள். மனித நீதிப் பாசறையின் தொண்டர்கள் நிகழச்சி நடந்த அரங்கின் வெளியே நின்று வந்தவர்களை அழகான முறையில் வரவேற்று அரங்கத்தினும் அமறச் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கூடிய தேனீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகவை மாவட்ட மனித நீதிப் பாசறை அமைப்பினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tuesday, November 04, 2008

நேரடி அரசியல் - PFI ஆய்வரங்கம் முகவையில்

அன்பின் சகேரர்களே,
முகவை மாவட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சார்பாக "நேரடி அரசியல்" என்ற தலைப்பின் கீழ் ஆய்வரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வரங்கில் சட்டமியற்றும் சபைகளில் இந்திய முஸ்லிம்களின் பங்கு பற்றியும் இன்னும் அவர்களின் சமூக அரசியல் நிலை பற்றியும் ஆராயப் பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதான ஆய்வுரை வழங்க உள்ளார் :
சகோ. E.M. அப்துர் ரஹ்மான் அவர்கள்
பொதுச் செயளாலர், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா
நாள் : 8ம் தேதி நவம்பர் மாதம் 2008
நேரம் : சரியாக மாலை 6.30 மணியளவில்
இடம் : E.M. ஃபாரூக் ஆடிட்டோரியம் - பல் லக்கி பிளாசா, G.H. ரோடு, முகவை
ஒன்றுபட்டு வலிமை பெற அழைக்கிறது
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா
முகவை மாவட்டம்

Sunday, November 02, 2008

சென்னையில் PFI தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சார துவக்கவிழா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சார துவக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம்


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தேசிய அரசியல் மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளது. இதன் பிரச்சார துவக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியிலுள்ள தம்புச் செட்டித் தெருவில் நேற்று(2112008) நடைபெற்றது.

கூட்டத்திற்கு மனித நீதிப்பாசறையின் மாநிலத்தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் யாமுகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் தேசிய அரசியல் மாநாட்டின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் அவர் கூறியதாவது.

""இன்று சென்னையிலே நடந்து கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய அரசியல் மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழா, இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏன் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது என பலருக்கும் சந்தேகம் வரும். நாம் சுதந்திரமடைந்த 62 ஆண்டுகள் கழிந்து விட்டன. சுதந்திரப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் பங்கெடுத்த நாம் சுதந்திரத்திற்குப் பின் நடந்த தேசப்பிரிவினையின் காரணமாக நிராதரவாக நின்று கொண்டிருக்கிறோம்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில் தலித் முஸ்லிம் ஒற்றுமை உயர்ந்து வந்தது. தலித் மக்கள் அம்பேத்கர் தலைமையிலும் முஸ்லிம்கள் முஹம்மது அலி ஜின்னா தலைமையிலும் ஒன்று திரண்டார்கள்.

இந்த தலித் முஸ்லிம் ஒற்றுமையை ஒரு மிகப்பெரிய விபத்தாகக் கண்ட உயர் ஜாதி பார்ப்பனர்கள் ஆட்சியதிகாரம் தங்கள் கைகளை விட்டுச் சென்று விடுமோ என்று அஞ்சினார்கள்.


இந்த ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உயர்ஜாதி பார்ப்பனர்கள் உருவாக்கிய திட்டமே தேசப்பிரிவினை. இத்திட்டத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். தேசப் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்களின் தலைமையும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. முஸ்லிம்களின் பொருளாதாரமும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது.
ஆனால் இந்திய முஸ்லிம்கள் இங்குள்ள ஆட்சியாளர்களால் நிர்க்கதியாக்கப்பட்டார்கள். ஆதரவற்று இங்கிருந்த முஸ்லிம்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அது, காங்கிரஸைப் பின்பற்றிச் செல்வது.
இதனடிப்படையில் இந்த முஸ்லிம்கள் உருது மொழி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என சிறு சிறு தேவைகளை மட்டுமே முன் வைத்தனர்.
இதன் பிறகு 30 வருடங்கள் கழித்து மண்டல் கமிஷன் வந்தது. தலித்கள், யாதவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் முன்னேற்றப்பட வேண்டிய சமூகத்தினர் என அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் பிறகு சச்சார் கமிஷன் வந்தது. முஸ்லிகள் தலித்களை விட பின்னே சென்றுள்ளனர் என அறிக்கை சமம்பித்தது. மண்டல் கமிஷனுக்கும் சச்சார் கமிஷனுக்கும் இடைப்பட்ட வருடங்களில் எந்த முன்னேற்றமும் முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை.

ஆனால் மண்டல் கமிஷனில் கூறப்பட்ட மற்ற இரண்டு சமூகத்தாரான தலித்களும், யாதவர்களும் மாயாவதி, லல்லு பிரசாத் யாதவ் என இன்று இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறியுள்ளனர்.ஆனால் முஸ்லிம்களின் நிலையோ இன்று மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.


எங்கு, என்ன நடந்தாலும் விசாரணை முஸ்லிம்களை நோக்கியே சுற்றிச் சுற்றி வருகிறது. முஸ்லிம்கள் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம் கடந்த 60 வருடங்களாக அவர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதுதான். இரண்டாந்தரக் குடிமக்களைப் போல் முஸ்லிம்கள் நடத்தப்படுகிறார்கள். தேசப்பற்றில்லாதவர்கள், நாட்டுப் பற்றில்லாதவர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

தேசத் துரோகிகள் என முஸ்லிம்கள் பரிகசிக்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் நாம் நேசிக்கும் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை. கூமர் நாராயணன் முதல் "ரா'வின் ரபீந்தர் சிங்வரை யாரும் முஸ்லிம்கள் இல்லை.

இப்படி நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு மத்தியில் நாம் நமது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா? பாகிஸ்தானிலிருந்து இங்கு குடியேறி இந்துக்கள் எனவும், முஸ்லிம்கள் எனவும் கிறிஸ்தவர்கள் எனவும் மக்களை மத ரீதியாகப் பிரித்து பிளவுபடுத்தி நாட்டையே ரத்தக் களரியாக்கும் ஃபாசிஸ்டுகளுக்கு முன், சுதந்திப் போராட்ட யுத்த களத்தில் தலை வெட்டி வீழ்த்தப்பட்ட வீர தியாகிகளின் வாரிசுகள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டுமா?

அந்த காலம் கடந்து விட்டது எனதருமை சகோதரர்களே! பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற பீதியை ஏற்படுத்தி தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களை வளைக்கவே, முஸ்லிம்களின் வாக்கு வங்கி சிதறியது. முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இல்லாமலாக்கும் முயற்சியே இது.
இதனை மாற்றி முஸ்லிம்கள் சுயமாக சொத்தக் காலில் நின்று முன்னேறிச் செல்ல வேண்டும். யார் வரக் கூடாது என்று இது நாள் வரை எதிர்மறை (Negative Politics) அரசியலைக் கடைப்பிடித்து வந்த முஸ்லிம்கள் இனி தாங்கள் ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற நேர்மறை (Positive Politics) அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுவதற்காகவே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.''

மேலும் கூட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் இ.எம்.அப்துர்ரஹ்மான், கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிட்டியின் மாநில தலைவர் டாக்டர் மக்பூப் ஷரீஃப், மூத்த வழக்கறிஞர் பவானி பா. மோகன், தமிழக முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுத்தீன், முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செயலாளர் முகமது ஹனீஃபா, எம்.என்.பி.யின் மாநில துணை தலைவர் ஷேக் முகமது தெஹ்லான் பாகவி மற்றும் மௌலவி முகமது மன்சூர் காசிஃபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய அரசியல் மாநாட்டுக்கு ஆதரவு தந்தனர். இறுதியில் எம்.என்.பி.யின் மாநிலச் செயலாளர் ஃபக்ருதீன் நன்றியுரையாற்றினார்.


செய்திகள் :
ஏ.முகமது யூசுஃப்,
மீடியா கன்வீனர், மனித நீதிப் பாசறை.

Friday, October 31, 2008

MNP - PFI தேசிய அரசியல் மாநாடு

தேசிய அரசியல் மாநாடு
சென்னையில் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் இ.எம். அப்துர் ரஹ்மான் பேட்டி


எதிர்வரும் 13, 14, 15 பிப்ரவரி 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நடத்தவுள்ளது. இதன் நோக்கம் ""ஆக்கப்பூர்வமான நேரடி அரசியலின் மூலம் முழுமையாக எல்லாத் துறையிலும் சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும்'' என்பதுதான்.
பலமான அரசியலமைப்பு மற்றும் சட்ட அடித்தளத்தைக் கொண்ட மிகச்சிறந்த ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மற்றவர்கள் மீது ஆட்சி செய்யும் என்று பொருள் கொள்ள முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்துடன் எல்லாக் குடிமக்களுக்கும் சமநீதி வழங்கக் கூடியதுதான் நமது அரசியல் அமைப்பு.

கடந்த அறுபது ஆண்டுகளாக பெரும் தொழில் நிறுவனக் குழுமங்கள் மற்றும் பாரம்பரிய உயர்சாதியினணிரக் கொண்டு ஆளும் அதிகணிர வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆளும் வர்க்கம் ஜனநாயகத்திலுள்ள பல்வேறு துறைகளை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு கீழுள்ள (அடிமைகள் போல கிடக்கும்) மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து தங்களுடைய ஆளும் மேல்ஜாதி வர்க்கத்திற்காக மட்டும் சேவகம் புரிந்து வருகின்றது.

இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு பலியாகக் கூடியவர்கள் ஏழைகள், கிரணிமவாசிகள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள்,சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் சோஷலிசம் நமது அரசியல் கட்சிகளின் கோஷமாக இருந்தது. இன்று அது காணாமல் போனது.

மேற்கத்திய உலகில் சிறிது சிறிதாக நொறுங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், வளர்ச்சி என்ற போர்வையில் நம்மிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. விவசாய உற்பத்தி, வறுமை ஒழிப்பு, சம பங்கீடு போன்ற அடிப்படை பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகிறது.

ஜனநாயக வழிமுறையின் மூலமே இந்துத்துவ ஃபாசிஸம் நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு நிர்வாகம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒடுக்குகிறோம் என்ற பெயரில் பல முஸ்லிம்களை சட்டவிரோத கஸ்டடியில் விசாரணை இல்லாமலும், பிணையில் விடுதலை செய்யாமலும் போலி என்கவுண்டர் மூலமாகவும் குறி வைத்து வருகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பின் ஒரு சில பிற்பட்ட வகுப்பினணிரச் சேர்ந்த சாதியினர் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தேர்தல் அரசியலில் முன்னேற்றமடைந்துள்ளனர். எனினும் மதவாதிகள், ஆதிக்க வாதிகள் சட்டமியற்றும் சபைகளில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். மற்ற சமூக மதப் பிரிவிக்ணிர ஒப்பிடும் போது முஸ்லிம்கள் என்ற இந்த வகுப்பினர் மட்டும் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இந்த பின்னடைவிற்கான காரணம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்தல் மற்றும் ஹிந்துக்களுடைய ஓட்டுக்கள் கிடைக்காமல் எதிர்ப்புக்குள்ளாகலாம் என்று கருதி அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தத் தயங்குகின்றன. இந்தச் சூழலில், காலங்காலமாக ஓரங்கட்டப்பட்ட சமுதாயம் தங்களுடைய உடனடி (உள்ளூர்) எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் தங்களது ஆதரவு மாற்றும் போக்கைக் கைவிட வேண்டும். இந்த அணுகுமுறை, நாட்டின் கொள்கை முடிவுகளில் முடிவெடுக்கும்போது தங்களது உரிமைகளை தக்க வைக்கவும் (தங்களிடமுள்ள எல்லா வகையான) வளங்களையும் முறையாகப் பங்கீடு செய்து பயன்படுத்துவதிலும் பயனளிக்கிறது.

இந்த பிற்படுத்தப்பட்ட சக்திகளை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தி தங்களுக்குரிய அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் இதுவணிர கொடுத்து வந்த நிர்ப்பந்த அரசியல் (Pressure Group Politics) அவர்களின் அரசியல் வெறுமைக்கு தீர்வாகாது. ஓரங்கட்டப்பட்ட வகுப்பினர் அரசியல் சக்தியும், போதிய பிரதிநிதித்துவமும் பெற தேவையான வழிமுறைகளைப் பற்றி விவாதித்து தேவையான தீர்வுகளை செயல்படுத்த இருக்கும் நிகழ்ச்சிதான் தேசிய அரசியல் மாநாடு.

முதல் இரண்டு நாட்கள், நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்கள், அறிஞர்கள் மேற்கூரிய கருப் பொருளில் பல்வேறு கோணத்தில் விவாதிப்பர். ""அரசியலில் சக்தி பெறுதல்: மாற்று வழிக்கான தேடல்'' ""தீவிரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறும்.

இதே கருத்தை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னையில் நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூ பக்கர் அவர்கள் பொதுக்கூட்டம் வாயிலாக பிரச்சாரத்தைத் துவக்கி வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மனித நீதிப் பாசறையின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஷேக்
முஹம்மது தெஹ்லான் பாகவி, கே.எஃப்.டி.யின் தலைவர் டாக்டர் மஹபூப் ஷரீஃப், மூத்த வழக்றிஞர் பவானி. பா. மோகன், வழக்கறிஞர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன் Ex. M.L.A, மௌலானா மன்சூர் காஷிஃபி, முஸ்லிம் தொண்டு இயக்க செயலாளர் முஹம்மது ஹனீஃபா ஆகியோர் பொதுக் கூட்டத்தில் உணிரயாற்றுகின்றனர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர்
இ.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். பேட்டியின் போது எம்.என்.பி.யின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயலாளர் ஃபக்ருத்தீன், செயற்குழு உறுப்பினர்கள் செய்யது இப்றாஹீம் மற்றும் யூஸுஃப் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : இ.எம். அப்துர் ரஹ்மான்
பொதுச் செயளாலர் - PFI

Saturday, October 18, 2008

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

திறப்பு விழாவில் உரையாற்றும் PFI தலைவர் அபுபக்கர் சாஹிப் அருகில் தலைவர்கள்

வரும் 2009 பிப்ரவரி 13,14,15 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் காலிகட்டில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நடத்த திட்டமிட்டுள்ள தேசிய அரசியல் மாநாட்டின் ஒருங்கினைப்பு கமிட்டி அலுவலக திறப்பு விழா இன்று பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. அபுபக்கர் சாஹிப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நடக்கவிருக்கும் இம்மாநாடு பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை இனத்தவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக பெரும் மாற்றத்திற்குள்ளாக்கி அவர்களை அரசியல் ரீதியாக வலிமை மிக்கவர்களாக மாற்றும். இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய ஆளும் வர்க்கம் இன்று முதலாலித்துவத்தையும், வகுப்புவாத்தையும் பாதுகாக் கூடியதாக மாறிவிட்டது என்றும் நாட்டை ஆளும் மத்திய அரசு சர்வதேச விலை இறக்கத்திற்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலைவாசியை குறைக்கவில்லை என்றும், முஸ்லிம்களின் பெயரில் தீவிரவாதத்தை விதைத்துவரும் சங்பரிவார சக்திகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ள வில்லை என்றும் தெறிவித்தார்.

நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் E.M அப்துல் ரஹ்மான், KFD மாநிலத் தலைவர் டாக்டர் மஹ்பூப் சரீப், தமிழக எம்என்பி தலைவர் முகம்மது அலி ஜின்னா , என்டிஎஃப் மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மான் பாக்கவி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டு ஒருங்கினைப்பு கமிட்டியின் தலைவர் கே.எம். சரீப் அவர்கள வரவேற்புரை நிகழ்த்தினார், திரு.OMA சலாம் நன்றியுரை வழங்கினார்.

Monday, October 06, 2008

சமுதாய செய்திகள்

கோவை MNP இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 21.09.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை போத்தனூர் ரோட்டில் உள்ள சங்கமம் திருமன மன்டபத்தில் மனித நீதிப் பாசறையின் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எம்.என்.பி மாவட்ட செய்லாளர் திரு. M.Y அப்பாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். தேனியில் இருக்கும் அறிவகம் முதல்வர் D.செய்யது இபுறாஹிம் உஸ்மானி எம்.என்.பி மாவட்ட தலைவர் A.S. இஸ்மாயில் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியாக் எம்.என்.பி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் A.A. அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் விளையாட்டு போட்டிகள்


கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் தினத்தை முன்னிட்டு யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF- UNITED STUDENTS FRONT) சார்பாக விளையாட்டு நிகழச்சிகள் நடைபெற்றன. இதில் கபடி, வாலிபால் போன்ற போட்டிகள் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மங்களம்பேட்டை ஆயிஸா (ரலி) பென்கள் கல்லூரி செக்கரட்டரி அபீருதீன் மன்பஈ அவர்கள், மங்களம்பேட்டை காவல்துறை அதிகாரி திரு. சரவனகுமரன் அவர்கள், MNP நகர் தலைவர் அபுல் ஹஸன் அவர்கள், அம்பயர் திரு. அபுசாலிஹ் , நகர் தமுமுக நிர்வாகி திரு. ஹஸன் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

அணுசக்தி ஓப்பந்தம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியில் தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) இந்திய நலன்களுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் மத்திய அரசின் அனுசக்தி ஓப்பந்தத்தை கண்டித்து மபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. MNP விழுப்புரம் மாவட்ட தலைவர் திரு. ரஃபீக் அவர்கள், MNP கல்லக்குறிச்சி மற்றும; சங்கராபுரம் மன்டல தலைவர் திரு. சித்திக் , மங்களம்பேட்டை ஆயிஸா (ரலி) பென்கள் கல்லூரி செக்கரட்டரி அபீருதீன் மன்பஈ அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

IIC தாவா மற்றும் இஃப்தார்

இஸ்லாமிய தகவல் மையம் (IIC) சார்பாக விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியில் தாவா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழச்சியில் சமதியா பள்ளி இமாம் மெளலவி இபுறாஹிம் அவர்கள், , MNP கல்லக்குறிச்சி மற்றும; சங்கராபுரம் மன்டல தலைவர் திரு. சித்திக் அவர்கள், மெளலவி ஷம்சுல் இக்பால் அவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெறற்னர்.

செய்திகள் : திரு. அபீருதீன் மன்பஈ அவர்கள்

Saturday, September 13, 2008

விழுப்புரத்தில் PFI பீகார் வெள்ள நிவாரன நிதி திரட்டினர்

பீகாரில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கி உயிர் உடமைகளை இழந்த இந்திய குடிமக்களின் நிவாரனததிற்காக தமி்ழ்நாடு, விழுப்புரத்தில் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் உண்டியல் ஏந்தி நிவாரன நிதி திரட்டினர்.

கடை வீதியில்....

பள்ளிவாயில் முன்பாக

Wednesday, August 27, 2008

சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி - ஜமாத்தார்கள், அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி

சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி
முஸ்லிம் சமூகத்தின் வெற்றி!
ஜமாத்தார்கள், அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி


நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம். 15ம் நூற்றாண்டிலிருந்து ஏறத்தாழ 400 வருடங்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் முஸ்லிம்கள்.1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள்.

சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்டு அந்நியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த தேசத்தின் நச்சுக் கிருமிகளாகவும் புற்று நோயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் நீண்ட நெடிய சதிச் செயல்களின் ஒரு பகுதிதான் இந்த அந்நியமயமாக்கல் திட்டம் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.போராடிப் பெற்ற சுதந்திரத்தில் முஸ்லிம்களின் உரிமையை பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும், முஸ்லிம்களின் கண்ணியத்தை இந்த தேசத்திலே உயர்த்திப் பிடிக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் 15ம் நாள் மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாம் திட்டமிட்டோம்.

அணிவகுப்பின் மூலம் முஸ்லிம்களுடைய சக்தி வெளிப்பட்டால் எங்கே முஸ்லிம் சமூகம் தைரியமும் தன்னம்பிக்கையும் வரப்பெற்றவர்களாக நெஞ்சை நிமிர்த்தி இந்த தேசத்தின் வீதிகளிலே வலம் வரத் துவங்கி விடுவார்களோ என அஞ்சிய சங்பரிவார ஃபாசிஸ்டுகள் முஸ்லிம்களின் இந்த அணிவகுப்பை எப்படியேனும் தடுத்து நிறுத்திட வேண்டும் என சதி செய்யத் துவங்கினர். மேலும் முஸ்லிம்களை அந்நியர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்கும் சதித் திட்டம் எங்கே நிறைவேறாது போய் விடுமோ என்ற அச்சத்தில் ஒப்பாரி வைத்து கூக்குரலிட்டனர். உளவுத்துறையும் காவல்துறையும் சங்பரிவார்களுடன் இணைந்து நின்று சொல்லொண்ணா இடையூறுகளை நமக்கு ஏற்படுத்தியது. மேலும் நமக்கு மைதானம் தந்த பள்ளிக்கூட நிர்வாகத்தை மிரட்டி மைதானத்தை அனுமதியை ரத்து செய்ய வைத்தனர். அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்ட மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்களை கைது செய்து பொய் வழக்கு போட்டனர். இறுதியில் சங்பரிவார்களின் கோரிக்கையை ஏற்று நமது அணிவகுப்பிற்கு தடை விதித்தனர்.

இவ்வாறு சங்பரிவார்களும் காவல்துறையும் உளவுத்துறையும் ஓரணியில் நின்று சதி செய்த போது, இதற்கெதிராக கிளர்ந்தெழுந்த முஸ்லிம் ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடின. சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி தந்தே ஆக வேண்டும் என ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஜமாஅத் லெட்டர்களும், தந்திகளும் ஃபேக்ஸ்களும், இயக்கங்களின் கடிதங்களும் தமிழக முதல்வரின் அறையை நிரப்பின.ஆனாலும் தமிழக அரசு முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளுக்கும் உரிமைக் குரலுக்கும் செவிசாய்க்கவில்லை.


இறுதியாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினோம். அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் உங்கள் எல்லோருடைய துஆ பரக்கத்தாலும் அணிவகுப்பிற்கு அனுமதி கிடைத்தது.நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தின அணிவகுப்பை திட்டமிட்டபடி செவ்வையாக நடத்தினோம்.முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வெளிப்படுத்தினோம். சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி என்பது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நிகரற்ற ஆற்றலுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வும், எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தந்த ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்ததால் நமது கண்ணெதிரே முஸ்லிம் சமூகத்தின் வெற்றியைக் கண்டோம். சூது மதியாளர்களின் சூழ்ச்சிகள் தவிடு பொடியானதைக் கண்டோம். முஸ்லிம் சமூகத்தின் இஸ்ஸத் கண்ணியம் உயர்ந்து நின்றதைக் கண்டோம். ""கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது.'' அல்குர்ஆன் 63 : 8


சுதந்திர தின அணிவகுப்பை வெற்றிபெறச் செய்து இந்த நிலையை நம் சமூகம் எட்டுவதற்கு பாடுபட்ட ஜமாத்தார்கள், இயக்கங்கள், நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனித நீதிப் பாசறையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நாம் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பின் மூலம் அகில இந்திய ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம் உயர்த்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பின் மூலம் சங்பரிவார சக்திகளின் கனவுகளும் கலைக்கப்பட்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது மட்டுமின்றி எல்லா நிலையிலும் இதே போன்று நாம் ஒன்றிணைந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.


இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை(அருட்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகி விட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் நீங்கள் நேர் வழி பெரும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்துகளை வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 3:103


திருமறையும் திருத்தூதரும் காட்டிய வழியில் ஒன்றிணைவோம்! வெற்றி பெறுவோம்!!



இப்படிக்கு,
அ. யா முஹைதீன்,

மாநில பொதுச்செயலாளர்,
மொபைல்: 98406 97079

Saturday, August 23, 2008

கலைஞர் அரசே சமநீதி வழங்கு!! - MNP கருத்தரங்கம் (24.08.2008) திரன்டு வாரீர்...

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
சிறைக்கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும்...
மாபெரும் கருத்தரங்கம்

"ஒரு சமூகத்தின் நாகரீகத்தின் தரத்தை அதன் சிறைச்சாலைகளில் நுழைந்து பார்ப்பதன் மூலம் மதிப்பிட முடியும்" - ஃபியோதர் தஸ்த்தயேவ்ஸ்கி, நூல் : HOUSE OF DEAD


எதிர்வரும் செப்டம்பர் 15 புரரிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசு தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகளில் எட்டான்டு காலம் முழுமையாக தண்டனை கழித்தவர்களை விடுதலை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்த செய்தியை அறிந்தவுடன் முஸ்லிம் தாய்மார்கள் கடந்த 10 ஆண்டு காலமாக சிறையில் தவிக்குமு் தன் கணவனை அரசு விடுதலை செய்து விடும் என்று பூரிப்புடன் எதிர் பார்த்து கொண்டிருந்தனர். ஆனூல் வந்த செய்தியோ முஸ்லிம்கள் காலம் முழுவதும் கவலையில் துவள வேண்டும் என்ற மனூநிலையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம் தாய்மார்க் / சகோதரிகளிடம் அச்செய்தி வந்து வீழந்தது. ஆம் 10ஆண்டுகள் கழிந்தாலும் முஸ்லிம்களுக்கு விடுதலை இல்லை என்ற செய்தி, கண்ணீர் மல்க கதறி துடித்து துவண்டு வீழந்தார்கள் நம் சகோதரிகள்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 15, அண்ணா பிற்நத நாள் அன்று சுமார் 118 சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும் முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் கழித்த ஜாகிர் உசேன், அபுதாஹிர், அப்துல் மஜீத், சபூர் ரஹ்மான் ஆகியோர்களை விடுதலை செய்யவில்லை. அத்துயரத்தின் மன அழுத்தத்தால் மூன்று பென் குழந்தைகளின் தந்தையாகிய சபூர் ரஹ்மான் கடந்த அக்டோபர் 31, 2007ல் சிறைக் கொட்டடியிலேயே மரணமடைந்தார்.

மறுபுறமோ இவ்வரசு வழக்கம்போல் பாரபட்சத்துடனும், அநீதியுடனும் இவ்விசயத்தில் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதே வகுப்புவாத குற்றததில் கோவையில் குண்டு வெடிப்புக்களும் கலவரங்களும் நிகழ்வதற்கு முக்கிய காரனமான 1997 நவம்பரில் 19 முஸ்லி்ம்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தன்டனை சட்டத்தின் முக்கிய பிரிவான (302, 147, 427, 435, 435, 436, 370, 379) போன்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளில் ஒருவர் கூட இன்று சிறையில் இல்லை. இதுதான் சமநீதி???

அரசு ஆணை 1762/87 ன்படி வரும் 15.09.2008 அன்று பொது மன்னிப்பிற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் எட்டு ஆண்டுகள் வெஞ:சிறையில் கழித்த பல முஸ்லிம் கைதிகள் விடுதலைக்கு தகுதியாக உள்ளனர். சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கலைஞர் அரசு இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாரபட்சமில்லாத சாதி, மதம் பாராத சமநீதி அனைவருக்கும் வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கோரிக்கை ஆகும்.


உங்கள் குரல்களை பதிவு செய்திட..ஓங்கி முழங்கிட அணிதிரண்டு வாரீர்!!!

இன்சா அல்லாஹ் ...

நாள் : 24.08.2008 ஞாயிறு
நேரம் : மாலை 5.45 மணிக்கு
இடம் : சங்கமம் திருமண மண்டபம், போத்தனூர் ரோடு, குறிச்சிப்பிரிவு.

அழைக்கின்றது மனித நீதிப் பாசறை (MNP)

நிகழ்ச்சி நிரல்

தலைமை
M. முகம்மது அலி ஜின்னா MA., JMC.,
மாநிலத்தலைவர், மனித நீதிப் பாசறை

தொகுப்புரை
A.S. இஸ்மாயில்
மாவட்ட தலைவர், மனித நீதிப் பாசறை

வரவேற்புரை
N. முகம்மது ஷாஜஹான் Bsc. B.L

மாநில செயற்குழு உறுப்பினர், MNP

முன்னிலை
வழக்கறிஞர் M. ரஹ்மத்துல்லாஹ் BA.,BL

மாநில செயலாளர் NCHRO

வழக்கறிஞர் A. நவ்ஃபல் Bsc., BL.,

சிறப்பு விருந்தினர்கள்
E.M. அப்துர் ரஹ்மான்
தேசிய பொதுச்செயலாளர், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)

H.S.J இனாயத்துல்லாஹ் M.A., B.L
மாநிலத் தலைவர், இந்திய தேசிய லீக்

அ.மார்க்ஸ்
துணைத் தலைவர்
அரசியல் கைதிகளை விதடுதலை செய்வதற்கான குழு

மெளலவி A.E.M அப்துர் ரஹ்மான்
மாநிலத் தலைவர், ஜமாஅத்துல் உலமா

அ. உமர் பாரூக்
நிறுவனத் தலைவர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

ம.தே. சிந்தனை செல்வன்
பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்

ப.பா. மோகன்
மூத்த வழக்கறிஞர்

A.K. முகம்மது ஹனீஃபா
பொதுச் செயலாளர்,
தலித், இஸ்லாமிய, கிறிஸ்த்தவ கூட்டமைப்பு

கோட்டை தங்கப்பா
சமூக நல ஆர்வலர்

நன்றியுரை
M.Y. அப்பாஸ்
மாவட்ட செயலாளர், MNP
Design by Abdul Munir Visit Original Post Islamic2 Template